Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

இலங்கையும் கேரளாவும் அக்கா தங்கை ( Srilanka and Kerala )

 கடவுளின் தேசம் என்று கேரளத்தை அனைவரும் குறிப்பிடுவது உண்டு. அவ்வாறு, அதற்கு ஏற்றவாறு தான் தன்னை தானே அமைத்திருக்கும் கேரளம்.


இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு கேரளத்தை மிஞ்ச வேறு எந்த நாடு இருந்து விட முடியும்? என்ற கேள்விக்கு இலங்கை என்ற அந்த சிறிய நாடும் போட்டிக்கு வருகிறது. 

கேரளாவை ஓரம் கட்டும் அளவு இல்லையென்றாலும் அதற்கு இணையாக சில இடங்கள் உள்ளது. மற்றும் கேரளாவில் மக்கள் அவரவர் வீட்டை சுற்றி மரங்கள் செடிகள் கொடிகள் என அனைத்திற்கும் இடம் அமைத்திருப்பார்கள். 

அப்படியே அந்த நடைமுறையை இலங்கையில் பரவலாக காண முடிகிறது. ஒவ்வொரு வீடும் குறைந்தது இருவது சென்ற் நிலத்தின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. அதாவது இருபது சென்ற் நில அமைப்பு கொண்ட இடத்தின் நடுபகுதியில் மூன்று அல்லது நான்கு சென்ற் அளவு மனைகளை அமைத்து வீட்டை சுற்றி முற்றம் பெரிதாகா அமைத்து தினமும் அழகாகா பராமரித்து வருகிறார்கள். 

மழை ஓய்ந்த போது சாலையோர வீடுகள்

மழையில், மாலையில் இலங்கை சாலை

சாலையோர கடை, கோடை மழை

இலங்கை பேக்கரி முழுவதும் மைதா மா பன்கள்


கேரளாவில் கோடை காலம், மழைகாலம் என்றெல்லாம் இல்லாமல் எப்போது மழைவரும் என்பதை கணிக்கவே முடியாத அளவு வாரம் குறைந்தது ஒரு முறையாவது மழை பொய்துவிடும். ஆனால் இலங்கையில் அப்படி இல்லை காலநிலை தமிழ்நாட்டை ஒத்து உள்ளது.

இருப்பினும் நுவோரிலியா, கண்டி, மாத்தாளை போன்ற மலைகள் சூழ உள்ள கிராமங்கள் மழைகாலம் கொஞ்சம் கேரள தேசத்தை ஓத்து உள்ளது.

என்னை மிகவும் கவர்ந்தது கேரளாவிலும் சரி இலங்கையிலும் சரி வீட்டு அமைப்பு தான் மாலை ஆனால் அனைவரும் வீட்டு முற்றத்தில் நாற்காலிகளை போட்டு அதில் குடும்பத்தினரோடு அமர்ந்து பருகும் தேநீராகட்டும் அல்லது சில குடும்பத்தினர் கணவன் மனைவி மாமனார் மாமியார் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது விருந்தும் பருகுவது உண்டு.

அது ஒரு ஆனந்தம் தான் அளவாக இருக்கும் வரை, அனைவருக்கும் இப்படி ஒரு ஒரு இயற்கை அமைப்பின் நடுவே வாழத்தானே ஆசையாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் "Work Balancing Life" என்பார்கள் அது சரியான முறையில் கடைபிடிப்பவர்கள் கேரள மக்கள் தான் பணம், பணம் என்று அதன் பின் ஓடிகொண்டே இருக்காமல் மாலை ஏழு மணி ஆகிவிடால் கடைகளை எல்லாம் மூடிவிட்டு வீடு சென்றுவிடுவார்கள். அதிகபட்சம் எட்டு மணி அதன் பின் தெருக்களில் யாரையும் காண முடியாது.

 முக்கியமான நகரங்களில் கூட அப்படிதான். நம்ம ஊர்களில் முக்கிய நகரங்களில் விடிய விடிய கடைகள் வியாபாரம் படு ஜோர் தான் என்றாலும் அனைவரும் கடன் வாங்கிக் கொண்டு, அந்த கடனை அடைக்க இரவு பகல் பார்க்காது உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் ஒரு புற உண்மை.

இலங்கை மக்கள் மிகவும் சோம்பேறிகள், அவர்களுக்கு ஏற்றவாறு சட்டமும் உள்ளது எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி புரிபவர்களுக்கு கட்டாயம் அதிக ஊதியம் என்றாலும் நல்ல உழைப்பாளிகள் நாற்பதில் ஒருவன் தான். இந்த சிறிய தீவு இங்குள்ள மக்கள் உண்மையில் நன்கு உழைத்தால் இந்த நாடு எப்போதோ முன்னேறியிருக்கும். 

உயர் அதிகாரிகளின் சுரண்டல் அது மொருபுறம், இங்குள்ள காவல் அதிகாரிகாள் மிகவும் மோசமாக நடந்து கொள்வதை காண முடிந்தது. 

ஒரு வாலிபன் தலையில் தலைகவசம் அணியாமல் சென்று கொண்டிருந்தான். அவனை  காவல் அதிகாரிகள் நிறுத்த. அவன் நிற்காமல் சென்றான் ஒரு காவளர் துரத்தி சென்று பிடிக்க முயன்றார் ஆனால் அவன் நிற்காமல் சென்றான். வேகமாகா இடது பக்கமாக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார் ஆனால் அந்த வாலிபன் பயமற்றவனாய் நிற்காமல் வேகமாக சென்று விட்டான். 

அவனை பிடிக்க முடியாத அவமானம் கையில் துப்பாக்கி ஏந்தும் அளவு செய்கிறது என்பது மிகவும் ஆபத்து தான்.

வெயில் அடிக்கும் போது திருநெல்வேலி தோற்று போகும். அந்த அளவு வெயில் கோடை தாக்கு பிடிப்பது மிகவும் சிரமம் தான் இலங்கையில். கேரளாவிலும் வெயில் அதிகம் என்றாலும் திடீர், திடீரென கூடும் கார்மேகங்கள் உண்மையில் அது கடவுள் தேசம் தான் என்று கூற வைக்கிறது.

உணவை பொறுத்த வரை இலங்கையில் மதிய உணவு சிங்களத்தவர்கள் கடைகளில் வைத்திருக்கும் ப்பே முறை அழகாகா இருக்கும் நானுறு இலங்கை காசுக்கு நல்ல மீன் சாப்பாடு கிடைக்கும். 

கேரளாவில் அரிசி மிகவும் பெரியதாக மற்றும் மீன்குழம்பு பிரமாதமாக இருக்கும். இலங்கையில் அவ்வளவு பிரமாதம் இல்லை என்றாலும் சுவையில் குறையில்லை.

அது ஒரு விதம் இது ஒரு விதம். சோறு போடும் இடம் சொர்க்கம் தானே...  

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...