Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

வயதின் பராமரிப்பு செலவு

 கூட்டு குடும்பம் எல்லாம் தற்போது சீரியலில் பார்பதோடு சரி, இப்படி தான் இருந்திருப்பார்கள் போல என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தான் அதிகம். 

ஒரு குடும்ப பெண்ணின் அத்தியாவசியம் என்ன ? குடும்ப நலனை தவிர அவள் மனதில் ஏதும் இல்லை. பசி பட்டினி இல்லாமல் பிள்ளைகளை வளர்த்து விட வேண்டும் என்ற வாசி. 

அவள் அதற்க்காக வேலைக்கு செல்லவும் தயங்குபவள் இல்லை. கணவனை எப்படியாவது தினமும் வேலைக்கு அனுப்புவதே அவளுக்கு பெரும் பாடு. இதில் மது பிரியர்களாக இருந்தால் அவர்கள் நிலமையை நினைத்துப் பாருங்கள். 

தனது குடும்பத்திற்காக பெண் என்ன செய்கிறாள் என்றால்? அவள் பெரும் தியாகம் செய்கிறாள். என்பதை மறுக்க எவரும் இல்லை. 


காலை முதல் இரவு வரை அவள் ஓயாது உழைத்துக் கொண்டே இருக்கிறாள். காய்ச்சல் தலைவலி என்றால் விடுமுறை கேட்கும் நமக்கு அதை பற்றிப் புரிதல் இருக்காது என்பது மெய்.

அவள் குழந்தை, மங்கை, பெண், தாய், பாட்டி, பின் பூட்டியாகி முகம் சுருங்கி அன்பை மாத்திரம் விதைக்கும் ஆலமரம் ஆகிறாள்.

தன் வயதினால் ஏற்படும் இயலாமையை அவள் மறுக்கிறாள். அவள் அவளுக்கு என்று எதுவும் வேண்டாதவள். ஆனால் காலம் அனைவருக்கும் ஒரு முடிவை வைத்திருக்கும்.

அதில் யாருக்கும் பாரமில்லாமல் போய் விட வேண்டும் என்பது தான் அவளின் எண்ணமாக இருக்கும். ஓடியாடி குடும்பம், பிள்ளைகள் என்று வாழ்நாள் முழுவதும் பெரும் தவம் செய்து கிடந்தவள் நிலமை படுக்கை என்று ஆனது.

தான் தூக்கி வளர்த்த பிள்ளைகள் இன்று அவளை குளிப்பாட்டி சோறூட்டி பார்க்கிறார்கள். இருந்தாலும், தான் பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், பிள்ளைகள் மனம் என்ன நினைக்குமோ என்ற ஒரு எண்ணம் அவளை வாட்டிக் கொண்டே இருக்கும். 

குழந்தைகளை அனைவரும் ரசிப்பார், ஆனால் வயதான ஒருவரை எப்படி ரசிக்க முடியும். அவள் தோல் சுருக்கம் அருவருப்பு இல்லை அது அழகு அனுபவத்தின் கீறல்கள்.

சில வேளைகளில் அவள் அனைத்தையும் மறந்து விடுகிறாள் பெற்ற பிள்ளைகளை அவளுக்கு நினைவு இல்லாமல் போகிறது. ஆனால் அது பேர பிள்ளைகளுக்கு தமாஷாக இருக்கிறது.

ஒரு உயிர் பிரியும் வேளையில் அதன் கடைசி ஏக்கம் என்னவாக இருக்கும். புதிர்கள் தான் பூரிப்புடன் காத்திருக்கும்.

வயதான அவளை எத்தனை பராமரித்தாலும், அவள் அவளை அறியாமலே வருவோர் போவோர் இடம் எனக்கு சாப்ட ஒண்ணுமில்ல என்று ஏதாவது சொல்லி விடுவார்கள். 

இதனையே ஒரு குழந்தை சொன்னால் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் யாரும், வயதான ஒருவர் சொல்லை விளையாட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

அதில் விஷம் இருப்பதாகவே எண்ண தோன்றும் இருந்தும் அவள் அப்படிதான் வயசாகிடிச்சி யாருகிட்ட என்ன சொல்லுரோம்னு தெரியாம சொல்லுவா என்று சின்ன சமாதானம் ஏற்படும் என்றால் அந்த அன்பு போதும்.

வயதாக, வயதாக நாம் அனைவரிடமிருந்தும் விலகுகிறோம், அல்லது விலக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

ஆள் நடமாடும் நடு வீட்டில் என்னிடம் மாத்திரம் பேச யாருமில்லை என்ற அந்த கிழவியின் தவிப்பு எத்தனை கொடுமை என்பதை உணர முடிகிறது.

பேச முயன்றாலும் அவள் காதுகள் கேட்கும் திறனை இழந்து விட்டது என்பதை, அவள் எப்படியும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

விதியின் சூழ்நிலையில் அனைவருக்கும் ஓர் நாள் உடலற்ற சுகந்திரமுண்டு. அதுவரை உயிர் பிரியும் வரை ஏதோ புலம்பி, புலம்பி வாழ்ந்தாக வேண்டுமே.

அவள் சிரிக்கிறாள், அந்த சதைகள் வற்றிப் போய் எலும்புகள் நீட்டிக் கொண்டிருக்கும் கைகளை உயர்த்தி அழைக்கிறாள். அவள் அருகில் அமரச் சொல்கிறாள்.

நிமிர முடியாமல் நிமிர்ந்து கன்னங்களை பிடித்து முத்தம் தருகிறாள். கைகளிலும் முத்தம் பதித்து விட்டு கைகளை இருக்க பற்றிக் கொண்டு அவள் மார்போடு அனைத்துக் கொள்கிறாள். 

குரல் அற்ற அவள் குறவளையில் இருந்து மெதுவாக நான் வளர்த்த மக்கா என்று ஆனந்தம் கொள்கிறாள். நமது மனம் எல்லாம் அறிந்தும் அவளை வேடிக்கை பார்க்கிறது.

மரணம் இப்படி தான் நிகழ வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. புண்ணியவான்கள் பலபேர் போராடும் வாழ்வை பார்க்கும் போது, பாவம் செய்தோர் நிலமையை நினைத்து பார்க்கவே சங்கடமாக உள்ளது. 

கடைசியில் போராடி ஏதோ தீராத ஏக்கம் கொண்டு ஒற்றை நாடியில் உயிர் மாத்திரம் பிடித்துக் கொண்டுள்ளது. அவளை அப்படி பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள் ஆனால் அப்படி தான் இயற்கை நிலை செய்கிறது.

நல்ல படியா போய் சேரட்டும் என்ற அனைவரது பிராத்தனையும். அவளை சுற்றி வருகிறது. இரண்டு நாளையில பரிட்சை இருக்கு பிள்ளைக்கு இன்னும் எத்தன நாள் இழுக்கும்னு தெரியலையே என்ற பிள்ளைகளின் வார்த்தை அவள் காதில் விழுந்து விட கூடாது.

அடுத்த நொடி அவள் உயிர் பிரிந்து விடுவாள். என்ன செய்வது மருமகள் அவள் காதருகே அமர்ந்து  சத்தமாக சொல்லி விட்டாள். 

கிழவி நம்மை விட்டு போய்ட்டா என்று இளைய பேரன் குரல் ஓங்கும் பாட்டி செத்துட்டா நாலு நாள் லீவு போடலாம் என்ற ஆசை வேறு. அந்த உயிர் அவள் உடலை விட்டு பிரிந்து எங்கு சென்றுவிடும்.

எங்கும் செல்லாது. நம்ம பாட்டி நம்ம கூட தான் இருப்பா. அவ இருக்கும் போது அத பண்ணாலியே இத பண்ணலியேன்னு யோசிக்காம அவளை சந்தோசமா வழி அனுப்பி வைங்க என்ற வார்த்தைகளும் ஒலிக்கின்றன.

அவளை இத்தனை நாள் பேணி பராமரித்து வந்த மகனோ, மகளோ நிம்மதி அடைவார்கள் ஏதோ ஒரு சுகந்திரம் கிடைத்தது போல அல்லவா உணர்வார்கள். 

பாவம் நீங்கள் நல்லாயிருங்கள் புனித ஆன்மாக்கள் உங்களை ஆசீர்வதிக்கும். முதியோருக்கு செய்யும் பணிவிடை உங்கள் வாழ்நாள் முழுவதும் காக்கும். 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...