Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

சிவன் பாடல் இதுவரை யாரும் கேட்டிடாத வரிகள்



*மனமாய்....கதைக்கிறேன்....*

காலம் சென்றது!! வாழ்வும் நின்றது!!
அறிவை கொன்றது!! நினைவை தின்றது!!

மனமா வென்றது!! குணமே என்றது!!
ஜலமாய் சென்றது!! உயிராய் நின்றது!!

உணர்வை கொன்றது!! உடலை தின்றது!!

காணும் யாவையும் கண்ணால் தின்றது!!
எண்ணக்கடலில் மிதவாய் என்றது!!

வாழ்வாய் என்றது!! வீழ்வாய் என்றது!!
புத்தன் என்றது!! பித்தன் என்றது!!

மெய்யும் என்றது!! பொய்யும் என்றது!!

நரம்புகள் பிளவுபட கத்து என்றது!!

நோய் என்றது!! பேய் என்றது!!
என்னையின்றி உனக்கு பலமில்லை என்றது!!

*அறிவாய்.....கதைக்கிறேன்*

மனமே என்றேன்!! நினைவை கொன்றேன்!!
காலம் வென்றேன்!! ஞானம் பெற்றேன்!!

தெளிவாய் நின்றேன்.....
உன்னால் உன்னால் உன்னால்.............
சிவமே.....சிவனே......என் சீவனே.....
அறமே....அகமே.....அன்பே......என் சிவமே.....

பிறந்தேன் நான் பிறந்தேன் உன்னால் சிவமே....
வளர்ந்தேன் நான் வளர்ந்தேன் உன்னால் சிவமே....

அணுவாய் மறைந்தாய் அகிலம் தெறிந்தாய்
முக்தி என்பதை முடிவில் தந்தாய்!!

இடையில் ஏனோ பலபிறப்புகள் என்றாய்!!

பாவம் என்றாய்!! புண்ணியம் என்றாய்!! படைப்புகளில் ஏனோ பல மாற்றம் தந்தாய்!!

உணர்வும் தந்தாய், வலியும் தந்தாய்
பின் ஏனோ எல்லாம் மாயை என்றாய்!!

நீயே படைக்கிறாய், நீயே காக்கிறாய், நீயே அழிக்கிறாய் பின் ஏனோ தனி தனி சிந்தனைகள் தந்தாய்!!

சிவமே.......

சிந்தை தெளியவே விந்தை புரிந்தாயோ!!
பாவம் மனிதன் என என்றேனும் நினைத்தாயோ?

காரணம் இல்லாமல் காரியம் இல்லையென்றாய்!!
காரணம் தெறியாமலே காரியம் செய்கிறோமே.!!

படைப்புகளும் வெவ்வேறு, வாழ்வும் வெவ்வேறு
குணமும் வெவ்வேறு, நினைவும் வெவ்வேறு

நித்தம் உன் நாமம் கேட்கும் அங்கு பலவாறு!!

எல்லாம் நீயோ? இல்லை எல்லாம் நானோ?
பாவியும் நானோ? ஞானியும் நானோ?

நீயும் கற்பனை பித்தன் தானோ?

கேள்வியாகவே நிற்கிறாயே சிவமே.....
பதிலாய் உனைக்காண பெருவெள்ளம் நடுவில் நான் நிற்க்க, என்று நீ அருள்வாயோ? 

சிவமே.......

அகமே நிறைவாய் அருளைத் தருவாய்!!

பணிந்தேன் உனை நான் நினவாய் எனை நீ
சக்தியோடு இணைந்து நீ சத்தியம் உறைத்திடு
சிவமே....

உன்னை நினைத்து வாடும் எனை நீ உன் பாதம் சேர்ப்பாயோ!??

துன்பங்கள் தந்தாய் துவண்டு மீள்ந்தேன்
இன்பங்கள் தந்தாய் இடிந்து வீழ்ந்தேன்
அனைத்தும் அனுபவம் என்றாய் அறிவாய் கொண்டேன்!!

சிவமே.....

யுகம் யுகமாய் வாழும் சிவனே
தவம் தவமாய் புரியும் சிவமே
இத்தனையும் எதற்க்கு
பதிலில்லா கேள்விகளும்
கேள்வி இல்லா பதிலுமே 
உன் பரிசோ?

தாண்டவமா இங்கு தாண்டவமா
ஆடவா ஈசனே என் ஈசனே
என் குரல் கேட்கவில்லையா
இல்லை என் பாவம் தீரவில்லையோ?

என்றும் அன்புடன் நான்

பிரதீஸ்.

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...