இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம். அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும். ஒவ்வொர...
எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து. உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...
உழைப்பு உடல் சார்ந்தது மட்டுமல்ல, உழைப்பு மனம் சார்ந்தது உடலில் வலு இருந்த போதிலும் சில வேலைகளில் நாம் சோம்பலை உணர்ந்திருப்போம். என்று வேலை செய்ய வேண்டாம் என்று எண்ணியிருப்போம். அல்லது நன்றாக என்று நித்திரைக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஓங்கியிருக்கும். ஆனால் நாம் அதையும் செய்யாமல் அன்றைய நாளை வீணாக கழிப்போம். இந்த சோம்பல் எங்கிருந்து குடி கொள்கிறது உடல் அசதியை அந்த சோம்பல் எண்ணமே உருவாகியிருக்கும். மனம் அசட்டையாக இருக்கும். ஆரோக்கியம் முதலில் மனதிற்கு தான் தேவை. மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது எந்தவித சலிப்பும், சோம்பலும் உடலை தாக்காது. அப்படி மனம் உற்சாகம் ஆகவில்லையெனில் நன்றாக ஓய்வு தேவை என்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும். இருள் நிறைந்த அறையில் நல்ல தூக்கம். அதுவே உடலுக்கும் மனதிற்கும் போதுமானது. தேவையான அளவு உணவு அவ்வளவு தான். உழைக்கும் நேரம் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற தெளிவு நமக்கு என்றும் இருக்கவேண்டும். உணர்தல் என்பது மனிதனுக்கு இயற்கை கொடுத்த பெரிய வரம். மனிதனால் உள்ளும் புறமும் உணர முடியும் என்றாலும் அவன் எதன் பின்னோ அவன் ஓடிக் கொண்டிருக்கிறான்....
0 Comments
நன்றி