Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கைலைமலை தரிசனம்

இறைவன் என்னோடு பேச என்றும் மறந்தது இல்லை...

என்னை விட்டு எங்கும் விலகியதும் இல்லை..

நான் தேடும் முன்னே எனக்காக காத்திருந்த தருணங்கள் பலவுண்டு என் வாழ்வில்...

நான் நினைக்கும் முன்னே பல கொடுத்ததும் உண்டு...

ஆனால் என்றும் எனக்கு வாழ்கைக்கு தேவையான அனுபவங்களை தர மறுத்தது இல்லை அவன்...

ஆசைகள் ஆயிரம் ஆயிரம் மனதில் தோன்றலாம் ஆனால் நடப்பது எது, சாத்திய படுவது எது என்பது நாம் அறிந்திராத ஒன்று...

அது நிச்சயம் நமக்கு தேவையென்றால் அவன் நாம் கேட்கும் முன்னே தந்து மகிழ்வான்...

இதற்கு முன் ஓர் இரவு மூன்று மணி அளவில் வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் நானும் நண்பனும் வீடு திரும்பும் போது...

மேற்க்கு முக வானில் பட்டை வடிவில் திருனீர் அணிந்திருந்த சிவ பெருமானின் நெற்றியை கண்ட ஒரு அற்புதம் நிகழ்திருந்தது என் வாழ்வினில்...

அந்த நிகழ்வு எனக்குள் நிகழ்த்திய ஓர் பேரமைதி இன்றளவும் ஆழ்ந்துள்ளது இந்த அறுதம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் இருக்கும்
அப்படி இருக்க...

அன்று மாலை 5 மணி மழை ஒரு புறமும் இன்னொருபுறம் மழை கருமேகமும் சூழ்ந்திருந்த பொழுது அது...

நாங்கள் இருந்த இடத்தினில் சிறிது சாரல் கூட இல்லை...

வீட்டின் இரண்டாவது தள மொட்டை மாடிக்கு திடீரென செல்ல தோன்றியது என்றும் அந்த நேரம் வளக்கமாக செல்வதும் கிடையாது....

வாரத்தில் ஒரு முறை சென்றாலே அது ஆச்சர்யம் தான்...

ஏனோ அன்று அந்த மாலை நேரம் மழை கருமேகங்களை காண ஆவலாக இருந்தது...

அது மட்டும் இன்றி கண்டிப்பாக மாடிக்கு செல்ல வேண்டும் என்று என்னை அறியாது ஒரு தூண்டல்...

என்னுடன் இருந்த தோழன் ஒருவனை அழைத்தேன் அவனும் மறுவார்த்தை கூறாது என்னுடன் வந்தான்...

இரண்டு சுற்று படிகட்டுகளை ஏறி மேல சென்றோம்...

மேலே சென்று நண்பனுடன் பேசி கொண்டு இருந்த சில வினாடிகளில் அன்று போல இன்றும் மேற்க்கு பக்க வானத்தை எதேற்சையாக பார்த்தேன்...

அந்த வட திசையில் நம் எல்லையின் பெரும் அரணாகவும் ஆண்மீக பேரானந்தமுமான அந்த கைலை மலை நம் சொர்க்க பூமி...

வாழ்வில் ஒரு முறையேனும் சென்றிட ஏங்கும் ஈசனின் இருப்பிடமான அந்த கைலை மலை 
மேகங்களால் உருவாக்கப் பட்டிருந்தது...

என்னை மெய்சிலிர்க்க வைத்தது, என் நண்பனை அழைத்து அவனிடம் காட்ட அவன் சாதாரண மேகங்களை காண்பது போல்...ம்....என்று கூறி கடந்தான்...

யார் எப்படியும் நினைத்து கொள்ளட்டும் அவர்களை போல என்னால் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை...

வணங்கினேன் ஈசனை என்னால் செல்ல முடியுமா என்று தெறியவில்லை கைலை நாதனை தேடி அவன் வசிக்கும் பொற்பூமிக்கு...

ஆனால் ஈசன் எனகழித்த அந்த தரிசனத்தை சாதாரணமாக என்னால் கடந்து விட முடியாது...

அது அவன் எனக்கழித்த வரம், நான் அங்கேயே நின்று பேராந்த்தில் ஈசனை வணங்கி வந்து அமர்ந்தேன் நான் அமர்ந்து 10 வினாடிகள் கூட இருக்காது...

மேகம் சட்டென்று மாறியிருந்தது நான் கண்ட அந்த காட்சி இருந்ததற்கான எந்த ஒரு சான்றும் இல்லை...

சாதாரண மேக கூட்டங்களாகவே மாறியாயிற்று...

நான் கண்கலங்கி அந்த பிட்டுக்கு மண்சுமந்த, ஈசனை அந்த திருவாச வரிகுடைய இல்லானே, உள்ளானே அன்பர்க்கு அன்பனே யாவையுமாய், ஜோதியனே.....நுண்இருளே....

என்ற வரிகள் மனதில் தோன்றிட அங்கேயே அமர்ந்து திருவாசகம் படித்து ஆர அமர இருந்து மெதுவாக அறைக்கு சென்றேன்...

இருந்தும் அவ்வளவு எளிதினில் என்னால் அந்த நிகழ்வில் இருந்து வெளிவர முடியவில்லை...

ஓம் நமசிவாயா...
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி...போற்றியே....

 







Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...