Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

காதலன் காமனின் புதல்வன்

 அவனுக்கு பெண்கள் புதிதல்ல, அவனை சுற்றி எப்போதும் பெண்களே உள்ளனர் அவனுக்கு மற்றைய ஆண்களை போல பெண்களை தன்னை பார்க்கும் படி ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் கிடையாது.

அவன் அவனுடைய இயல்பை எப்போதும் யாருக்காகவும் மாற்றியது இல்லை. அவன் பெண்களை ரசிப்பவன் அவர்களின் ரசிகன். ஆணழகன் இல்லை.

அவனை விரும்பாத பெண்கள் இல்லை. அவன் மீது மோகம் கொள்ளாதவளும் இல்லை. அவன் யாரையும் வேண்டாமென்று விலக்கியது இல்லை. தெளிவானவன் பெண்களிடம் காதல் வார்த்தைகளை கூறி அவர்களை நயவஞ்சகம் செய்து ஏமாற்றி அடைய அவன் பொறுக்கி இல்லை.

ஆனால் அவனை எப்படியாவது அடைய வேண்டுமென்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் இல்லை. அவன் மடி மீது சாய வேண்டும், அவனை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும், அவனுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்ற ஒரு காதல் பிரியம் தான் அது.



அவனது இயல்பான பேச்சு அவனை யாரிடமும் வெறுக்கச் செய்யாது. ஆண்களிடமும் தான் ஆனால் ஆண்கள் அவனை கன்னி ராசிக் காரன் என்று சொல்வார்கள். ஆனால் அவன் மிதுன ராசிக் காரன் என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

அவன் ஒளிவு மறைவு இல்லாதவன். எந்த பெண்ணிடமும் எந்த நிலையிலும் சில நேரம் ஊடலில் கூட அவன் ஆபாச வார்த்தைகள் பேசாதவன்.

அப்படி என்ன இருக்கிறது அவனிடம்? அனைத்து பெண்களும் விரும்புமளவு! என்றால் அது அவனுக்கு தெரியாது. ஆனால் அவன் பொறுமையானவன். அவனிடம் பேசும் அனைவருக்கும் பெரும்பாலான நேரங்களில் அவனுடைய பதில் அவனது புன்னகை மாத்திரமே.

அது ஒருவேளை பெண்களுக்கு பிரியமோ! இருக்கலாம் …இருக்கலாம் எதிர் கருத்தை எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள் தான். அவன் எளிதில் அவர்கள் நினைத்த மாத்திரம் அவர்களுடன் ஊடலில் பகிர்ந்திடாதவன்.

அது இயற்கையாய் நிகழ வேண்டும் என்று எண்ணுபவன். அதற்க்காக காத்திருக்காதவன். காமத்திற்காக ஏங்காதவன். ஊடலில் அவள் கண்களை ஆழ்ந்த புன்னகையுடன் ரசிப்பவன், அவன் பார்வையால் அவளை வெட்கம் கொள்ள செய்பவன்.

எந்த நிலையிலும் எந்த பெண்ணிடமும் அவன் ஆண்மையை இழக்காதவன். அவளை முழு எல்லைக்கு கடத்திச் செல்பவன். அந்த ஊடல் அவளை பண்பில் மாற்றமடைய செய்திருக்கும். சமனை வெளிவிடாதவன் பெண்ணை இன்பமுறச் செய்து தனது இன்பத்தை தள்ளிப் போடுபவன்.

அதுமட்டுமல்லாமல் அவனை அவன் இழக்க என்றும் நினையாதவன். கற்பு கரசன் இல்லை. அவன் காமனின் மைந்தன். அவனை காதல் செய்ய யாருக்கும் தடையில்லை அவனுக்கு தான் கூடியிருக்கும் பெண்களை அன்பால் கவர்பவன்.

அவர்களை பேச வைத்து இரசிப்பவன். அவர்கள் ஆசையை கேட்டு அதனை ஆச்சர்யமுடன் ஏற்பவன். அவனது நாட்குறிப்பில் “ எனக்கு நீண்ட நாட்கள் வாழ ஆசையில்லை நான் வந்த காரணம் தெரிந்ததும் அதனை நிறைவேற்றி விட்டு திருப்ப செல்ல வேண்டுமென்று குறிப்பிட்டு வைத்திருந்தான்”

யோசோதா அதனை ஏதேர்ச்சியாகா பார்க்க என்ன டா இது உனக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது இப்போ தானே கல்லூரியில் சேர்த்திருக்கிறாய் என்றாள்.

அவன் அவளுக்கு புன்னகையையே பரிசாக கொடுத்தான். 

என்னப்பா நீ என்ன அதிசய பிறவி தான் என்றவள் அவனுடன் அன்று இரவை பகிர்ந்து கொள்ள எண்ணினாள்.

அவனது குறிப்பேட்டை படித்தவளுக்கு அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. அவன் அப்படி என்ன எழுதியிருந்தான் என்பது பெரிய சரித்திரமெல்லாம் இல்லை.

அவனை சுற்றி வந்த பெண்களின் ஆசைகளை எழுத்து வடிவில் அவர்கள் பெயருடன் எழுதி கீழே இவைகள் நடக்கட்டும் என்று எழுதி வைத்திருந்தான். யாருக்கும் ஒருவரை பிடிக்க எந்த காரணமும் தேவையில்லை இருந்தும் வெறுமனே பிடிக்கும் என்பதற்கு பதிலாக ஒரு காரணத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அன்று யோசோதா நினைத்து போல அவனுடன் பொழுதை கழிக்க முடியவில்லை. ஆனால் இரவு முழுவதும் அவனுடன் தான் இருந்தாள். அவன் தனிமையில் இருந்த அந்த வீட்டின் மொட்டை மாடியும் நட்சத்திரங்களும் அவர்களுக்கு துணை.

அவள் தனது ஆடைகளை சிறிது இறக்கிக் கொண்டாள் அவன் அதற்கெல்லாம் மயங்குவோன் இல்லையே. ஆனாலும் அவளை தொடாமலே அவனது பரஸ்பர காதல் சக்தியை அவளிடம் பரவச் செய்தான். ஊடல் கொள்ளா ஊடலில் இருவரும்.

அவள் காதலன் காமனின் மைந்தன்.










Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...