Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

அழைப்பில்லாத திருமண வீட்டு விருந்து

 அனைவரும் விரும்பும் ஒரு விருந்து தான் இது, திருமண  வீட்டு சாப்பாடு என்றால் யார் வேண்டாம் என்று கூறுவார்கள். அம்மா தனியாக செல்லும் திருமண வீட்டில் அசைவம், அல்லது பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் என வித்தியாசமாக எது போட்டிருந்தாலும், அவள் கொஞ்சம் சாப்பிட்டு பின் பிள்ளைகளுக்கும் வாங்கி வரும் அன்பு… ஒரு உலக வராற்று காவியம் தான்.



நண்பர்களுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்திற்கு நல்லா டிப், டாப்பாக உடை அணிந்து மணமகன் தோற்று விடும் அளவு வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு அழைப்பே இல்லாத திருமத்திற்கு சென்று அங்கு அறிமுகமில்லாதவர்களிடம் மாப்பிள்ளையின் தோழன் என்று கூறி அவர்களிடம் இருந்து ஒன்று இரண்டு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அதனை குடித்துகொண்டு.

பந்தியில் பாயாசத்திற்கு அடிபோட்ட கதைகள் அனைவர் வாழ்விலும் நிச்சயம் நடந்திருக்கும். 

யாராவது ஒருவருக்கு முதலில் வரும் செய்தி, பக்கது ஊர் கோவிலில் இன்று அன்னதானம் இந்த செய்தி கோவில் நோட்டிஸ் செல்லும் வேகத்தை விட இளைஞர்களை வந்து வேகமாக அடைகிறது.

அதிலும் கிடாவெட்டு போன்ற செய்திகளுக்கு கோவில் குடும்பத்தை மிஞ்சிய கூட்டம் வந்து நிற்கும். சாப்டா இப்படி சாப்டனும். எப்பவும் வீட்டு சாப்பாடு, இல்லையென்றால் கடை சாப்பாடு. யாருக்கு வேண்டும்.

விதம், விதமாய் கோவில் கொடை, பணக்கார திருமணம், மட்டன் பிரியாணி இதுவல்லவோ வாழ்வு. இதுவரை தெரியாதவர்கள் திருமணத்தில் சாப்பிட்ட அனுபவம் இல்லையென்றால் ஒருமுறை முயற்ச்சி செய்து பாருங்கள். 

முதலில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும், பயம் வேண்டாம் நம்ம ஊர் மக்கள் யாருக்கும் உணவு தர மறுக்க மாட்டார்கள். அதுவல்லாமல் பலர் வந்து செல்லும் போது யார் யார் உறவினர்கள் என்று குடும்பத்தவர்களே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.

எதற்கும் முன்னெச்சரிக்கையாக மண்டபத்தின் முகப்பில் வைத்திருக்கும் பேனரை ஒரு முறை வாசித்து மணமகன், மணமகள் பெயர் படிப்பு என ஒரு முறை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதில் இப்போது நீங்கள் யார் வீட்டு விருந்தினர் அல்லது நண்பர் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்து யாரும் நீங்கள் யாரு? எந்த ஊரு என்றெல்லாம் கேட்க மாட்டார்கள்.

ஆனால் நமக்கென்றே வருவார்கள் பந்தியில் அருகிலிருக்கும் உத்தமர்கள். வந்த வேலையை தவிற எல்லாவேலைகளையும் பார்ப்பார்கள். 

அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் நண்பர்களோடு பேசி கொண்டு திருப்தியாக சாப்டிட்டு வருவது நல்லது. சில வேளைகளில் மது உண்டு வந்து ஆத்திரம் கொள்ள செய்பவர்களும் உண்டு.

நாங்கள் வழக்கமாக முஸ்லீம் வீட்டு நிக்காவில் பங்கு பெறுவது உண்டு. ஒரு முஸ்லீம் மண்டபத்தினை கடந்து தான் பணிபுரியும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதனால், அங்கு திருமணம் நடந்தால் காலையிலே தெரிந்து விடும்.

மதிய உணவு வேளையில், பொடி நடையாய் மொபைலை பார்த்துக் கொண்டு நானும் எனது நண்பரும் பந்தி நடக்கும் இடத்திற்கு சென்று விடுவோம்.

மணக்க, மணக்க மட்டன் பிரியாணி பரிமாறுவார்கள். சில்லி சிக்கன் வேறு மட்டனும் பிரியாணியும் கையில் பிசையும் போது வித்தியாசம் தெரியாத அளவு இருக்கும். வாயில் வைத்தால் பூ போன்ற இட்டிலிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும் இந்த பிரியானியை ஒரு முறை ருசி பார்த்தால். 

அவ்வளவு அருமையாக இருக்கும். எங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு போர் அடித்து விட்டது. நண்பன் கூறினான் அடிக்கடி அசைவம் சாப்பிட்டு போரா இருக்கு கொஞ்சம் தள்ளி உள்ள போனா அங்க ஒரு ஹிந்து கல்யாணம் நடக்குது நல்ல அவியல் கூட்டு பொரியல் வச்சி இண்ணைக்கு ஒரு கட்டு கட்டுவோம்னு கூட்டிட்டு போனான். 

அங்க போய் உக்காரவும் நல்லா பாயாசம் மணம், அதுக்கு முந்தின பந்தில ஊத்தினது சரி நமக்கும் கொண்டு வருவாங்க. பப்படம், பழம் போட்டு பிசஞ்சி ஒரு அடி அடிப்போம் என்ற கற்பனையோடு. இலை வந்து போட்டார்கள்.

தண்ணீர் வந்தது அடுத்து முதல் கூட்டு என்ன தெரியுமா? சத்தியமா அவியல் இல்லை. மட்டன் கூட்டு அதுவும் பெரிய ஆப்பையில எடுத்து வைக்குறாய்ங்க. சைவம் சாப்பிட வந்தவங்கடா என்ற மனதின் குரல் மட்டனை பார்த்ததும் படுத்து விட்டது.

நல்ல சாப்பாடு. காலம் எல்லாம் நினைவில் இருக்கும் இது போன்ற நினைவுகள். அதனால் மறக்காதீர்கள் அலைபில்லாதா திருமண வீட்டு சாப்பாடு பிரமாதம்.

உங்களால் ஓசி சோறு சாப்பிட மனம் வரவில்லையென்றால். சாப்பிட்டு முடித்து விட்டு மொய் எழுதிட்டு வாங்க.

“நாங்கெல்லாம் அழைப்புள்ள வீட்டிலே மொய் எழுத அம்மா தாரா காசா மொய் எழுதாமா திருட்டு சரக்கு அடிப்போம்” அப்படி யாரும் சொல்லிட்டு வராதீங்க.

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...