உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
உன்னுடைய மூன்று பிள்ளைகளில் ஒன்று முப்பத்தாறு வருடங்களாக காவலாக நிற்க அதன் காலம் முடிந்து அது பிறவிக்கு செல்ல ஆயத்தமாகிறது அதன் தேவைகளை செவ்வனே செய்து வை அது உன் தலைமுறையை காக்கும்,
உன் மூத்த கணக்கு நிலையில்லாத புத்திக் கொண்டு திரியுது என்ற கவலை வேண்டாம் அவன் தான் உன்னை காக்கும் ரட்சகன் நாளை காலை நான் வரும் போது அரிசி பருப்பு சிறிது காய்ந்த வத்தல் எடுத்துக் கொடு
அதன் பின் உன் குல தெய்வ பூஜையை செய் தடை பட்டு கிடக்கும் மனை வேலைகள் விலகும் இப்படி சொன்னால் ரவி எனக்கு பயமாவே இருந்தது காலைல அவன் வருவான்னு பார்த்த வரவில்லை
அவன் எங்க தங்கியிருக்கான்னு கேட்டு சொல்லுடா காலைல ஒரு எட்டு பாத்துட்டு வருவோம் என்று பட படத்தப் படி கூறினாள் அம்மா
அம்மா அவன் சாம்பார் வைக்க கேட்டுருப்பான் வேறு வீட்டுல இதை விட அதிகமாக கிடைச்சிருக்கும் அதான் வரவில்லை விடுமா வந்தா பாத்துக்கலாம் என்றேன்
விளையாடாத டா ரவி எல்லாத்துலயும் அவன் எப்படி வீட்டு வேலை தடை பட்டிருக்கத சரியா சொன்னான் என்றாள் அம்மா,
வீடு கட்டுனா எல்லாரும் கடன் படுவது இயல்பு தானமா அதை சொல்லுறதுல என்ன இருக்கு என்றேன் !
சரி உன்னோட கடைசி தம்பிய பத்தி எப்படி தெரியும் அவனுக்கு என்றாள் அம்மா மறுபடி !
எனக்கு என்ன கூற என்று தெரியவில்லை சரி எதோ குருட்டு வாக்கில் சொல்லிருப்பாரு என்று சமாதன படுத்தவும் மனம் இல்லை சில வேளைகளில் சில வற்றை நம்பி தான் ஆக வேண்டும் நமக்கு அப்பாற் பட்ட சக்திகள் எத்தனையோ இருக்கத் தான் செய்கிறது என்ற நம்பிக்கை வேண்டும் நான் அமைதியாக நடந்தேன்
அம்மா மறுமுறையும் அவன் எங்க இருக்கான் என்று கேட்டு செல்லுடா என்றாள் அன்போடு

அனைத்து நாய்களும் அம்மா சமையலை ருசி பார்க்காத நாட்களே இல்லை மதிய நேரங்களில் வீட்டின் பின் புறம் கூட்டமாக நான்கு ஐந்து நாய்கள் எப்போதும் காவல் இருக்கும் அம்மா உணவுடன் வெளி வந்ததும் அவைகளின் ஆரவாரம் அற்புதம் தான் அதன் விளையாட்டும் கெஞ்சலும் கொஞ்சலுமாக பார்க்கவே ஆனந்தமாக இருக்கும்
அப்படியே வீடு வந்து சேர்ந்தோம்
தொடரும் ....

Comments
Post a Comment
நன்றி