Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

சம்மதி (சிறுகதை)

 


ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. இப்போது தான் ஏதோ தெய்வத்தின் கருணையினால் திருமண வரன் கைகூடியுள்ளது. இனியும் தாமதிக்காமல் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டுகிறேன் என்று சுபாஷின் தந்தை முருகேசன் மணமகள் வீட்டாரிடம் கூறுகிறார்.

பெண் வீட்டார், மாப்பிள்ளை சுபாஷை பார்த்து “எங்களுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு அவரு இப்பவே பொண்ண கூட்டிட்டு போனா கூடா எங்களுக்கு சம்பந்தம் தான்.” என்று கூற சுபாஷ் கொஞ்சம் வெட்கத்தில் தலை குனிந்தான். 

இருவர் வீட்டாரும் சிரிக்க.. மணமகளை அழைக்கிறார் தனம், மணமகளின் அத்தை. “ரேவதி காபி கொண்டு வா, மாப்பிள்ளைக்கு இனியும் பொறுமையில்லை.” என்று கூற குடும்பங்கள் உடல் குலுங்க சிறிதொரு சிரிப்பை வெளிப்படுத்தினார்கள். வெளியே நடந்து வருகிறாள் ரேவதி.

சுபாஷ் அவளை பார்த்தபடியே இருக்கிறான். தனம் சுபாஷிடம் நீங்க லவ் பண்ண பொண்ணு தான அப்புறம் ஏன் இப்படி பாக்குறீங்க என்று கேட்டாள். அனைவரும் ஆளுக்கொன்று கூறி நகைத்தார்கள்.

சுபாஷ் அமைதியாக இருந்தான். சுபாஷின் தந்தை முருகேஷன் “டீ சூப்பர், நீ தான் போட்டியாமா?”

அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளின் தாயின் முகத்தைப் பார்த்தாள். முருகேஷன் புரிந்துகொண்டார், அப்படியே தொடர்ந்தார் உனக்கு எப்படி இவனை பிடிச்சது எனக்கு தெரியலாமா! ஆனா உன்ன லவ் பண்ண அப்புறம் தான் குடிக்கிறத நிறுத்தினான் என்றார்.

சுபாஷ் வேர்த்து விறு, விறுத்துப் போனான். என்ன சொல்லுறாரு இவரு என்று எண்ணிக் கொண்டான். அவன் அம்மா பாக்யம் அவர் அருகில் நெருங்கி சிறு முகம் சுளித்த புன்னகையுடன் அவர் காலில் கிள்ளினாள்.

மணமகள் வீட்டார் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மணமகளும் தான். ஏனென்றால் அவளுக்கும் தெரியாது அவன் குடிப்பான் என்று. இன்பமாய் கூடிய சுபநிகழ்சியில் மரண செய்தி கேட்டது போன்ற ஒரு நிசப்தம் நிலவியிருந்தது.

சுபாஷ் நீ குடிப்பாயா? என்று ரேவதியும், மாப்பிள்ளை நீங்கள் குடிப்பீர்களா? என்று ரேவதியின் அம்மாவும் கேட்க முனைந்தனர். ஏனோ,ஏதோ முழுமையடையாதது போல தோன்றியது முருகேஷின் வார்த்தை. ரேவதியின் அம்மாவால் அதையும் கட்டுப் படுத்த முடியாமல், “என்ன சொல்லுறீங்க சம்மதி என்று கேட்டாள்.” 

முருகேஷன், சற்றும் தாமதிக்காமல் உங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரு தகப்பனாக நான் உண்மையை கூறுவது தான் உத்தமம் என்று நினைக்கிறேன் என்றார்.

“அடே, உத்தமா.. உன்னோட உத்தமத்தை காட்ட என்னோட வாழ்க்கை தான் கிடச்சிதா?” என்று சுபாஷ் மனதில் உறுமிக் கொண்டிருந்தான். 

அவனால் ரேவதியை தலைநிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ரேவதியோ அவன் மீது ஆத்திரம் கொண்டவளாய் நிற்கிறாள். நிச்சயத்தை நிறுத்துவிடுவோமா என்றெல்லாம் அவள் மனம் அலைமோதிக் கொண்டிருந்தது. என்னவென்றாலும் எட்டாண்டுகள் காதல் இத்தனை வருடங்களில் என்னிடம் எதையாவது மறைக்கிறாயா என்று பலமுறை கேட்டுள்ளாள் ரேவதி. ஒவ்வொருமுறையும் உன்னிடம் மறைக்க ஒன்றுமில்லை செல்லம் என்று தான் கூறியிருந்தான் சுபாஷ்.

ரேவதிக்கு அவன் கூறிய வார்த்தைகள் மட்டுமே அவள் அடிமனதில் வண்டின் இரைச்சல் போல ரீங்காரம் கொண்டிருந்தது.

முருகேஷ் தொடர்ந்தார், அவன் மது அருந்துவான என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவன் நண்பர்கள் மது அருந்துவதை நான் பார்த்திருக்கிறேன். எந்த நேரமும் இவன் அவர்களுடன் தான் சுற்றுவான். எனக்கு அதனால் இவன் மீது ஐயம் உண்டு. 

ஒருவேளை அவன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மது அருந்தியிருக்கலாம். அது அவனது சில நடவடிக்கைகள் எனக்கு உணர்த்தியது.

ஆனால் உன்னை காதலிப்பதாக அவன், அவனுடைய அம்மா பாக்யத்திடம் கூறியபின் அதுபோன்ற சந்தேகங்கள் அவனிடம் எனக்கு தோன்றவில்லை. அதனால் உனக்கு நான் நன்றி தான் சொல்லவேண்டும்.

மற்றபடி இந்த திருமணத்தில் எனக்கு கொஞ்சமும் விருப்பம் கிடையாது. என்னுடைய தங்கையின் மகளை அவன் திருமணம் செய்து கொள்வான் என்று என் தங்கை மிகவும் ஆசையாக இருந்தாள்.

ஆனால் அவன் திருமணத்திற்கு முன்பே அவளிடம் நெருங்கி பழகியது எனக்கு பிடிக்கவில்லை.

சுபாஷ் அங்கிருந்து எழுந்தான். முருகேஷ் அவன் கைகளை பிடித்து இழுத்து அமரச் செய்தார். அவன் கோவமாக சற்று உயர்ந்த குரலில், ரேவதி உனக்கு முன்னவே தெரியும் அப்பாவிற்கு மனநிலை சரியில்லையென்று. நீ அவரைப் பற்றி நன்கு அறிந்தும் அதிர்ச்சியாகி அமைதியாக நிற்பதன் காரணம் எனக்கு புரியவில்லையென்றான்.

ரேவதி அமைதிகாத்தாள், அவள் அம்மா “அடியாத்தி பைத்தியமா இவரு, ஆளு வாட்டம் சாட்டமா இருக்காரேன்னு நினச்சேன்.” என்று சொல்லி அப்பாவின் வியாதி நாளை மகனுக்கு வராது என்று என்ன நிச்சயம் என்று கேட்டாள்? அதனை சுபாஷ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவன் அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டிருந்தான்.

சூழ்நிலை அவன் கைமீறியிருந்தது. அவன் அவனது அம்மா பாக்கியத்தை பார்த்து முறைத்தான். பாக்யம் தலைகுனிந்து கொண்டாள்.

உறவினர்கள் ஒருவருக்கொருவர் முனு, முனுத்துக் கொண்டிருந்தனர். புகைப் பட கலைஞர்கள் நடப்பதை ஒளிப் பதிவு செய்துக் கொண்டிருந்தனர். 

சுபாஷ், நீ இருப்பா அப்பா இருக்கேன்ல நான் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறேன் என்றார் முருகேஷ். 

முருகேஷ் தொடர்ந்தார், அம்மா ரேவதி நீ முதல்ல உக்காரு காபி கொண்டு வந்த கையோட நிக்கிற அளவு என்ன பிரச்சனை நடந்துச்சு? நானும் உனக்கு அப்பா மாதிரி தான் நீ தைரியமா சொல்லு அப்பா கிட்ட, உன்ன யாரு என்ன சொன்னா? 

ஏண்டி பாக்யம் பிள்ளைகிட்ட நீ ஏதாச்சும் சொன்னியா? சமைக்க தெரியுமான்னு கேட்டுருப்ப ! எப்படா மருமக வருவா எல்லாத்தையும் அவ கிட்ட கொடுத்துட்டு உனக்கு ஊரு கதை பேசனும் அதான! அடி ராஸ்கல் என்று கூறிக் கொண்டு அவர் சிரித்தார்… ஹா.. ஹா பைத்தியம்.. வர போற மருமக கிட்ட இப்படியா பேசுறது! என்று முறைத்தார்.

கூடி இருந்த அனைவரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ரேவதிக்கு அப்போது தான் மூச்சே வந்தது. 

அவருக்கு இப்போ நான்கு வருடமாக தான் இந்த பிரச்சனை. மாடு மேய்க்க சென்ற இடத்தில் தென்னை மரத்தில் இருந்து தலையில் விழுந்த தேங்காயால் இரண்டு நாட்கள் கோமாவில் இருந்து தெளிந்தார் அதன் பின் தான் இப்படி அடிக்கடி ஏதோ கற்பனைக்கு சென்று அதனை நிஜமென்று நம்பி அவர் பயந்து சுற்றி இருப்பவர்கள் இடம் அது உண்மையென்றே விளக்குவார், என்று சுபாஷ் அவன் வருங்கால அத்தை சரஸ்வதியிடம் கூறினான்.

அதனால் நீங்கள் எனக்கும் இப்படி ஆகுமோ இது பரம்பரை நோயோ என்றெல்லாம் எண்ணி பயப்பட வேண்டாம் என்றான்.

ரேவதிக்கு அவரைப் பற்றி தெரிந்தும் நிச்சயம் செய்யும் நேரத்தில் அப்படி ஒரு செய்தியை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ரேவதியின் அம்மா சரி இதுக்கு மேல இப்படியே பேசிட்டு இருந்தா அடுத்து என்ன பூகம்மத்த கிளப்ப போராரோ சம்மதி தெரியல. வாங்க தட்டை மாத்திப்போம்னு ரேவதி அம்மா முகூர்த்த தாம்பாளம் எடுத்து கையில் வைத்துக் கொண்டு “அப்பா இல்லாத பொண்ணு செல்லமா வளத்துடன் நீங்க தான் பாத்துக்கணும்.” என்று தாம்பூலத்தை பாக்கியத்தின் கையில் கொடுத்தார்.

பாக்யம் மனம் நிறைந்த புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். 

முருகேஷ், “யம்மாடி அம்ஷா”

அம்ஷா, கிம்ஷா லா யாரும் இல்ல ஒழுங்கா தாம்பூலத்தை கொடுங்க என்று பாக்யம் அவரை அதட்ட அனைவரும் அவரை பார்த்து மனம் நிறைந்து சிரித்தனர். 

ஒரு நிமிடத்தில் மொத்த சந்தோஷத்தையும் குழப்பிடாறு சம்மதி என்றாள் தனம். 

சரி சாப்பாடு ரெடியா இருக்கு எல்லாரும் வாங்க  என்றாள்.



Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...