Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

நான் நினைத்திருந்தேன்

நான் நினைத்திருந்தேன் காலம் மிகவும் மெதுவாக நகருகிறது என்று! 
 
அன்று ஏற்பட்ட விபத்து தான் காலத்தின் வேகத்தை உணரச் செய்தது.! 

ஆம் மாலை நேரம் அது லேசான சாரல் மழை தூற துவங்கியிருந்தது கடைத்தெரு வரை செல்ல வேண்டுமே, அம்மாவிடம் கேட்டேன் கண்டிப்பாக போக வேண்டுமா என்று அம்மாவோ வேணா டா பேய் மழை பெய்யுது ஏதாவது பண்ணிக்கலாம் நீ எங்கயும் போக வேண்டாம் என்றாள், நானோ நக்கலாக இது பேய் மழையா அப்போம் பேய் மழை பெஞ்சா என்ன சொல்லுவா அட போமா நீ வேற இப்போம் தான் மழை தூறவே துவங்குது என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்....

 ஆனால் மனமோ கடைக்கு போகலாம் மழையில் நனையலாம் என்று  கூருகிறது, அம்மா போ என்று சொல்லியிருந்தால் நான் ஒன்னும் போகல மழை பெய்யுது போ என்று கூறியிருப்பேன், ஆனால் அம்மாவோ போக வேண்டாம் என்றதும் போக வேண்டும் என்று தோன்ற.
 
 சரி என்று அம்மாவிடம் கூறி விட்டு வராண்டாவில் நிறுத்தியிருந்த பைக்கை எடுத்தேன் சத்தம் கேட்டு அம்மா ஓடி வந்தாள். உன்கிட்ட என்ன சொன்ன இந்த மழைல எங்கயும் போக வேண்டா என்று தானே சொன்னேன்? என்றால்! நானோ இருமா இப்போம் வந்துடுவேன்னு அவ கைய தட்டி விட்டுட்டு பைக்கை எடுத்துட்டு கிளம்பினேன் 

மழை தூறல் சிறிதானாலும் சாலைகளில் ஈரம் சற்று அதிகமாகவே இருந்தது, அந்த தெரு நேரானது தான் ஆனால் ஐந்து மீட்டர் இடைவெளிக்கு ஒரு குறுக்கு தெரு செல்லும் வீடுகள் குறைவு தான் வாகன போக்குவரத்தும் குறைவுதான் வீட்டிற்கும் ஒரு பைக் இருப்பதே அரிது தான். 

கிராமம் என்பதால் அனைவரும் நடந்து சென்றே பழக்கப்பட்டு இருந்தனர் எனது வீட்டை சுற்றி ஐந்தாறு வீடுகளுக்கு அவசர தேவைகளுக்கு எனது பைக்கே பயன்படும் என்றால் யூகித்துக்கொள்ளுங்கள். 

அந்த சரால் மழையினால் கசிந்து ஓடும் மழை நீரை இருசக்கர வாகனத்தில் மெதுவான வேகத்தில் கடக்கும் போது ஏற்படும் அந்த உணர்வு எங்கும் கிடைத்திடாது. 

பைக் டயர்கள் சாலைகளில் கசிந்து ஓடும் நீரை கிழித்து செல்லும் அந்த  ஓசை...ம்... 
இன்னும் சொல்லப்போனால் மழை சாரல்கள் மரக்கிளை இலைகளில் விழுந்து தழுவுவது மத்தளத்தில் மேல் நீர் துளிகள் ஒவ்வென்றாக விழுந்து எழுப்பும் அந்த இசை தரும் இனிமையை ஒத்தது. 

கருமேகங்கள் பின் மறைந்தாடும் சூரியனின் மங்கிய ஒளிகள் என எல்லாமே என்னை எங்கேயோ கடத்திச் செல்ல சட்டென பைக்கின் முன் குதித்த அந்த சிறுமி நான் செய்வதறியாது தடுமாறி பிரேக்கை கடுமையாக அழுத்த!

 அழுத்திய வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தேன் அந்த சிறுமிக்கு எதுவும் ஆகவில்லை அதுவரை சந்தோசம் என எண்ணி திருப்புவதற்கு முன் குதித்த வேகத்தில் அவள் மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டாள். 
 
நான் மெதுவான வேகத்தில் சென்றிருந்ததால் கட்டுப்படுத்த முடிந்தது, மழை நீரால் தெருவில் கசிந்த மணல் பைக்கை சறுக்கிவிட்டது நல்ல வேளை என்று மனம் ஏதேதோ சித்தரிக்க. 

சரிந்து விழுந்திருந்த என் மீது பைக் விழுந்து கிடக்கிறது எனக்கும் சிறிது கால்களில் சாலை தேய்த்துவிட்டுருக்க வேண்டும் அப்படி தான் காலில் சிறிது எரிச்சல் இருந்தது. 

சரி முதலில் யாரும் பார்க்கும் முன் இங்கிருந்து நகருவோம் என்றெண்ணி எழுந்திருக்க முயற்ச்சித்தேன் நகர கூட முடியவில்லை மனம் சிறிது படபடத்தது அந்த மாலை நேர மழை சாரல் பொழிய, இளம் தென்றல் வீசும் வேளையிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

 எனக்கு நானே ஆறுதல் அளிக்க முற்படுகிறேன் மனமோ என்னை ஏதேதோ கூறி என்னை திக்குமுக்காட செய்கிறது, 
 
அந்த சிறுமி அதற்குள் அவள் அம்மாவை அழைத்து வந்து விட்டால் அந்த தாய் வந்து பார்த்துவிட்டு ஓடி வந்து பைக்கை நகர்த்த முயற்சித்தார்கள்,

 அவர்களால் முடியவில்லை வேகமாக சென்று தனது கணவரை அழைத்து வந்தார்கள், இருவரும் சேர்ந்து பைக்கை நகர்த்த நானோ எப்படி எழுந்திருப்பது என்பதை மறந்தவனாக எண்ணங்களின் பயமுறுத்தலில் இருந்து மீளாதவனாக சித்தம் கலங்கியவனாக உணர்கிறேன்.
 
 அவர்கள் என்னை ஐயா ஐயா எழுந்திருங்க என்று அழைக்கும் போது தான் என் நினைவலைகள் என்னை கேலி செய்வது போல் உணர்ந்தேன் ஆம் என் பெயர் சந்திரசேகரன் வயது அறுபத்து மூன்று அம்மா இரவு உணவு சமைக்க காய்கறிகள் வாங்கவர சொன்னால் அவளோ எண்பத்தி ஐந்து வயதிலும் அவ்வளவு சுறு சுறுப்பாக உள்ளாள் விழுந்த என்னால் எழ முடியாத போது தான் நினைவுக்கு வந்தது காலம் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதையும், அம்மா அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தையும் ஒரு கல்யாணம் பண்ணியிருந்தியனா கொள்ளு பேரனையும் பார்த்திருப்பேன்னு.

நன்றி   

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...