Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

பயணத்தின் விழிம்பினில்


மானுட 
வேடமிட்டு
நாடக
மேடையேறி
நடிக்க
நடிக்க
நடிப்பு
வராமால்....

நடுக்கம்
பல
கண்டு
வேடம்
கழைய
முடியாமலும்....

நாடகத்தின்
சாரம்
அறியாமலும்
அதனை
அறிந்திட
முற்படுகையில்
அரேங்கேற்றம்
முடிந்தும்
போக...

என்ன
தான்
இந்த
வாழ்வு
என்று...

வாழ்வை
தகர்த்த
போராடுகையில்
தத்துவங்கள்
ஆயிரம்
முன் 
வந்து
விழுகின்றன...

படிக்க
படிக்க
எல்லாம்
எனக்கே
எழுதியதாக
உணர்கிறேன்...

என் ஈர்ப்பு
எல்லாம் 
தத்துவத்தின்
சாரல்
விழும்பினை
கவ்வி
கொண்டு
வாழ்வையும்
நகர்த்தியது...

வாழ்வு 
இது 
தான்
என்றது...

எத்தனை 
உயிர்கள்
மண்ணில்
ஜனித்தாலும்.
ஒவ்வொன்று
-க்கும்....

காரண
காரியங்கள்
மட்டுமே
அதன்
பிறப்பின்
காரணமாக
இருக்கும்...

மனிதன்
இத்தனை
வகை
அவன்
செயல்
இத்தகையது...

இந்த 
நிகழ்வில்
இப்படி
தான்
செயலாற்ற
முடியும்...

என 
அனைத்தையும்
புரிந்தாய்வு
செய்யும்
படி
விட்டு
விட்டான்....

புரிதலின்
பக்குவம்
ஏற்படின்
உன்னை 
எந்த 
நிகழ்வும்
ஏதும்
செய்திட
இயலா....

எல்லாம்
புரிந்து
விடும்....

உன்
மனம்
உன்னை
வருந்த
செய்ய
முடியாது....

உன்
மனம்
உன்னை
மகிழச்
செய்ய
முடியாது....

நீ ஒரு 
மாபெரும்
மலையை
போல
உணர்வு
கொண்டு
செயற்று
ஆரவாரமற்று
உன்னுள்
நீயே
ஐக்கியமாகி....

பேரமைதியின்
பேரானந்தத்தில்
திழைத்து
இருப்பாய்....

அன்று
தோன்றும்
இதற்க்கு
தானா
இத்தனை
ஆர்பாட்டங்கள்
என்று...

அனைவரும்
வாருங்கள்
நான் 
உங்களை
வேறொரு
நிலைக்கு
மாற்றுகிறேன்
என்று
அழைப்பு
விடுப்பாய்....

நீங்கள்
தேடுவது
உண்மையில்
நிறந்தர
ஆனந்தமற்றது
என்பாய்....

சிதறிய
சர்கரை
துண்டுகளை
சுவைக்க
வந்த
எறும்புகளாக...

கூட்டம்
அலை
மோதும்
இனிப்பு
சற்று
குறைந்து
விட்டாலும்
வேறொரு
சுவை
தேடி
அலையும்...

அந்த கூட்டம்
கடைசி
வரை 
தேடி
அலைந்து
கொண்டே
இருக்கும்....

நீ 
எடுத்துரைக்க
விரும்பியது
இனிப்பை
எப்படி 
நாம் 
இருக்கும்
இடம்
தேடி
வரவைப்பது
என்ற
இரகசியத்தை...

ஆனால்
தேடி
திரியும்
அந்த
எறும்புகளுக்கு
அத்தனை
பொறுமை
இல்லை....

அவர்கள்
காலம்
முழுவதும்
தேடிகொண்டே
இருக்க
விரும்புகின்றனர்...

காலம்
அவ்வளவு
எளிதினில்
எதையும்
கொடுத்து
விடுவதும்
இல்லை...

அது
பயணிக்க
துவக்கிய
பின்பு
தானே
புறியும்...

பயணம்
இனிதே
ஆரம்பமாகட்டும்
ஒவ்வொரு
எறும்பிற்க்கும்...



ஓம் நமசிவாய


பேரொளியிம் கருணை துகளில் இருந்து நான்

பிரதீஸ்

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...