Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஒரு யோகியின் பிறப்பு (பகுதி மூன்று) Birth of Yogi ( Part 3 )

                              



நாங்கள் அங்கிருந்து எழுந்து நண்பனின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பாதை எங்கும் இருள் சூழ்ந்திருக்க வீடுகளில் மின்னும் மண்ணெண்ணை விளக்குகள் ஆங்காங்கே நிழல் படங்களை திரையிட்டுக் கொண்டு இருந்தன.

 நண்பன் முன் செல்ல நாங்கள் அவனைத் தொடர்ந்தோம். நண்பன் கையில் வைத்திருந்த சிறிய டார்ச் லைட் சரியாக வேலை செய்யவில்லை என்று கைகளில் வைத்து தட்டினான் அது அவன் எதிர்பார்த்த படி வேலை செய்ய ஆரம்பித்தது தவறாக.

குழந்தைகள் குளம், கறை என்று வட்டமிட்டு தாவி தாவி விளையாடும் விளையாட்டுப் போல வெளிச்சம், இருள் என்று கையில் வைத்திருந்த அந்த மின்னணு விளக்கு விளையாடிக் கொண்டிருந்தது அந்த கலியுக செயற்கை மின் மினியை தொடர்ந்தோம், மின்னணு விளக்கில் இருள் முடிந்து வெளிச்சம் வர தெருவில் படுத்திருந்த நாயின் கண்கள் சற்று மிரள செய்து விட்டது மனைவியும் என் மகனும் அலறி விட்டார்கள்.

பிறகு என்ன சொல்லவா வேண்டும் நாய்களும் அவர்களுக்கு இசைப்பாட்டு பாட ஆரம்பித்து விட்டது. அருகில் வீட்டு திண்ணையில் இருந்து ஒரு விளக்கு உயர்ந்தது அங்கு அமர்ந்திருந்த கிழவி ஒருத்தி யாருய்யா அது பரணியா என கேட்க ? நண்பன் இல்லை அத்தை நான் சக்கர என்றான் !! 

பொழுது போக்குகள் எல்லாம் ஒருவொருக்கொருவர் நாட்டு நடப்புகளை பேசி கொள்வது தானே !! யாரிடம் அசைபோடலாம் என காத்திருந்த கிழவிக்கு நண்பன் சர்க்கரை தொக்காக மாட்டியது போல தோன்றியது எங்களுக்கு.

நண்பன் லேசாக முனு முணுக்கிறான், இனி கொஞ்ச நேரம் விட மாட்டாங்களே என்று முளிக்கின்றான் காவலர்களிடம் சிக்கிய வழிப்போக்கன் போல.

 எங்களையும் விட்டு வைக்கவில்லை எனக்கு பள்ளியில் சேர்க்கை நடைபெறுவதைப் போல தோன்றியது அத்தனை கேள்விகள்.  இருந்தும் எனக்கு மனதளவினில் புன்னகை  தான் இருந்தது. 

என்னுடைய முப்பாட்டன் வரை யாருன்னு கேக்காம விடாது போலே என்று தோன்ற செய்துவிட்டால் கிழவி. பொறுமை இழந்த நண்பன் சக்கர, அத்தை மணியாச்சி அவனும் இனி கிளம்பனும் காலைல விவரத்த சொல்லுற என்றான்.

கிழவியோ ஆமா... ஆமா... பேசிட்டு இருந்ததுல மாட்டுக்கு வைக்கோல் போட மறந்துட்டேன்னு சொல்லிட்டு பாத்து போங்கயா வாரத்துக்கு நாலு பேர கடிச்சிடுத்துங்க இந்த நாய்ங்க, என்று சொல்லி பீதியை கிளப்பிவிட்டு திரும்பிச்சி. 

நண்பன் சொன்னான் ஊருலயே பழசு இது தான் நுறுக்கு மேல ஆச்சி வயது கேட்டா தொனுத்தூ ஒண்ணுனு சொல்லிட்டு திரியுது என்றான்.

 

மனதில் ஏதோ  ஒரு பாரம் தொற்றிக் கொண்டது போல உணர்வதாக நண்பன் சக்கரையிடம் கூறினேன். அவனுக்கு அது புரியவில்லை என்ன ஆச்சி என்று கேட்டான் ? 

ஆம் என் உணர்வுகள் எப்படி அவனுக்கு புரியும்!? எனக்கு அந்த ஊர் மிகவும் பிடித்து விட்டது. மாலை நேரத்தை விட இந்த இரவு எனக்குள் ஏதோ செய்கிறது என்று நண்பனிடம் கூறினேன்.

ஆம் அது உனக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் அந்த உணர்வு தொற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில். ஏன் என்று கேட்டேன் ?

அது தான் தவத்தின் வலிமை என்றான்.! நான் கேட்டேன் யாருடைய தவத்தின் வலிமை என்று ? நான் தான் கூறினேனே கோவிலில் வைத்து அந்த பூசாரி.. என்றான் நண்பன். 

அப்போது தான் எனக்கு நினைவு திருப்பியதாயுணர்ந்தது, ஆம் அந்த யோகியின் இரவு நேர தவம் நினைக்கு வந்தது. 

நண்பன் தொடர்ந்தான் இனி இரவு முழுவதும் ஐயாவின் தியான அலை அனைவரையும் அவர் வசபடுத்தும். 

பரிகாரங்கள், பிராயசித்தங்கள் தேடி பலர் வர கூடும் அவர்களில் பலர் கீல்சாந்தியின் அறிவுரை படி இங்கேயே தங்கியிருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பாவங்களை பொறுத்து அவர்களது விமோட்சனம் என்பார்கள். 

ஒரு இரவில் குணம் அடைந்து சென்றவர்களும் உண்டு மாதங்கள் பல இங்கேயே தங்கியவர்களும் உண்டு. காசியை போன்றதொரு முக்தியளிக்கும் புனித பூமியாக இன்னும் சில காலங்களில் எங்கள் ஊரும் மாறிட கூடும், என்றான் நண்பன் சர்க்கரை.  

இப்போதே கேட்டு தெரிந்து விட வேண்டும் என்ற ஆவலில் ஆம் பூசாரியின் முந்தைய ஜன்மத்தில் கோவில் வைத்து ஏதோ கூறினார் என்றாயே அது என்ன என்றேன் ? 

பூச்சிகளின் சத்தம் மனதை அதன் ரகசிய இருக்கையை பார்க்க வா என்று அழைப்பதாகியிருந்தது.

எண்ணங்களின் ஓட்டம் அப்படி. இருளினால் இடம் அறிந்திர வில்லை நாங்கள் நண்பன் வீடு வந்து விட்டது என்றான். 

இங்கே சிறிய கல் இருக்கிறது பார்த்து வாருங்கள் என்றான்! அந்த மின்னணு கக்கிய கடைசி பழுப்பு நிற ஒளியில் எனது மகன் அந்த கல்லை தாண்டி குத்திதான் சட்டன.

நான் டேய் கவனமா போட என்றேன்! வாங்க பா நீங்க மெதுவா  என்று வயோதிகத்தை  நினைவு படுத்தி சென்றான். எனது நண்பணோ சிரித்தான். அன்று இரவு உணவு நண்பன் சர்க்கரை  வீட்டிலேயே உண்டோம்.

மணி எட்டாச்சி இனி இங்கே தங்கி காலையில போகலாம் என்றான் நண்பன். எனது மனமும் அந்த வார்த்தையை எதிர்நோக்கியே இருந்தது. இருந்தும் மனைவிக்கு புது இடம் ஒத்து வராது என்பதனால் நண்பனிடம் இன்னொரு நாள் வருவதாக சொல்லி விட்டு அந்த ரிக்சாவில் ஏறி அமர்ந்தோம். 


மாமா அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வருவோம் நீங்க மீதி கதையை 
சொல்லணும் என்றான் எனது மகன்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அங்கும் இங்கும் விளையட்டு தனமாக
இருந்தான் இவ்வளவு சுவாரஸ்யமாக கதையை கேட்டிருக்கிறானே என்று!

அனைத்தியையும் உடனே கிரகித்துக் கொள்ளும் பருவ வயது ஆன்மீகத்தில் ஈடு படுவது மிகவும் நல்லது தான். 

என்று அகம் மகிழ்ந்தேன். நண்பன் கண்டிப்பாக வாங்க என்று வழியனுப்பினான். 

வீடு சேர்ந்து  முப்பது நிமிடங்கள் ஆயிற்று இன்னமும் மனம் நண்பனின் ஊரிலேயே உள்ளது. சாதாரண மனிதர்களுக்கே ஆயிரம் சோதனை கொடுக்கும் இறைவனிடமிருந்து யோகிகளும் தப்பிப்பது இல்லை தான். 

என்ன வித்தியாசம் என்றால் மனிதன் சோதனையை அறிவதில்லை யோகி உணர்ந்து கொள்கிறான்... 
 
யோகி வருவார்...
 
 
பேரொளியின் கருணை துகளில் இருந்து 
நான் 
பிரதீஸ்  

  



Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...