Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

நிலா

நிலா என்றால் யாருக்கு தான் பிடிக்காது?

 அப்படித்தான் நானும்.
அது ஒரு காலை பொழுது. மார்களி மாதம். கோவிலில் திருவெம்பாவை பாடல் பெண்கள் அனைவரும் கூடி பாடும் இதமானா காலை. மனதை கொள்ளை கொள்ளும் வரிகள். நான் குழிக்கச் சென்றேன் ஊரிலுள்ள குளத்தில்

 எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தாள். ஒரு பெண். அதற்க்கு முன் அவளை நான் பார்த்ததே இல்லை.

மனதில் நான். யாராக இருப்பாள் இவள்.? இந்த அதிகாலையில் நட்சத்திர ஒளியை மழுஙகடிக்க செய்திருந்தது அவளுடைய பிரகாசம். என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அங்கேயே என்னை மறந்து நின்று கொண்டிருந்தேன்.

என்னை, ஒரு வித கோவம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அவள். கோலத்தை பாதியில் விட்டு விட்டு வீட்டிற்க்குள் ஓடினாள். நானும் சற்று பயந்து போனேன். எதிர் வீட்டு காரனுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. தெருகுழாயில் தண்ணீர் எடுப்பது முதல் மழை நீர் நிறைந்தோடும் ஓடைக்காக வரை, இருவரும் மாறி மாறி வாக்கு வாதம் செய்து கொள்வோம். எங்கள் இருவருடைய கருத்தும் ஒரு போதும் ஒத்து போனது கிடையாது.

நான் இனி இங்கு நிற்பலாகாது என்றுணர்ந்து. அங்கிருந்து நகர்ந்தேன். இருப்பினும் என்னால் அந்த ஒளி பொருந்திய அவளுடைய முகத்தை. அந்த வளவளப்பானா கேரளத்துப் பெண்களை போன்ற மஞ்சள் கலந்த ஒந்த பொன்னிரம் கொண்ட. அவள் உடுத்தியிருந்த அடர்ந்த பச்சை நிற தாவணி, தெருவிளக்கு ஒளியில் இன்னும் சற்று தூக்கலாக அவள் அழகை மெருகேற்ற. இந்த காட்சிகள் அனைத்தும் என்னை விட்டு நீங்காமல் திரிம்ப திரும்ப என் மனதினில் ஓடிக்கொண்டே இருந்தன.

குளத்தினில் யாரும் இல்லை. குழமோ நன்றாகா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. என்பது என் மனதிற்க்குள் தோன்ற நான் மெதுவாக எழுப்பினேன்.

படிக்கறையினில் இருந்த. அந்த இடைவெளி வழியே சென்று. இரண்டாவது படிகட்டு வரை பெருகி நின்ற, குளத்தின் நீரிடம் நான் அருகினில் அமர்ந்து,  குளமே, குளமே என மெதுவாக அஸ்தி குரலில் அழைத்தேன். மறுபடி நண்பா நன்றாக நீ தூக்கி கொண்டு இருக்கின்றாயா? இப்போது நேரம் என்ன ஆனது தெறியுமா? அனைவரும் இன்னும் சிறிது நேரத்தில் வரிசையாக குளிக்க வரும் நேரம். உன்னை யாரும் மதிக்காமல் சடக் சடக் என குதித்து உன் தூக்கத்தை, நீ பதறும் வகையில் கலைத்து விடுவார்கள் ...

நீ இப்போது எழுவாய் என்றேன், அயர்ந்து தூங்கும் வேளையில், நம் அன்னை நமது அருகில் அமர்ந்து. நமது தலையை மெதுவாக கோதி விடுவாள். அதைப் போன்றதொரு உணர்வினை அந்நேரத்தில் குளம் அடைந்தது போன்றதொரு உணர்வு என்னுள்.

நான் கூறினேன். நீயோ இப்படி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், நான் எப்படி அந்த சொர்ண ரூப சுந்தரியை பற்றி உன்னிடம் கூற முடியும், என்றேன்? அவ்வளவு நேரம் எந்த ஒரு உணர்வுமற்றிருந்தது இயற்கை. தீடீரென மெதுவாக சில்லென்ற காற்று வீச நீரின் மேற்பகுதி அலை அலையாக வந்து முதல் படியில் வைத்திருந்த எனது கல்களை நனைத்து நனைத்து சென்றது.

என் உடல் சற்று சிலிர்த்தது. எனக்குள் ஒரு புதுவித மகிழ்ச்சி. 
மங்கை என்றாலே மனம் மயங்காத ஏதும் உலகில் இல்லையோ என்ற கேள்வி? ஒருபுறம் என்னுள் எழ. நானோ என்னையரியாத ஒரு உணர்வில் மிதந்து கொண்டிருந்தேன்.

அடுத்து நான் பார்த்த மங்கை பற்றி கூற துவங்கினேன். தூரத்தில் யாரோ வருவது போல் தோன்ற. சரி நான் நாளை இன்னும் சீக்கிரமாக வந்து உன்னிடம் கூறுகின்றேன். என்று சிறிது நீர் எடுத்து வணங்கி விட்டு, வலது கையில் மறுபடியும் சிறிது நீர் எடுத்து தலையில் வைத்து கொண்டு ஒவ்வொரு படியாக நீரினுள் இறங்கி குளித்து விட்டு கறையேரினேன்.

அப்போது அங்கு குளிக்க வந்தவர் எனது எதிர் வீட்டுக்காரர்.  எனக்கு மனம் பட படவென்றது ஏனென்றால் அது அவர் குளிக்க வரும் நேரம் அது அல்ல. அவருடன் ஆறு அடி உயரம் இருக்கும். அடர்ந்த கருப்பு தேகம் அந்த மனிதன்.  அதிகாலை நிலா வெளிச்சத்தில் அவருடைய கண்களும், பற்களும் மட்டும் தெளிவாக தெறிய இன்னும் பயம் அதிகரித்தது உடல் நடுங்க, எதிர் வீட்டுக்காரர் என்னை...


தொடரும்...

பேரொளியின் கற்பனை துகளில் இருந்து 

நான் 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...