Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

வார்த்தைகள்

நாம் பேசும் வார்த்தைகளுக்கு நிச்சயம் வர்ணங்கள் பூசியாக வேண்டும். இல்லை நான் இப்படித்தான் யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் என்று அவ்வளவு எளிதாக கூறி கடந்து செல்லமுடியாது!!

ஏனென்றால் நாம் பேசு வார்த்தைகள் அனைத்திற்க்கும் நாம் தான் பொருப்பு ஏற்று ஆக வேண்டும் வாய்க்கு வந்த படி பொருளற்று ஏதேனும் உளறி செல்லலாகாது !!

வார்த்தைகள் உண்மையில் அற்புத சக்தி கொண்டவை தான் நம் வார்த்தைகளால் ஒருவரை வீழ்த்தவும் முடியும், வீழ்ந்து கிடக்கும் ஒருவனை எழ வைக்கவும் முடியும்!!

சிரிக்க வைக்கவும் முடியும், அழ வைக்கவும் முடியும், சிந்திக்க வைக்கவும் முடியும், இந்த வார்த்தைகளும் அதற்க்கு முன் தோன்றும் எண்ணங்களும் தான் இன்று வரை உலகை ஆளுகின்றன!!

இந்த மாயாஜால வார்த்தைகளால் ஒருவரை அன்பில் கட்டி போட முடியும் என்றால் உண்மையில் எத்தனை அற்புத சக்தியை கொண்டிருக்கின்றன இந்த வார்த்தைகள், குறைவாக பேச வேண்டும் சிந்தித்து பேச வேண்டும், நேரம் காலம், இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பார்கள் 

ஆனால்! நாம் எத்தனை பேர் அதனை சரியாக கடை பிடித்திருப்போம்!? மேற்கூறிய அனைத்தும் புத்திசாலித்தனமான செயல்கள் ஆனால் நாமோ நமது புத்தியினை கழற்றி சற்று ஓரமாக வைத்துக் கொண்டு தான் பேசவே தொடங்குவோம்!!

ஆம்!! மனதில் என்ன தோன்றுகிறதோ அது அனைத்தையும் மடை திறந்த வெள்ளம் போல் கட கடவென பேசி முடித்து விட்டபின் தோன்றும் அமைதியில், மனதில் தோன்றும் எல்லாம் உளரிவிட்டோமோ என்று!! ஹா....ஹா....

பேசும் முன்பு எதை பற்றியும் யோசிப்பது இல்லை, பெரும்பாலும் நாம் தொடர்ந்து இதையே செய்கிறோம்...

இருப்பினும் ஏன் அதிகம் பேச வேண்டாம் என்று அனைவரும் கூறுவதன் பின்னணி தான் என்னவாக இருக்கும் என்று யாரேனும் சிந்தித்தது உண்டா?

அதிகம் பேசினால் வாக்கு வாதம் வந்து விடும் இல்லை சண்டை வந்து விடும் என்பதால இருக்கலாம் இருந்தும் முக்கியமாக நாம் பேசும் போது நமது சக்திதை அதிகம் செலவு செய்கிறோம் என்பது தான் உண்மை!!

பேசும் போது நம்முள் இருந்து அதிகபடியான பிராண சக்தி வெளியேறுகிறது இதனால் நாம் வெகு எளிதில் சோர்வு அடைகிறோம் என்பது அனுபவ அளவில் உண்மை 

உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றல் இதை செய்து பாருங்கள் கூட்டமான இடமோ அல்லது யாரும் இல்லாத தனிமையாகவோ இருக்கட்டும் கிராமபுறங்களில் இருப்பவர்கள் என்றால் வயல், தோப்பு பகுதிகளுக்கு செல்லுங்கள், நகர்புறங்களில் வசிப்பவராக இருந்தால் மாடியில் சென்று அமருங்கள் மாலை பொழுதுகளில் 

மாடியில் அமர்ந்து கொண்டு சற்று வானத்தை பாருங்கள், ம்....பார்த்து கொண்டேயிருங்கள் உங்களுக்குள் என்ன தோன்றுகிறதோ அந்த எண்ணங்களை கவனியுங்கள் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள்,  கவனித்துக்கொண்டே இருங்கள்.

இனி அப்படியே சற்று உடலை தளர்வாக்கிக் கொண்டு மெதுவாக ஒரு ஆழ்ந்த சுவாசம் செய்து கொண்டு கண்களை மூடி அமர்ந்த படியே தூங்குங்கள், எந்த கேள்வியும் கேட்காதீர்கள் அமர்ந்து கொண்டே உறங்குங்கள்,

உடலில் ஒரு புதுவித மாற்றம் உறுவாகும் அந்த மாற்றத்தினை உணருங்கள் இதனை தொடர்ந்து செய்யுங்கள் நீங்கள் உண்மையில் ஒரு ஆக சிறந்த சிந்தனையாளராக மாறுவீர்கள்!!

உங்கள் வெற்றி உங்களாலேயே சாத்தியம்!!

நன்றி

வாழ்வோம் வளமுடம்


Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...