Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

காரணம் உண்டு


அகப்பட்டுக் கொண்ட பேருந்து நெரிசல், வாழ்வின் அடுத்தது என்ன என்று தெரியாத ஒரு விரக்தியான நிலை, நிம்மதி தராத வீடு, உறவுகள் மத்தியில் மவுனம் என அனைத்திற்கும் காரணம் உண்டு. 

அன்பின் ஓரவஞ்சனையை பார்த்திருக்கிறேன், கடும் சொற்கள் வீசி புன்னகைத்து செல்பவர்களையும் பார்த்திருக்கிறேன். எதுவும் நிலையில்லை என்று தெரிந்த பின்னும் அடிமையாகவே வாழ துணிந்தவனுக்கு எதற்கு வாழ்வு ? என்ற கேள்வியுடன் கடந்து செல்கிறேன். வாழ்வு என்பது சாபமாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது வரம் கிடைத்த வரத்தினால் சாபத்தை சரி செய்ய முயலுவதே இன்பம் அதனை தவிர வேறு ஏதும் இன்பமில்லை என்ற நிலைப் பாடு தான் என்னுடையது.

படாத அவமானங்கள் இல்லை. பட்டும் திருந்தவில்லை என்றான பின் என்ன செய்வது. அப்படி என்னிடம் பல பேர் கூறியுள்ளனர் இப்போது நானும் பலரை பார்த்து கூறுகிறேன் இருந்தும் என்னையும் இன்னமும் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

இத்தனை அனுபவங்களுக்கு பின்னும் நான் திருந்த வில்லையோ! இல்லையென்றால் இவ்வளவு தான பார்த்துக்கலாம் என்ற எண்ணமாக இருக்க முடியாது. சலிப்பின்றி தினமும் காவல் நிலையம் சென்று ஏதாவது வழக்கு என்மீது போடுங்கள் என்று கூற முடியுமா? நிச்சயம் முடியாது, பின் ஏனிந்த திருந்தாத ஜென்மங்கள் என்ற பெயர். 

எனக்கும் உண்மையில் தெரியவில்லை. நண்பன் ஒருவர் மீது சில வருடங்களுக்கு முன் ஊரில் ஒரு திருமண மான பெண்ணுடன் தொடர்பு என்ற புரளி கிளம்பியது. அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை அவனும். அனைவரும் உண்மையாக இருக்கலாமோ என்று எண்ணத் தொடங்கியது கடைசியில் உண்மை தான் என்ற நிலையில் தான் அனைவரும் அவர்களை நினைவில் கொண்டார்கள் 

அவனும் இளம் வயது என்பதனால் அப்போது இவன் என்ன சொன்ன என்ன என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்கள் கடந்தன அவனுக்கு பெண்பார்க்கும் படலம் வந்தது. ஊரில் மணமகனை பற்றி விசாரிக்க அனைவரும் அவனுடைய பழம் கதைகளை பெண் வீட்டார்களிடம் கூறி அனைத்து சம்பந்தங்களையும் தடை செய்ய அவன் மிகவும் மனம் வேதனை கொண்டான்.

செய்யாத தவறுக்கு ஏனோ இந்த தண்டனை என்று மிகவும் வருந்தினான். அவனுக்கு வேலை வெளியூர் என்பதினால் ஆண்டுக்கு ஒரு முறை வருவதே அதிகம் அதிலும் இந்த பெயர் அவனால் நண்பர்கள் வீட்டுக்கு கூட செல்ல முடியவில்லை. 

அவனை அவனே தாழ்வான நினைத்துக் கொள்கிறான். நம்மை தவறாக தான் அவர்கள் நினைத்திருப்பார்கள் என்று அவனே எண்ணிக் கொண்டு தனிமையை தேர்ந்தெடுத்துக் கொண்டான். எதற்கு கல்யாணம் ! அப்படி கல்யாணம் ஆகவில்லையென்றால் எனது தம்பி குழந்தைகள் உள்ளனர் அவர்களை நான் வளர்த்துக் கொள்வேன் என்ற அளவு அவனை சமூகத்தில் இருந்து விலக்கிக் கொண்டான். 

ஒருவன் செய்யாத தவறுக்கு அவன் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய அனுபவம் குறுகி விட்டது இந்த சிறிய அனுபத்திலே அவன் வாழ்கையை மாற்றிக் கொண்டான். 

இப்படி பலவாறான அனுபவங்கள் சேர்ந்து ஏதோ ஒரு முடிவை எடுக்கச் செய்கிறது அதன் பின் சில நாட்களிலோ அல்லது வருடங்களிலோ மனம் மாறத் துவங்குகிறது. அதன் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து இருக்கும் அவ்வளவு தான் தவிர. அவமானங்கள் அனுபவங்கள் ஓர் நாளும் முடியாது ஆனால் இப்படி நாம் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக பட்டை தீட்டப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான் இப்படி அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு. 

காரண காரியங்கள் இல்லாமல் உலகில் எதுவும் நடப்பது இல்லையென்று எனது குருநாதர் கூறுவார். அது உண்மையும் கூட. 




 




Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...