Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

சுயநல பூமி


செட்டியாரு அவரோட தோப்ப சுத்தி பாக்குராரு பலவருடம் நெல் விவசாயம் நடந்த இடம் விளைச்சல் குறைவு விலைவாசி இல்லாததுனால் தென்னையை கொண்டு நட்டாங்க தேங்காய் வியாபாரம் கொடி கட்டி பரந்துச்சி இங்க நிக்கிர தென்னுங்களுக்கு எல்லாம் குறைந்தது 40 வயது இருக்கும் இப்போம் கொஞ்சம் வருடமா தென்னைக்கு ஊடுபயிரா வாழை போடுராங்க எல்லாம் நேந்திர பழ வாழை இங்க இருந்து எல்லாம் கேரளாக்கு வியாபாரத்துக்கு போகுது நல்லா லாபம் தந்த தொழில் தா புயல் ல நிறைய சேதாராம் ஆச்சிது அப்புறம் இந்த கொரோனா னால வியாபாரம் எல்லாம் முடிங்கி போச்சி 

எல்லாம் சாதாரண விசியம் இல்ல விவசாயிக்கு தான் அதோட கஷ்டம் தெறியும்...

செட்டியார ஊருல இருந்து ஒரு பயன் போய் பாக்குறான் 

பையன்;  ஐயா வணக்கம்

செட்டியாரு : வணக்கம் தம்பி வாங்க
நீங்க...

பையான் ; ஐயா நான் செல்லகண்ணு பயன் 

செட்டியார் ; அவரோட பயனா நீ அதான  எங்கயோ பாத்த மாதிரி ஞாபகம் அப்பா எப்படி இருக்காரு?

பையன் ; அவருக்கு முன்னால மாதிரி உடம்பு முடியல 

செட்டியாரு : என்ன என்ன ஆச்சி

பையான் ; ஐயா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் 
நீங்க விவசாயம் பண்ணுரிங்க ஊருல 70% சொத்து உங்களோடது தான் இங்க மட்டும் இல்ல நிறைய ஊருல உங்களுக்கு சொத்துகள் நிறைய இருக்குது எல்லா இடத்துலயும் வாழை தென்னை எல்லா பயிரும் விவசாயம் பண்ணுரீங்க எல்லாத்துக்கும் செயற்கை உறம் தான் வெக்குறீங்க அத மாத்த முடியாது உங்கள பொருத்த வரை இது தொழில் முதலுக்கு அதிகமா வருமானம் வரணும் அது தான் உங்களோட போராட்டமா இருக்கும்

ஆனா எங்களுக்கு வாழுரதே போராட்டமா இருக்குது. நீ வியாபரம் பண்ணுர பொருள தான் நாங்க வாங்குரோம் செயற்கை கலந்தது தான் சரி பரவால சின்ன சின்ன செடிகளா நீங்க பாக்குர இதோட நிறைய மூலிகை செடிகளும் கலந்து இருக்குது நீங்க தோப்பு கழைக்குறது நல்லது ஆனா அதுக்கு முன்னாலா எல்லா செடிகளுக்கும் களை கொல்லிங்குற விசத்த தெளிச்சி செடியோட சேத்து எல்லாத்துக்கும் மண்ணுக்கும் மனுசனுக்கும் விசத்த தெளிக்கிறீங்க ஊருல வாழுற மக்கள் எல்லாம் இந்த காத்த தான் சுவாசிக்கிறாங்க உங்க கிட்ட வேலை செய்தவரு தான் எங்க அப்பா களை கொல்லி அவரு தான் அடிச்சிட்டு இருந்தாரு இப்போம் மூச்சுத்திணறல் சுவாச கோளாரு ஏற்பட்டு படுத்த படிக்கையாகிட்டாரும் எனக்கு வந்தது எங்க ஊர் மக்களுக்கு வர கூடாதுனு தான் உங்க கிட்ட சொல்லிரேன் 

உங்களோட வாழ்க்கையை முன்னேற்ற எங்க உயிர எடுக்குரீங்க 

மிஞ்சி இருக்கிற கொஞ்சம் மூலிகைகளையும் மக்களளையும் காப்பத்த உங்கள போல முதலாளிங்கதான் முதல்ல மாற்றத்த கொண்டு வரணும் ஆளும் வர்க்கம் மாறுனா சாதாரண மனுசன் அவனும் மாரிடுவான்.

நம்மளோட அடுத்த தலைமுறைங்களுக்கு விதையை விருட்சமா மாத்துரது மன்னுக்கு தெறியாம போய்ட கூடாது மண் மலடானா மானுடன் மட்டும் இந்த இந்த உலகமே கரிகோள் பந்தாகும்...

செட்டியாரு வீட்டுல போய் உக்காருராரு அவரால அமைதியாக இருக்க முடியல அவரு மனசுல திரும்ப திரும்ப அவன் சொன்ன வார்த்தைகள் கேக்குது அவரு எல்லாரயும் இயற்கை உரத்துக்கு மாற சொல்லுராரு...

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...