Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஏண்டா Porn Addict ன்னா என்ன” ?

ஏண்டா Porn Addict ன்னா என்ன” ?

“ஹேய்… என்னடி ஆச்சி உனக்கு” ?எதுக்கு கேக்குற?

அவள்; சொல்லுடா சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான்.

அவன்; சரி மாமன் மகளாச்சேன்னு சொல்லுறேன்..!

அவள்; சொல்லு…சொல்லு….

அவன்; அது ஆபாச படங்கள் இருக்குதுல, தெரியுமா ?

அவள்; ஆமா தெரியும் சொல்லு…

அவன்; உனக்கு எப்படி தெரியும்?

அவள்; எப்படியோ தெரியும்டா சொல்லு..!

அவன்; அந்த படம் பாத்து பாத்து அப்படியே அதுக்கு பழக்கம் ஆகிருவாங்க. அப்புறம் அவங்களால அந்த படம் பாக்காம இருக்க முடியாதாம், அது தான் போர்ன் அடிக்டுன்னு சொல்லுவாங்க ect…ect….

அவள்; ஓ… ஏன் அப்படி ஆகுது ? ஏன் பாக்குறாங்க அத ?

அவன்; 😂😂😂 நல்லா கேட்ட டி, அதுலாம் எனக்கு தெரியல டேய். சரி நீ ஏன் இப்போ இத பத்திக் கேக்குற ?

அவள்; அதுவா…! அது வந்து கூட படிக்கிற பொண்ணுங்க எல்லாம் இத பத்தி யே பேசுறாங்க ஆனா எனக்கு இத பத்தி அவங்க கிட்ட பேச ஒரு மாதிரி இருக்கு. அவங்க அந்த படம்மெல்லாம் காட்டுறாங்க ஆனா எனக்கு எந்த பீலிங்கும் இல்ல ஏன்?

அவன்; அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் உணர்வு சம்பத பட்ட விஷயம். நீ அவங்க கூட சேர்ந்து இது எல்லாம் பார்க்காத டி. ஒழுங்க படி 

அவள்; போடா உன்கிட்ட கேட்டே பாரு என்று செல்லமாக தன் மாமாவிடம் கோபித்து கொண்டு இரவு தூங்க செல்கிறாள் கோபிகா.



இன்றைய தலைமுறையினர் வயதை விட அறிவில் அதிகம் வளர்ந்து விடுகிறார்கள். சுற்றி என்ன நடக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள அவர்களுக்கு பருவம் போதவில்லை ஆனால் ஒரு உந்துதல் கொடுக்கப் படுகிறது. சில வேளைகளில் அட்வைஸ் செய்பவர்கள் வழி தவறச் செய்யலாம். உணர்வுகளின் வசம் பிடிபடாதவர்கள் யாரும் இல்லை தானே.

இளம் வயது பெண்கள் மிகுந்த கவனத்தோடு தங்களை பாதுகாத்துக் கொள்வது சிறப்பு. அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரம் காட்டாமல், பொறுமையாக இருந்தால் அந்த அந்த வயது வரும் போது இயற்கையாக நமக்கு புரியத் தரும். அது வரை பொறு மனமே.

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...