உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
கார்மேக
கூட்டங்கள்
தழுவும்
மலை
முகடுகள்!!
காதலில்
தவிக்கும்
மலை
நான்!!
காற்றோடு
கலந்து,
கறைந்து
உன்னோடு
மிதக்க
எத்தனிக்கிறேன்!!
நானோ
நிலையானவன்!!
நீயோ
நிலையற்றவள்!!
என்னை
தழுவி
செல்கையில்
என்
உயிரையும்
ஏங்க
செய்கிறாய்!!
உன்
பின்னாலே
எழுந்து
ஓடி
வர
நினைக்க
செய்கிறாய்!!
நடு
வானின்
வீதி
எங்கும்
அலைந்த
களைப்பு
உனக்கு!!
நெடுனாளாய்
அமர்திருந்த
களைப்பு
எனக்கு!!
காற்று
வீசும்
திசை
எங்கும்
அழைப்பு
உனக்கு!!
காற்றை
திசை
திருப்பும்
பொருப்பு
எனக்கு!!
வானெங்கும்
பறக்கும்
தேவதை
நீ!!
வானுயர்ந்து
நிற்கும்
அரசன்
நான்!!
என்னை
உன்னில்
புதைக்கும்
போதொல்லாம்
புத்துயிர்
பெருகிறேன்
நான்!!
உன்னிலேயே
புதைந்திருக்க
செய்
எந்தன்
கார்மேக
காதலே!!
Comments
Post a Comment
நன்றி