Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

போகும் பாதை

தவிப்புகள்
தன்னடக்கம்
தலைசாய்வு
இவைகள்
பெண்ணின் 
குணமாம்.

பொக்கிஷங்களை தொலைத்த பெரியதொரு காவிய கதை ஒன்று காதலை மையம் கொண்டு திளைக்குமோ?

தோன்றல் எல்லாம் தோற்றுப் போகும் போது மீதம் இருக்கும் நம்பிக்கை மட்டுமே வாழ்வின் மிச்ச தூரத்தை கடக்க செய்யுமோ?

போகும் பாதையை தேர்வு செய்து இன்னும் பயணத்தை தொடங்காமல் காலத்தை தானாக கரைபுறண்டு ஓட செய்து வேடிக்கைப் பார்ப்பது என்ன நிலை?

பிறந்தாயிற்று ஏதோ ஒன்றை தர்மமாக செய்து அல்லது தர்மத்தின் பாதையிலாவது செல்ல பழகி கொள்ளலாம் என்றால்,
தர்மம் என்றால் எதை செய்வது என்ற கேள்வி தோன்றுகிறது...

இருப்பது அனைத்தையும் தர்மமாக கொடுத்து விட்டு ஆண்டியாக காசி சென்று விடலாமா என்று, ஆமாம் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டால் காசிக்கு எப்படி செல்வது என மனம் கேட்க 
நடந்து தான் என்று உன் மனம் ஒன்று கூற நாம் அமைதியாக இருந்தாலும் வெளியுலகத்தோரோடு எந்த வாக்கு வாதமும் இல்லாவிட்டாலும் அகத்தில் கூச்சலும், வாக்குவாதமும், குழப்பமும் ஒரு போதும் தீர்ந்த பாடில்லை...

இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் மாறாமல் இருப்பது இந்த அகத்தில் நடக்கும் கேலிகளும் கூத்துகளும் தான்

பல நேரங்களில் இவைகளை சத்தமாக பேசி விட தோன்றும் நடந்து செல்லும் வழியில் நமக்கு பிடிக்காத ஒருவனை சத்தமாக திட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் அடிகடி வரும் இருந்தும்

சித்தம் கலங்காததனால் அனைத்தை கட்டு படுத்திக்கொண்டு அப்படியே கடந்த காலங்கள் பல...

பாதைகள் எப்படி கிளை கொண்டு முடிவில்லாமல் செல்கின்றனவோ அப்படியே தான் இந்த மனதின் அலைவரிசையும் ஒன்று போனால் இன்னொன்று!!

தனிமையில் அமர்ந்து இருக்கும் போது நான் பலமுறை கோவம் கொண்டு பேசாமல் இருந்த நாட்கள் உண்டு இருந்தும் அவன் இல்லாமல் பேச்சில்லையே அது, ஆம் எண்ணங்களை தான் கூறுகிறேன்.

போட்டி ஒன்று துவங்கும் முன்பே இதில் நீ தான் அதிக ரன் எடுக்க போகிறாய் முதல் பந்திலயே சிக்சர் அடிக்க போகிறாய் என்பான் மிகுந்த ஆர்வத்துடன் நமக்கு தராதா பேட்டிங்கையும் சண்டையிட்டுக் கொண்டு மட்டையை வாங்கி ஒரு மாவீரனைப் போல் தோரணையில் களம் இறங்க தயாராகும் வேளையில் அவன் சொல்வான்

முதல் பந்திலயே அவுட் ஆனா கேவலம் முதல் பந்து பேட்டில் மீட் மட்டும் பண்ணு என்று ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை ஒரு பதட்டத்திலேயே கொண்டு போக அவனால் மட்டும் தான் முடியும்

இன்னும் எத்தனை நாட்கள் தான் உன் ஆட்டம் பார்க்கலாம் ஓர் நாள் உன்னை ஓட ஓட விரட்டத்தான் போகிறேன் என எனது எண்ணங்களிடம் சவால் விட்டிருக்கிறேன்...

நன்றி

பேரொளியின் கற்பனையிலிருந்து 
நான் 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...