உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
அழகு சோலை
நடுவே மலர்களின்
நறுமணத்தினுடே
மனம் கவர்ந்த நாயகி
கைபிடித்து நடக்கையில்
கலையும் கனவின்
ஏமாற்றம்!!
கடைசி பந்தில்
எடுக்க வேண்டிய
ஆறு ரண்களின்
எதிர்பார்ப்பு!!
சிறுத்தையின்
கால் பிடியில்
இருந்து உயிர்பிழைக்க
போராடும் மானின்
வேதனை!!
கற்பனை மட்டுமே
வாழ்வு முழுவதையும்
கடந்தும்
பார்வையற்றவனின்
ஏக்கம்!!
காரிருள் சூழ்ந்த
வனத்தில் தனிமையில்
தவிக்கும்
ஒருவனின்
பயம்!!
காரணம் ஏதும்
இல்லாமால் கத்தி
கூச்சலிட்டு சிறிக்கும்
பைத்தியகாரனின்
சிறிப்பு!!
இவையெல்லம்
ஒரு சேர ஒரே
பொழுதில்
அத்தனையும்
என்னை சூழ்ந்து
கொண்டாயிற்று!!
Comments
Post a Comment
நன்றி