உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
உறவுகள் மேம்பட
• கானகத்தின் நடிவே பெரும் பள்ளம் நோண்டி யாரும் காணாத வண்ணம் வாழுங்கள்.
• உதவி தேவைப்படின் சிறுத்தை குட்டிகளை நாடுங்கள்.
• தப்பி தவறி கூட உறவுகள் என்று தேடி அலையாதீர்கள்.
• பண தேவை ஏதேனும் வந்தால் அதை கூறு போடுங்கள் ஆசைக்கா இல்லை மருத்துவ தேவையா என....ஆசைக்காக என்றால் நீயே பெரும் பாறையின் இடையே சிக்கி மாண்டுவிடு.
• மருத்துவ தேவை என்றால் பயபடாதே மனதை இயற்கையோடு இணைய முற்படு நோயெல்லாம் காணாமல் போகும், போகவில்லை என்றாலும் போராடு மரணம் வரை.
• நீ செல்வ செழிப்போடு நன்றாக இருக்கிறாய் என்றால் உறவுகளை தேடி தேடி அவர்கள் தேவையை பூர்த்தி செய். வள்ளுவன் வாக்குப் போல.
• உறவுகள் மேம்பட அவர்களுக்கு உதவி செய் உறுதுணையாய் இறு அவர்கள் இன்ப துன்பத்தில், ஆனால் அதனை அவர்களிடம் எதிர்பார்காதே.
• உறவுகள் மேம்பட உன்னிடம் இருக்கும் எல்லாம் அவர்களுக்கு கொடுத்து மகிழ், ஆனால் நீ அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்காதே.
• சட்டென பற்றி எறியும் தீக்குச்சியாய் வாழ்வை வாழ ஆசை, சில நொடி வெளிச்சம் தந்து அந்த வெளிச்சத்தில் மூலம் பிராமாண்ட பேரொளி ஏற்படுத்த, சில நொடி தாண்டி இருந்தாலும் அணைக்கப்படுவோம்.
• உன்னை நம்பி வாழ்வை நகர்த்து, இல்லை என்றால் காணாதா கடவுளிடம் ஒப்படைத்து விடு எல்லாம் சிறப்பாய் அமையும்
பேரோளியில் இருந்து நான்.
பிரதீஸ்

👍
ReplyDelete