Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஒரு கஞ்சனின் கதை


                பல நேரங்களில் இந்த வாழ்வின் பயணம் புது புது மனிதர்களை நமக்கு அறிமுகம் செய்யும் என்பதில் எந்த ஆட்சோயப்பனையும் இல்லை, எதார்த்தமான பயணத்தின் போது நடக்கும் பல சுவாரஸ்ய தருணங்கள் வாழ்வின் எந்த நொடியும் மறப்பதில்லை. ஆம் சில வருடங்கள் முன்பு சிங்கம் சிங்கம் என்று தான் அவர் என்னை எப்பொழுதும் அழைப்பார் அவருடைய வேலையை எளிதாக்க மட்டும் இல்லை என் தோற்றத்தை கொண்டும் அப்படி என்று விளக்குவார் பல தருணங்களில்,

யாருடனும் அதித நெருக்கம் காட்டிட விருப்பம் இல்லாது நான் நினைப்பது போல் எண்ணத்தில் உதிக்கும் இடம் அலைந்து பயணத்தை இரசிக்கும், இராட்ஷசன் நான் என்பது எனக்கு நானே கொடுக்கும் பட்டம்.

காலம் பல அனுபவங்களை கொடுக்கும் அதனை பாடமாக அறிந்து கொண்டுவிட்டால் நம்மை போல சிறப்பான மனிதன் யாரும் இல்லை பல உபதேசங்கள் கொடுக்க அவனுக்கு தகுதியும் இந்த இயற்கை கொடுக்கும்.

அவர் அன்று முதல் நாள் என்னை சந்திக்கிறார் நான் முதல் முறை பார்க்கிறேன் அவரை, ஆனால் பல முறை கேள்வி பட்டிருக்கிறேன் ஆம் அவர் பெயர் மூர்த்தி சிறிது உயர் குறைந்த மனிதர் டான் 4.2 அங்குலம் இருப்பார் தோராயமாக தமிழ் நிறம் ஆங்காங்கே சிறிது நறைத்த முடி சிரித்த முகம்.

இப்படி கூறிக்கொண்டே போகலாம் என்னை நேரில் யாரும் பார்க்கவில்லை என்றாலும் என்னை அனைவருக்கும் தெரியும் வேளையில் சேர்ந்து சில நாட்களிலேயே பல புது புது வியூகங்களை செயல்முறைக்கு கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற செய்திருந்தது இயற்கை.   

அதனால் என்னை பார்த்ததும் அவரால் என்னை அறிந்திருக்க முடிந்தது என்னை அடையாளம் கண்டு கொண்டார் நீங்கள் தான் அவரா என்கிறார் நான் ஆம் நீங்கள் ? என்றேன் அவர் அவரை அறிமுகம் செய்து கொண்டார் பார்க்க சிங்கம் பாதிரி இருக்கியே பா என்கிறார் நான் பணிவாக சிறிய புன்னகை கொண்டேன் கடந்து செல்ல ஆயத்தம் ஆனேன், சரி உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி நீங்கள் செய்த வேலைகள் சிறப்பானது என்கிறார் நன்றி என்று புன்னைகைத்தான், 

சரி சிறுது வேலை உள்ளது நான் உங்களை பிறகு சந்திக்கிறேன் என்று அவரே கூறிவிடடார். மனம் லேசானது புதிதாக இப்படி யாராவது பேசும் பொழுது அதனை தொடர தெரியவில்லை, இதை தவிர்த்து பணி சம்மதமாகவோ அல்லது தெரிந்த வேறு ஏதாவது கருத்தை பற்றியோ யாராவது பேசினால் அவர் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் அங்கு நம்முடைய கருத்து தான் முதலாக இருக்கும்.

சரி நான் யார் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம் ! நான் தான் மாறன் எனது ஊர் தூத்துக்குடி அருகினில் குருவிருந்த திருவூர் என்ற ஊர் என்னுடைய ஊர், 

நான் பணிபுரியும் இடம் பாளையம் அங்கு தான் நான் அந்த மனிதரை சந்தித்து பழக நேர்ந்தது.

தொடரும்... 

கஞ்சனின் வாழ்கை

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...