Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஒரு யோகியின் பிறப்பு (பகுதி இரண்டு) Birth of Yogi (Part 2)

 நண்பன் தொடருகிறான்...

                                   


 

                அவர் இதற்கு முன்பும் இதே ஊரில் பிறந்து நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் தான் என்றான்! எனக்கு ஆச்சர்யமாகக இருந்தது!! என்ன கூறுகிறாய் என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன் ? நண்பன் ஆமாம் அவரை எனது அப்பா பார்த்துள்ளார் எங்களுடைய ஊரில் பல பேர் பார்த்துள்ளனர் அவர் அந்த ஜென்மத்தில் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்தார். 

அவரது முப்பத்துமூன்று வயதுவரை அதன் பின்பு முழுவதும் யோகத்தில் இறங்கிவிட்டார் தன்னுடைய முப்பத்துஐந்து வயதில் திருமணம் செய்தார் இரண்டு வருடம் குழந்தையில்லை அனைவரும் அவருடைய மனைவியை தவறாக பேசினார் என்ன கூறியிருப்பார்கள் என்று சொல்லவேண்டியதுயில்லை என்று நிலைக்கிறேன்..? 

ஆம் ஆம் புரிகிறது நீ கூறு அதன்பின் என்ன நடந்தது என்று கேட்டேன்?

 

அவர் அன்று இரவு அனைவர் முன்னுலையிலும் கோவிலில் அதோ அங்கு வைத்து தான் பேசினார் என்று கூறுவார்கள் அந்த நினைவாகவே அங்கு அந்த கற்சிலை வைக்கப்பட்டுள்ளது.

 

சரி அவர் அனைவர் முன்னிலையிலும் என்ன கூறினார்? என்று நான் கேட்டேன்? அவன் கூற ஆரம்பித்தான்... அப்போது கோவில் கீழ்சாந்தி அந்த முதியவர் எங்களிடம் வந்து தம்பி நடை சாற்ற வேண்டும் என்று பணிவுடன் கூறினார். 

நண்பன் சரி ஐயா என்று அவரிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் நாங்களும் குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டோம். அங்கிருந்து நண்பன் வெளியே அழைத்துச் சென்றான்... ஆனால்!! 

என்னுடைய மணமோ அந்த இளம் வயது அர்ச்சகரைப் பார்த்தாக வேண்டும், அவரிடம் பேசவேண்டும், அவரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று முழுக்க முழுக்க அவரை பற்றியே சிந்தனைகள் ஓடியது...


நான் நண்பனிடம் கேட்டேன் நண்பா அந்த பூஜாரியை நேரில் சந்தித்து பேச முடியாத ? என்று;  நண்பன் கூறினான்; இப்போது பார்க்க முடியாது இரவு நேரங்களில் அவர் யாரையும் சந்திப்பது இல்லை. 

அதுமட்டுமல்ல அவர் கோவில் நடைதிறந்த பின்பு யாரிடமும் பேசுவது இல்லை. முழு மௌனத்தில் இருப்பார். பூஜை முடிந்த பின் மறுநாள் காலைவரை கோவிலின் வெளிப்புறத்தில் வடக்கு வாசலில் முழுவதும் தவத்தில் இருந்து விடுவார். 

அவரை யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள், ஆனால்; இரவு நேரங்கள் பல முறை அவர் அருகினில் பாம்பு அல்லது பெரிய நரி உறங்குவதை ஊரில் பலரும் கண்டுள்ளனர்!!


நரியா இந்த ஊரில் இப்பொழுதும் நரிகள் உள்ளனவா என்று கேட்டேன்? ஏனென்றால் நகரமாக மாறிவரும் பலகிராமங்களில்  நரிகள் என்பது முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது, என்னுடைய சிறுவயதில் இருந்து நான் சுற்றியுள்ள ஊர்களில் நரிகளை பார்த்ததே இல்லை!!

அதனால் தான் உடனே எனக்குள் அப்படியொரு கேள்வி எழுந்தது!  அப்படியிருக்க ஒரு நரி அதுவும் பெரிய நரி எப்படி சாத்தியம்! என்று தோன்றியது? ஆனால் நண்பன் கூறினான்; ஆம் இல்லை தான், அதனால் தான் அனைவரும் அதனை ஆச்சர்யமாக கூறுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் நரி போகர் சித்தரின் வாகனம் என்றும் கூறுவார்கள்...

 

சித்தர் போகர் அருள் அவருக்கு முழுவதும் உள்ளது என்பதை ஊர் மக்கள் அப்படித்தான் அறிந்து கொண்டனர்... ஆம் நானும் கேள்விபட்டிருக்கிறேன் போகர் சித்தரைப்பற்றி.

அதுமட்டுமல்லாமல் அடிகடி வரும் அந்த பாம்பு சக்தியின் வடிவம் என்றும் கூறுவார்!! இப்படி பல ஆச்சர்யங்களை கூறிக்கொண்டே இருக்கும் போது இன்னும் ஒரு அதிசய உண்மையை நண்பன் கூறினான். 

அது தான் கீழ்சாந்தி பற்றியது, ஆம் அந்த கீழ்சாந்தி வேறு யாரும் இல்லையாம் அவர்தான் பூசாரியின் பூட்டனார் அதாவது பூசாரியின் முந்தைய ஜன்மத்தில் அவருடைய தாத்தா அப்படி என்றால் பூசாரி அவரின் கொள்ளு பேரனா ? என்று கேட்டேன் ?

 

ஆம் அவர் தான் கொள்ளு பேரன் என்றான்; எனக்கு  இப்படியொரு அதிசயத்தை கேட்டு உடல் புல்லரித்தது போகரின் அருள், சக்தியின் கருணை, இரவு தவம் என அனைத்தும் என் சிந்தையுள் என்னை உருகச்செய்தது. 

அப்படியிருக்க அனைவரும் அவரை சாதாரணமாகவே கடந்து செல்கின்றனர்களே யாருக்கும் அவருடன் இருக்க வேண்டும் அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லையா என்று கேட்டேன்?

 

 நண்பன்  கூறினான்; அனைவருக்கும் அவரிடம் பேச வேண்டும், அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்று ஆசைதான், என்ன செய்ய ஊரே அவருக்கு செய்த துரோகத்தால் வெட்கி, விலகி நிற்கிறது. 

என்ன!! என்ன? நடந்து அப்படி என்று நான் பதற்றத்தோடு கேட்க ? நண்பன் கூற ஆரம்பித்தான் !....


அனைத்தும் விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன் என்றான்

 

தொடரும்.....

 

பேரொளியின் கருணைத் துகளில் இருந்து நான்.....

பிரதீஸ்

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...