Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

இயற்கையோடு உறவாடுங்கள்


இயற்கை நமக்கு கற்று தரும் பாடங்கள் அநேகமாகும் பஞ்சபூதங்கள் என நமது முன்னோர்கள் நல்லதொரு பெயரும் கொடுத்து சென்றனர்

நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்

ஏன் பூதங்கள் என்றனர் என்று சிந்தித்தால் ஆம் காரணம் இருக்கின்றது பொதுவாக சிவனுடனான பூதங்கள் அன்பானவை அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை அதே சமயம் மிகுந்த ஆபத்தானவைகளும் கூட அவர்களை சீண்டி விட்டால் நாம் அவ்வளவு தான்.

அதனால் தான் என்னவோ இவை ஐந்தையும் பூத வம்சத்தில் சேர்த்திருக்கின்றனர் போலும்.

நமது கற்பனைகளை தூண்டி விடும் அற்புத ஆற்றல் கொண்டது இந்த இயற்கை. மாலை நேர குளிர் காற்றும் அந்த நேரத்தில் வானத்தின் அற்புத காட்சிகளும் நம்மை நாமே மறந்து ஒரு காலம் கடந்த நினைவுகளின் பயணத்திற்க்கு கொண்டு சென்று விடும்.
         ஆம் இதனை யாராலும் மறுக்க முடியாது. இயற்கையையும் மனைதனையும் பிரிக்கவே முடியாது அதனை நாம் உணர மறுக்கக்கூடாது வெறும் 21% நிலபரப்பு மட்டுமே கொண்ட இந்த பூமியை சுற்றி கடல் சூழ்ந்துள்ளது எந்த நேரத்தில் இயற்கை நினைத்தால் ஒரு நொடி பொழுது போதும் அனைவர் உடலும் அமிலம் ஊறச் செய்திருக்கும். இருந்தும் மனிதன் இயற்கைக்கு மாறாக எவ்வளவு கெடுதல்கள் செய்தும் இயற்கை நீண்டதொரு பெரும் பொருமையை கையாழுகின்றது.

இந்த பொருமை எத்தனை நாட்கள் என்று தெரியாது பல  முறை அதன் கோவத்திற்க்கும் நாம் ஆளானப் பிறகும் இன்னும் நாம் திருந்தியபாடில்லை.

மனதை உலக மாந்தரோடு ஓடச் செய்யாதீர்கள் மனம் எப்போதும் இயற்கையோடு இசைந்திருக்கட்டும் அப்போது கவலைகளை மறந்து மனம் இனம் புரியாத ஒரு ஆனந்தத்தை அனுபவிப்பதை நீங்கள் உணர முடியும் அது தான் இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு அதனை ஓர் நாளும் இழந்து விடாதீர்கள் மனம் என்ற ஒன்று இருப்பதால் மட்டுமே தான் நாம் மனிதன் ஆகின்றோம் மனம் சித்தத்தோடு இணைந்திருப்பின் 

அதன் பலம் இயற்கைக்கு ஈடானது, பஞ்சபூதங்களையும் தன்வசம் இணைத்திடும் பாலம் அது, நீங்கள் அரும் பெரு தவஙகள் செய்ய தேவையில்லை.

வாழும் வரை இயற்கையை போற்றி வணங்கி பிறர் மனம் புண்பட காரியம் செய்யாது தன்னை தான் ஒரு கட்டுபாட்டுக்குள் இயக்க கற்று கொண்டறிந்தால் போதும் உன்னை கட்டுபடுத்த அறிந்த உனக்கு அதன் பின் உலகத்தை கட்டு படுத்தும் ஆசை வாராது.

நீ நடப்பதை நடக்க விட்டு கடல் அலைகளை ரசிக்கும் மனிதன் போல் ஓரமாக இருந்து அதனை ரசித்துக் கொண்டு இருப்பாய் உலகம் என்றும் அழிய போவது இல்லை 

இருப்பினும் இயற்கைக்கு நாம் செய்யும் இடையூரு நம்மை அழியச் செய்து விடும் அவ்வளவே.

என்றும் அன்புடன்
இவன்

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...