உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
உன்னிடம் காதல் சொல்ல !
உன்னை வர்ணித்து கவிதை சொல்ல !
உன்னை நேசிக்க !
உன்னோடு உறவாடா !
இதையும் தாண்டி,
உனக்கு பிடித்த பலர் இருக்கலாம் !
இந்த அவனியில்.
ஆனால் உன்னையே நினைத்து !
உன்னை மட்டுமே இதயத்தில் தாங்கி !
நீ என்னுடன் பேசும் நேரத்திர்க்காக காத்து கிடந்து !
உன்னை காணும் நாட்களுக்காக தவித்து இருந்து !
ஆயிரம் காதலை மனதில் கொண்டு !
உன்னிடம் கூறாது காத்திருக்கும்,
அந்த வேதனையுடன் கூடிய ஒரு இன்பத்தை
நொடி நொடியாய் அனுபவிக்கின்றேன் !!
மனதின் குமுறல்களை கொட்டிவிட தான் ஆசை,
வேண்டாம் துயரங்கள் என்னோடு போகட்டும்...!
உனக்கு வந்த வாழ்த்துகளில் இதும் ஒன்றாக என் நேசம்
கடந்து விட கூடாது....
இப்படிக்கு...
உன்னை நினைத்து தவித்து தவம் இருக்கும்
தூர தேசத்து காதலன்...
Comments
Post a Comment
நன்றி