Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கள்ளச் சாராயம்

 மனித இறப்புகள் தடுக்க முடியாதவை என்ற போதும், இறப்பு நிகழும் சூழல் என்ன என்பதைப் பொறுத்து அதன் விகிதத்தை மாற்றலாமே தவிற வேறு ஏதும் செய்துவிட முடியுமா என்றால் இல்லை.

பிறந்த ஒவ்வொரு உயிரும் மரணம் நோக்கிய காலத்தையே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்த மரணம் வந்து சேர்வது இயற்கை யாக இருப்பினும் சோகம் தான். செயற்கையாக இருப்பினும் சோகம் தான். சோகம் இல்லாத மரணம் என்பதை நான் இவ்வுலகில் இதுவரை பார்த்தது இல்லை.

நன்றாக வாழ்ந்து ஆண்டு அனுபவித்து இறந்தவர்களுக்கு கூட ஆடி பாடி அடக்கம் செய்யும் முன் சில துளி கண்ணீர் செலுத்தாமல் இல்லை. அவர்கள் நம்முடன் வாழ்ந்த நாட்கள் தான் நினைவில் வந்து செல்லும்.


ஆனால் போக்குவரத்து விபத்து தவிர்க்க கூடியது, இப்படி வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் விபத்துகள் அனைத்திற்கும் அது ஏற்படும் அல்லது ஏற்பட உள்ள வாய்ப்புகளைப் ஆய்ந்து அறிந்து அவற்றிற்கு ஏற்ற வாறு சட்டங்களை வகுத்துள்ளனர். கடுமையான சட்டங்கள் தான் மனிதர்களை வழிப் படுத்துகிறது. 

அப்படி உயிர்கள் மரணிக்கும் விகிதங்களை கூறு போடும் அரசு இந்த “கள்ளச் சாராயம்” என்பதை கண்டுக் கொள்ளாமல் விட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது. இன்று நாற்பது மேல்பட்ட மரணங்கள் நடந்த பின்பு அரசு அவசரம் அவசரமாக செயல்படுவதும், காவல் துறையின் அதிரடியும் பெரும் நாடகமாகவே தோன்றுகிறது.

இத்தனை நாட்கள் நடக்கும் ஒரு சமூகக் குற்றம் காவல் துறைக்குத் தெரியாமலா இருந்திருக்கும். சரி தெரியாமல் இருந்து விட்டு போகட்டும். பஞ்சாயத்திற்கு, பஞ்சாயத்து காவல் நிலையங்கள் எதற்க்கு உள்ளன ?

அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்குத் தான் இத்தனைக் குற்றங்களுக்கும் காரணம். இல்லை இல்லை இந்த மரணங்களுக்கு காரணம். இப்படி மரணம் நிகழ்ந்த பின்னும் அரசு மானியம் அறிவிக்கிறது தவிற மது ஆலைகளை மூடவோ அவற்றை அழிக்கவோ எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

தற்போதைய ஆட்சி கும்பல் குடும்பமாக மதுவிலக்கு போராட்டம் நடத்திய காணொளி தற்போது வைரல் ஆவதை பார்க்கும் போது இன்னமும் இவர்கள் எத்தனை நாட்களை இப்படி நாடகங்கள் மூலம் கடத்திச் செல்வார்கள் என்று தெரியவில்லை.

அரசு என்று முழுவதும் அரசை மட்டும் குற்றம் சாட்டிவிடவும் முடியாது ஒவ்வொரு மனிதனும் அவன் தனிப்பட்ட பாதுகாப்பை அவன் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...