உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
நம்மை நாம் யாரிடமோ நிரூபிக்க
நினைக்கிறோம் அதற்காக முயற்சி
செய்கிறோம்,
அது பணிக்காகவோ! அல்லது வியாபரத்திற்காகவோ! ஏதோ
தொழிலுக்காகவோ இருக்கலாம்.
நாம் ஏன் நம்மை நிரூபிக்க வேண்டும்?
நம் திறமைகள் இங்கே பணமாக்க
படுகின்றன, பாராட்ட படுகின்றன,
பணம், பாராட்டு இவைகள்
இல்லையென்றால் இந்த
திறமைகள் என்னவாயிருக்கும் ?
ஏதோ ஒன்று வாழ்வின் தேடுதலாக்க
பட்டிருக்கும் நிச்சயம், அது உணவாக
இருக்கும் பட்சத்தில் விளைச்சலை
பெருக்க அந்த திறமையை பயன்படுத்தியிருப்போம்.
ஆம், இப்போது புரிந்திருக்கும்
இது எங்கிருந்து ஆரம்பமானது
என்று, நான்கு பேர் மட்டும் தனி
தனி தீவுகளில் விட பட்டனர்
ஒரு தீவுக்கு ஒருவர் வீதம்
அவர்கள் வாழ்வின் நாட்களை
அதிக படுத்திக் கொள்ள உயிர்
வாழ கிடைப்பதை உண்டு இருப்பதை
அடுத்த நாளுக்கு பயன்படுத்த
ஆரம்பித்தனர் அங்கு துவங்கியது சோம்பல்...
பேரொளியிலிருந்து நான்
பிரதீஸ்
👍
ReplyDelete