Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஏன் காமம் கூடாது என்கிறீர்கள்?

 ஏன் காமம் கூடாது என்கிறீர்கள்?



கூடாது என்று கூற கூற!! அது கூடி கொண்டே அல்லவா செல்லும், இது உணர்வுகளுக்கு மேல் தொடுக்கும் வன்முறையல்லவா!?

ஏன் செல்ல பிராணி களாகவே இருக்க விரும்புகிறோம்?

யாருடைய விருப்பங்களுக்காக ஓடிக் கொண்டு இருக்கிறோம்?

கடமைகளுக்குள் கட்டுப் பட்டு விட்டால், கடைசி வரை போராட்டம் தான் கவலைகளுடன்!!(வாழ்வுடன்)

ஒரு உயிரின் வளர்ச்சியையும் வளரும் சூழ்னிலையையும் யாரோ தீர்மானிக்க! 

ஏன் இந்த தனித்தனி அறிவு? தனித்தனி வடிவமைப்பு !!

ஒரு 🐰 முயல் அழகாய் பிரந்தது பாவமா?

மானிடரிடம் அகப்பட்டு தன் சுகந்திரத்தை இழந்து சோம்பல் பட்டு உண்டு உறங்க பழகி விட்டது !!

பழக்கப்படுத்தியது நாம் தான் !!

உதாரணத்திற்கு முயலை குறிப் பிட்டேன் ஆனால் !?

எத்தனையோ உயிர்கள் அல்லல் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன;

உல்லாசமாய் வாழ வேண்டிய வாழ்வை மனம் கனமாய் கூண்டிலே அடைபட்டு அல்லல் உறுகின்றன;

இப்படி தான் காமமும் அது அடைத்து வைக்கபட வேண்டியது அல்லவே!!

அது என்ன என்று தெரியாத வரை யாருக்கும் பாரம் இல்லை!!

ஆனால் நீங்களோ ! எங்களை சுற்றி மற்றும் எங்களுக்குள்,…

கடுமையான ஆபாசங்களை அல்லவா விதைக்கின்றீர்கள்!?

இந்த காலம் மாற்றத்திற்கான காலம், மாற்றத்தினில் மத்தியில் சிக்கிக் கொண்டது எங்களுடைய தலைமுறை மட்டுமே!!

இருந்துவிட்டு போகட்டும்…

ஆனால் நீங்கள் எதை மறைக்க முயற்சி செய்தீர்களோ!?

அதுவே தானாகவே இன்று வெளிப் படை யாகிக் கொண்டு இருக்கிறது!!

காணும் இடம், செல்லும் இடம் என எல்லா இடங்களிலும் ஆபாசத்தை நிரைத்து வைத்துள்ளீர்கள்!!

ஆனால் பார்க்க தடை விதிக்கப்பட்டது!!

அம்மணமாய் உருவாகிய நாம் மீண்டும் அம்மணத்திற்க்கே மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்;

செடியில் புதிதாய் துளிரும் கிழையைப் போலவே தான் காமமும்!!

அது துளிரும் போது அதனை கிள்ளி எறியாதீர்கள்;

அதற்க்கான சுகந்திரத் தைக் கொடுங் கள்; 

துளிரும் இடத்தினில் ஏதேனும் தடை இருந்தால் அந்த மரக் கிளை அது சுகந்திரமாய் வளர வழி தேடி செல்லும்..

அதை தடுத்திட முடியாது சிறிது நாட்களில் இருந்த தடைகளை எல்லாம் தகர்ந்து எறிந்து விட்டு அது பிரமாண்டமாய் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும்….

அது போலத் தான் வேண்டாம் வேண்டாம் என்று கூற, கூற அது வேண்டும், வேண்டும் என்று மனம் கிரகித்துக் கொள்ளும்…

அதன் வேகம் கூடும்…

தேவைகள் நிறைவேறும் போது மட்டுமே வாழ்கை நிறைவு அடைகிறது….

உடல் தேவை மனத் தேவையாக மாறி அது நிறைவேறாது… 

போக போக அதன் தாக்கம் நமது வாழ்வில் வேறு ஏதாவது செயலில் நம்மை முழுமை படுத்த விடாது;

நாம் நம்மால் புரிந்து கொள்ள இயலாத படி ஏதாவது ஒரு மன அலுத்தத்தில் இருந்து கொண்டே இருப்போம்;

பார்க்கும் பாவை எல்லாம் ஆபாசமாக சித்தரிக்க தோன்றும்!!

கண்ணன் அந்த கிருஷ்ணன் மானுட ரூபத்தில் காமம் தவறு என்று கூறவில்லை; காமம் வேண்டாம் என்று சொல்லவில்ல;

ஆனால் இயற்கையை மீறவில்லை யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை

அந்த காமம் எப்படியோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டான்!!

அப்படியே இயற்கையை தடுக்காதீர்கள் அதன் போக்கிலேயே அதனை சீரான வழிமுறையில் அறிந்து கொள்ளுவோம்!!

வாழ்வில் இல்லாதை ஒன்றை இருப்ப தாக நம்பி ஏமாற வேண்டாம்….

நாம் நாமாக நம்மால் முடிந்த நல்லதை செய்வோம்… 


நன்றி....







Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...