உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
வாசிக்க வாசிக்க நேசிக்கத் தோன்றும்
கவிஞன் இல்லை நான்!!
பார்க்க பார்க்க இரசிக்கத் தோன்றும்
அழகன் இல்லை நான்!!
பேச பேச கேட்கத் தோன்றும்
பேச்சாளன் இல்லை நான்!!
சொல்ல சொல்ல புரியத் தோன்றும்
புலவன் இல்லை நான்!!
ஏதும் இல்லா என்னிடம் நீ ஏது கண்டாய்!?
என் கரம் பற்றி !!
என்னையே சுற்றி வந்த மாயம் என்ன?
மாயவளே என் மாசில்லாத தூயவளே!!
என் கற்பனை காட்டினில் தீ மூட்டி இரசித்தவளே!!
பற்றி எறியும் நேரம் விட்டுச் சென்றவளே!!
அல்லியே, இரக்கம் இல்லா செல்லியே!!
என்னை வாட்டும் மானுட வள்ளியே!!
போதும் என்னை விட்டு விடு !!
இல்லையேல் என்னை கொன்று விடு!!
உன் காதல் கூட்டினில் அகபட்ட
கற்ஜனை அடங்கிய மானுட சிங்கம் நான்!!
Comments
Post a Comment
நன்றி