Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

பரோட்டா கடை காந்தி (குறுங்கதை)

 


தினமும் மாலை துவங்கும் பரோட்டா கடை வியாபாரம் எத்தனை கடைகள் இருந்தாலும் சூடு பிடிக்கும் வியாபாரம். கையில் ஒரு லட்சம் சேமிப்பு இருக்கும் எவனும் முதலில் தொழில் என்று சிந்திக்கும் போது டீ கடை அல்லது ஹோட்டல் என்பது தான் நடுத்தர வர்க்கத்தவனின் எண்ணமாக இருக்கும். அப்படித் தான் காந்தி துவங்கினான் ஒரு ஹோட்டல். ஏற்கனவே அங்கு நடந்து கொண்டிருந்த பரோட்டா கடை அண்ணன் தம்பி சண்டை காரணமாக மூடப் பட்டு இருந்தது. 

காந்தி கையில் பணம் வரவே அவனால் அதனை வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அக்கவுண்டில் பணம் இருக்கிறதா என்று மணிக்கு மூன்று முறை அவனது வங்கி கணக்கை இணையம் மூலம் திறந்து திறந்து பார்த்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவனுடைய செவிக்கு வந்தது அந்த செய்தி ஏதும் யோசிக்காமல் அடுத்த நொடியே அந்த கடை முதலாளிக்கு அழிப்பை தொடுத்து ஏக வசனம் பேசி அந்த கடையை மாதம் இரண்டாயிரம் வாடகைக்கு முடித்தான். இடத்தின் முதலாளி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார் காந்தி இதற்க்கு முன் ஐந்தாயிரத்திற்கு வாடகை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மூன்றாயிரம் குறைக்க சொன்னால் உனக்கே நியாயமா என்றார். 

"யோ.., உம்மா கடைக்கு வாடகைக்கு வந்து எவனாவது நாலு மாசம் இருந்துருக்கானா ? கிடையாது. ஏன்னா சுத்தமான இராசியில்லாத கடை ஓய் உம்மது."

"காந்தி ராசி கீசியெல்லாம் தெரியாது எனக்கு வாடகை முக்கியம் யாரும் வரலன்னா அது சும்மா கிடந்தாலும் பரவால்ல கேட்டியா !"

"ஓய், மாச, மாசம் இரண்டாயிரம் சார்ப்பா வரும். கரண்டு பில்லு தண்ணி பில்லு கட்டிரலாம். வியாபாரம் சோரா போனா நீறு கெட்டாத விட ஜாஸ்தி தரேன், வாங்கிக்கும்."

"சரி, உனக்குனால தரேன் டே, ஊருல வேற எவன் கிட்டயும் சொல்லிபுடாத, லிங்கம் இரண்டாயிரத்துக்கு கடையை வாடகைக்கு கொடுத்தான்னு சொன்னா மத்த கடை காரனும்லா கொறச்சி கேப்பான்!" 

"சரி ஓய், எவன்கிட்டயும் சொல்லல வீட்டுக்கு வாறன் சாவிய தாரும்" 

"டேய், அது கடை முன்னால துரு பிடிச்சி கிடக்கிற அந்த சைக்கிள் பெடல் மேல இருக்குடே.." என்றான் கடையின் முதலாளி லிங்கம்.

அவசர, அவசரமாக சென்று சாவியை எடுத்துக் கொண்டான். தினமும் அவன் மது அருந்த செல்லும் இடத்திற்கு வரும் ஒருவனுடன் ஏற்பட்ட பழக்கம் ஒரு பரோட்டா மாஸ்டர் கிடைத்தார். கடை துவங்கியது. முதல் நாள் ஆர்பாட்டம் இல்லாத வியாபாரம். காந்தியுடன் பழக்கத்தில் உள்ள அனைவரும் அங்கு வந்தே மதுவிற்கு பின் இரவு உணவை களித்தனர். 

காந்தியுடன் மது அருந்தி வருபவருக்கு பரோட்டா இலவசம்.. 

"லே மக்கா, பரோட்டா எத்தன வேணுமோ வாங்கி தின்னுங்கல நம்ம கடைதான். ஆம்லெட், ஆபாயில் மட்டும் வாங்கிராதுங்கல முட்ட கொடூரமான விலை மக்கா." என்றான் காந்தி மிதமான குடி போதையில். 

மாஸ்டர் தினமும் கல்லா பெட்டியில் நூறு, இருநூறு எடுத்து பாக்கெட்டில் சொருகிக் கொள்வதும், காந்தி வாங்கி கொடுக்கும் மதுவை குடிப்பதும், அவனுடைய தினச் சப்பளம் மற்றும் படி பணத்தை தவறாமல் வாங்கிக் கொள்வான். 

இவன் திருடுவது காந்திக்கு ஓர் நாள் தெரிய வந்தது. சரி ஒரு நாள் கையும் களவுமாக மாட்டட்டும் என்று பொருந்து இருந்தான். தீபாவளி அன்று காலையில் கடையை ஆரம்பித்து விட்டான். நல்ல வியாபாரம் காலைமுதல். காந்தியும் காலையில் குடிக்க துவங்கியவன் இரவு வரை தொடர்ந்த மது விருந்து. இரவு மாஸ்டருக்கு ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு கடைக்கு வந்தான். கடையில் வியாபராம் முடிந்து மாஸ்டர் எல்லா பொருட்களையும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தார். பின் இருவரும் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். நல்ல மது போதையில் காந்தி மாஸ்டரிடம் 

"ஓய், உம்மள நம்பி கடையை விட்டதுக்கு நீர் ரொம்ப நேர்மையா கடைய நடத்திட்டு வரீரு, எனக்கு அது ரொம்ப சந்தோசம். இப்படியே நல்லபடியா கடையை நடத்தும், உம்மளுக்கு தனியா ஒரு ஹோட்டல் ரெடி பண்ணி தாரேன்."

"அதுவெல்லாம் வேணாம் டே, இதுவே போதும். சரி டே ரொம்ப நேரமாச்சி பிள்ளைய தேடும் திபாவளி வேற."

என்று மாஸ்டர் சொல்லவும் மது  போதையில் அன்றைய கலெக்சனை கணக்கு வாங்க மறந்துவிட்டான் காந்தி. மாஸ்டர் கிளம்பிய பின் நினைவு வர சரி நாளைக்கு வாங்கிக்கலாம் என்று கடையிலேயே உறங்கி விட்டான் காந்தி.

காலை எழுந்து போதை தெளிந்து அரை மயக்கத்தில் கல்லா பெட்டி நினைவு வர பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு ருபாய் கூட இல்லை. காந்தி மாஸ்டருக்கு போன் செய்ய என் "தற்போது உபயோகத்தில் இல்லை" என்று வர கோபம் கொண்டான்.  

அவனுக்கு மாஸ்டரை பரிந்துரைத்த நண்பனுக்கு விஷயத்தை சொல்ல அவன் வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டான் என்கிறான் அவன் நண்பன். எப்படியும் இருபதாயிரத்திற்கு மேல் இருக்கும் சரக்கு மட்டும் ஆறாயிரத்திற்கு மேல் வாங்கியிருந்தேன் என்றான் காந்தி.

காந்தியின் நண்பர்கள் அவனை கேலி செய்தனர். காந்தி போல ஒரு நல்லவன் கிடையாது "மக்கா, நான் வரட்டா டே உன்னோட கடிக்கு மாஸ்டரா ? ஏன்னா சரக்கும் வாங்கி தருவ கடை வருமானத்தையும் மொத்தமா தருவ! உன்ன போல ஒரு இளிச்சவாயன் ஓனர் எங்க டே கிடைப்பான்?" ஹா..ஹா..என்று அனைவரும் அவனை பார்த்து சிரிக்க 

"போங்கல புண்டாமக்கா நாளைக்கு வேற மாஸ்டர் வரான் என் தம்பி." என்று சொல்லவும் இன்னமும் சத்தமாக அனைவரும் சிரித்தனர். அவனாலும் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை." 







  

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...