Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கதைக்குள் கதை

 


பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது 

ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது.

ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. 

கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை.

அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தகப்பன் குடும்பத்தை விட்டு தனியாக ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார். தமையன் வீட்டில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் வெளியூர் சென்று வேலை செய்து அதில் வரும் பணம் கொண்டு அவனது படிப்பை படித்து முடித்து விட்டு வெளியூரிலே வேலை செய்து வந்தான். 

யாரும் கேட்பார் இல்லை தாய்க்குச் செல்லப் பிள்ளை என்பதினால் அவன் தான் ராஜாவாக யாருக்கும் அடங்காமல் அதுமட்டுமில்லாமல் நல்ல வேலை வேறு வாழ்வை மதுவின் பிடியில் சிக்க வைத்து அது தான் வாழ்வு என்று நம்பிக் கொண்டிருந்த தருணம் அது.

பலராமனின் மது விருந்துக்கு கண்ணன் அழைக்கப் பட்டான் கண்ணன் வலுவானவன் ஆளுமை உடையவன் என்பதனால். மது விருந்தில் தீர்மானம் கிறிஸ்தவர்களுக்கு வரி வாங்க வேண்டுமென்று தான் தீர்மானம் வர வேண்டும் நாம் அவர்கள் பக்கம் தான் என்று அவர்கள் கூற சிறிதும் விருப்பமில்லாத கண்ணன் மதுவினாலும் நட்பினாலும் அவனது நிலையில் இருந்து மாறினான் 

ஊர் கூட்டம் கார சாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க விவாதம் துவங்கியது. ஊர் தலைவர், இந்த ஆண்டிலிருந்து  கிறிஸ்தவ மதத்வர்களுக்கு வரி செலுத்தும் உரிமையில்லை. ஊர் சார்பாகவோ, ஊரிலிருந்து யாரும் அவர்கள் வீட்டு நல்லது கெட்டதிற்கு பங்கு கொள்ள மாட்டார்கள் என்று கூறினார் 

ரவி கூட்டத்தில் இருந்து இரண்டு அடி முன்பு வந்து சரி நாங்கள் இனி வரி செலுத்தவில்லை இத்தனை வருடம் செலுத்திய வரியை திரும்ப கொடுங்கள் அதுமட்டுமல்லாமல் நான் கோவில் பணி நடக்கும் போது நன்கொடை இருபதாயிரம் கொடுத்திருந்தேன் அதையும் திரும்ப தருமாறு கேட்க 

ஊர் தரப்பு அதையெல்லாம் முடிந்தவை இனி நடப்பவற்றை பற்றி முடிவெடுக்க வே இந்த கூட்டம் என்று கூற கண்ணனோ கூட்டத்தில் இருந்து முன்வந்து ஊர் நிர்வாகிகளிடம் அவர் கேட்பது சரி தானே அவர் நேற்றோ இன்றோ கிருஸ்தவ மதத்திற்கு மாறவில்லை பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவர் கிறிஸ்தவராக இருக்கும் போது தான் நன்கொடை வரிபணம் எல்லாம் செலுத்தினார் அதனால் அவர் கேட்பதை செய்யுங்கள் என்றான். 

அவன் பேசியதும் அவனை தொடர்ந்து பலரும் கண்ணனுக்கு எதிராகவும் துணையாகவும் கருத்து தெரிவிக்க எந்த ஒரு முடிவும் எடுக்காமல் அன்றைய ஊர் கூட்டம் முடிந்தது. 

ஆனால் கண்ணனுக்கு ஏனோ மனம் பாரமாகவே இருந்தது. விருப்பமில்லாத ஒன்றை செய்துவிட்டோமே என்று வருந்திக் கொண்டிருந்தான். 

அதன் பின்னான வாழ்க்கையில் வழக்கம் போல பல மது விருந்துகளும் விளையாட்டும் வேலையும் என்று சென்று கொண்டிருந்தன. ஒரு நாள் அவன் தன் நண்பர்களிடம் தன் வேலையை விட போவதாக கூறினான். ஆனால் நண்பர்களோ அவனை இதை விட நல்லவேலை யாருக்கும் கிடைக்காது. அதனால் நீ வேலையை விட்டு விடாதே என்று கூறினார்கள் அவனுக்கு ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஒட்டிக் கொள்ளவே வேலையை தைரியமாக விட்டான்.

சென்னைக்கு சென்றான் அங்கு உறவினர் ஒருவரோடு சேர்ந்து தொழில் செய்ய திட்டமிட்டான் 


தொடரும்…


Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...