Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஊர் நிர்வாகமும் போற்றியும்




காலம் அனைவருக்கும் பொதுவானது என்பதில் நம்பிக்கை யாருக்கும் இருக்காது ஏனென்றால் யாருடைய வாழ்வு எப்போது உயரும் எப்போது சறுக்கும் என்பது காலம் மட்டுமே அறிந்தவென்று. மனிதன் மிகவும் பயந்தான் கொல்லி என்று ஊர் வழக்கத்தில் எடுத்துக் கொள்ளலாம் அவன் படைப்பை நம்பவில்லை ஆனால் அவன் ஒன்றை படைக்கிறான் அதற்கு பெயர் சூட்டுகிறான். அது உயிரற்றதாக இருந்தும் அதன் மீது ஒரு நம்பிக்கை கொள்கிறான். அந்த நம்பிக்கை அவனுக்கு என்ன கொடுக்கிறது என்றால் அவனுடைய பயத்தில் இருந்து அவனுக்கு ஒரு விடுதலை கொடுக்கிறது என்று கூட கூறலாம். 

யுகங்களின் பரிணாமத்தில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று ஒரு பிரிவினை மனிதனை தவிற வேறு யார் உருவாக்கியிருக்க முடியும். அவன் தானே அவன் கற்பனைகளை வாழ்வியலில் பொருத்தி ஒரு வித இயல்பற்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறான். 

நாகர்கோவில் நாள் 15-10-1996 இரவு மணி 7:30 ஊர் கூட்டம் நடைபெறும் ஊர் கருங்காலிவிளை கோவில் கிழக்கு வாசல் ஊர் கமிட்டி தலைவர்கள் அமர்ந்து இருந்தனர் எதிர்புறம் இருந்த தெருவில் இடது பக்கம் அமைந்திருந்த ஊர் நிர்வாகி சுயம்பின் வீட்டு திண்ணையில் பெண்கள் வரிசையாக அமர்ந்துக் கொண்டனர் 

ஆண்கள் ஊர் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் அவர்கள் அணிகளுடன் இணைந்து ஆங்காங்கே நின்றுக் கொண்டிருந்தனர். ஊர் தலைவர் ஒரு வழக்கறிஞர் அதுமட்டுமல்லாமல் ஒரு கட்சியின் மாநில வழக்கறிஞர் அந்த கட்சியின் நிர்வாகியும் கூட, ஊரில் அவருக்கென்று ஒரு மரியாதை இருந்தது. அது பணத்தால், பதவியால் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர அவருடைய குணத்தால் என்று யாரும் கூறிவிட மாட்டார்கள். ஏனென்றால் அவர் செய்யும் ஒவ்வொரு பொது விஷயங்களிலும் அவருடைய சுயநலம் இணைந்தே இருக்கும்.

உதவி என்று போய் நிற்பவர்களுக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவி செய்பவர்களும் நாட்டில் உண்டு என்பதில் ஐயம் இல்லை, ஆனால் அவர் அப்படிப் பட்டவர் கிடையாது கைமாறு எதிர்பார்ப்பவர். முன்பகை ஏதும் இருந்தால் தக்க சமயம் பார்த்து காத்திருப்பார். ஊரில் அவர் மட்டுமே வழக்கறிஞர் என்பதனால் ஏதாவது ஒரு வகையில் அவரிடம் உதவியென்று செல்ல நேரிடும் என்பதினால் குணத்தில் சிறந்தவர்கள் ஏழைகள் அவரிடம் வம்பு வைத்துக் கொள்வது இல்லை.

எதை பற்றியும் யோசிக்காமல் அவரை வம்புக்கு இழுக்கும் நபர்களும் இருந்தனர். அவர் மீது வழக்கு தொடுக்கவும் செய்திருந்தனர் ஊரில் முந்தைய பொதுக் கூட்டங்களில் நடந்த சண்டைகளில் ஏற்பட்ட மோதலில். அவர் அந்த வழக்குகளை அவருடைய அரசியல் செல்வாக்கு பயன்படுத்தி அவருடைய ஓட்டுநர் மீது மாற்றி விட்டார். இப்போது ஊர் போது கோவிலை சுற்றியிருக்கும் அவருடைய நிலத்திற்கு வழிப்பாதை வேண்டும் என்பதற்காக பல வேண்டாத வேலைகளை செய்து வருகிறார் என்பது ஊர் மக்களின் கூற்று. 

முந்தைய பொதுக்கூட்டத்தில் எடுக்கப் பட்டிருந்த முடிவு அது ஊரில் இளைஞர்களுக்கு வேலையில்லை. இளம் வயதில் நிறையபேர் இறந்து போகின்றனர் அனைத்திற்கும் காரணம் கோவிலில் சரியான முறையில் பூஜை நடக்கவில்லை என்பதாக இருந்தது கேரள நம்பூதிரியின் வாக்கு. அதற்காக ஏற்பாடு செய்து ஊருக்குள் கோவில் பூஜைக்கு போற்றிகள் இருவர் நியமிக்கப் பட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த அவர்களுக்கு தங்க இடமும் கொடுத்து ஊதியமும் கொடுக்கப் பட்டது மூன்று வருடங்களாக அவர்கள் தான் பூஜை செய்து வருகிறார்கள். அவர்கள் வந்த பின்பு பூஜை முறையில் மாற்றம் செய்யப்பட்டது, பூஜை நேரம் மாற்றப் பட்டது. 

தற்போது நடைபெறும் கூட்டத்திற்கான காரணம் போற்றிகள் இருவர் அண்ணன் தம்பி அவர்களுள் ஒருவர் வழக்கறிஞருக்கு ஓட்டுனராக சென்றுவிட்டார். தக்க சமயம் பார்த்து காத்திருந்தவர் நிர்வாகத்தை கலைத்து வேறு நிர்வாகம் அமைக்க வேண்டுமென்று அவருக்கு சாதகமாக அமைக்கவே திட்டம் தீட்டியிருந்தார். இது ஊரார் அறிந்ததே. ஊருக்குள் இருப்பது முப்பது பேர் முக்கியமானவர்கள் இங்கு யார் என்ன பேசிக் கொண்டாலும் அது ஊரில் உள்ள முன்னூறு பேருக்கும் தெரிந்து விடும். 

இதுதானே ஊர், அனைத்து ஊரிலும் இது தான் நிலமை என்றாலும். அந்த அந்த நேரங்களில் அவை மிகுந்த ஆரவாரத்துடன் தான் பேசப்படும். போற்றிகளுக்கு கொடுக்கப் பட்டிருந்த வீட்டில் ஏழு எட்டுப்பேர் கூடி சத்தமும் ஆர்பாட்டமுமாக இருக்க ஊர் தலைவர் அவர்களை திட்டிவிட்டார் என்ப்பா வேறு ஒரு ஊரில் இருக்கும் போது எப்படி இருக்கவேண்டும் என்று கூடவே தெரியாது அக்கம் பக்கத்தில் வீடுகள் உள்ளது நடுத்தெருவுள் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைத்தால் எப்படி என்று கேட்டு கொஞ்சம் அதட்டலாக இப்படியே செய்தால் வாகனத்தை எரித்து விடுவேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.

பஜனை நடக்கும் நேரம் வழக்கறிஞருக்கு ஓட்டுனராக இருக்கும் போற்றி கோவில் மைதானத்திற்கு வந்து ஊர் தலைவரிடம் நீ அவ்வளவு பெரிய ஆளா ? மரியாதை கொடுத்தால் தான் மரியாதை என்று வழக்கறிஞர் பேச்சைக் கேட்டு ஆர்ப்பரிக்க இன்று ஊர் நிர்வாகம் போற்றிகளை என்ன செய்ய என்று தீர்மானம் செய்ய காத்திருக்கின்றனர்.

சான்றோர்கள் கூடியிருக்கும் இந்த அற்புதமான மாலை வேளையில் தாயின் அருளால் அனைவரும் நீண்ட ஆயுள் செல்வம் பெற்று வாழ பிராத்திக்கிறேன். என்று ஆரம்பித்தார் ஊர் தலைவர் (தர்மகர்த்தா) அனைவரும் அறிந்த விஷயம் தான் என்னவென்று விளக்க தேவையில்லை இருந்தாலும் ஊர் நடைமுறையை மாற்ற முடியாது என்று நடந்தவற்றை கூறி என்ன செய்யலாம் என்று கேட்க மக்களில் சிலர் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்றனர். சிலர் மன்னிபெல்லாம் தேவையில்லை இந்த மாதம் முடிந்ததும் அவர்களை அனுப்பி விடலாம் என்றார்கள். நம் ஊரில் பிழைக்க வந்தவர்கள் எப்படி தலைவரை கேள்வி கேட்க முடியும். அது யாராக இருந்தாலும் ஊர் ஹவுரவம் முக்கியம் என்றார்கள்.

கடைசியாக அதுவும் சரி தான் என்று அவர்களை நிறுத்த முடிவு செய்தனர். 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...