உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
நிஜம் என்று தான் நினைத்து இருந்தேன்
நித்தமும் உன் சேவை கண்டு!!
நிழல் தான் நான் என்று ஊர்ஜிதப்படுத்தினாய்
உன் பிரிவை எனக்கு தந்து!!
கடல் என்று தான் ரசித்து இருந்தேன்
பெரும் பிரளயமாகி மூழ்கடித்தாய்!!
புல்வெளி தான் என்று கிடந்துருண்டேன்
பூகம்பமாய் விழுங்கி விட்டயாய்!!
சுவாசத்தின் நேசத்தில் தனித்திருந்தேன்
வேசம் என்றாகி விலக்கி விட்டயாய்!!
வெறுப்பினில் வெம்பி தவித்திருந்தேன்
பொருபெனும் வேட்கை தந்து மறைந்தாய்!!
பொருப்பினை ஏற்க மறுத்தேன்
உறவுகள் என்னும் ஊஞ்சல் தந்தாய்!!
ஆடிட மறுத்தேன்!!
ஆட வைத்தாய்!!
ஆடி கொண்டு இருக்கின்றேன்!!
என்று அருபடுமோ உறவெனும் ஊஞ்சல் கயிரு!!?
Comments
Post a Comment
நன்றி