Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

தத்துவ கவிதைகள்

*_கற்று கொள்_*

கற்று கொள்ள தயாராக இரு காற்றும் கற்று தரும், பறப்பது எப்படி என்று அல்ல. 
தென்றல் வீசும் ரகசியத்தை!!

விழிப்போடு  இரு எப்பொழுதும் இயற்கையின் பல மர்மங்கள் புலபடும் !!

காத்திரு பல கேள்விகளோடு காலம் பதில் சொல்லும் அதன் உன்னதத்தையும் விசித்திரத்தையும்!!

அமைதியாக இரு ஆர்பரிக்கும் அலையும் அடங்கித்தான் போகும் உன் பேரமைதியில்!!


*_உறவுகள்_*


உறவுகள் போர் வாள் போல நம்மிடம் இருக்கும் வரை மட்டுமே நமக்கு சாதகமா செயல்படும்!!

உணர்வுகள் வெட்டுண்ட காயத்தில் விழுந்த தீ பிழம்பு போல நினைத்தாலே நெஞ்சு பதை பதைக்கும்!!


*_காலம்_*


நோயற்றவன், நோயுற்றவனுக்கு போதனை வளங்குகிறான் இன்று, நாளை? வாழ்கை ஒரு வட்டமல்லவா !!

மருத்துவன் வைத்தியம் பார்கிறான், மருத்துவனை அறிந்தவன் ஆலோசனை வளங்குகிறான்!!

ஆன்மீகமும் அப்படியே நீ இறைவனை உணரும் வரை போதனைகளுக்குள் புதைந்திருப்பாய்!!


*_குணம்_*

குரங்கின் குணம் இது தான் என்று அனைவருக்கும் தெறியும், என்றோ ஒரு முறை பார்பவன் ஆனந்தமடைகின்றான், தினமும் பார்பவன் எரிச்சல் அடைகின்றான். ஆனால் குரங்கு ஒரு போதும் அதன் குணத்தை யாருக்காவும் மாற்றியது இல்லை, அதன் போக்கிலேயே துள்ளி குதித்து திரிகின்றது.

மனிதர்கள் வாழும் இடத்தில் நீர் ஓட்டம் இன்றி ஒரே இடத்தில் தேங்கினால் பூஞ்சைகளுக்கும், தவளைகளுக்கும், கொசுக்களுக்கும் கொண்டாட்டம் தான், ஆனால் மனிதனுக்கு?

ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு குணம், ஆனால் மனித விலங்கிற்க்கு மட்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விலங்கின் குணமாம்,

ஒரு மனிதனின் பொறாமையும், வெறுப்பும், அல்லது பழிவாங்கும் உணர்ச்சியும் ஒருவனை என்ன செய்துவிட இயலும்? அதீத மன உளைச்சலோ அல்லது ஏதோ உடல் உபாதையா அதுவும் இன்றி மரணத்தை தர இயலுமோ?அவ்வளவு தானே!! 

வாழ்கை பற்றி ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கும், அதனை இரசிப்பவர் சிலர், வெறுப்பவர் பலர், அதன் சுவாரஸ்யத்தில் பண்படுபவர் வெகு சிலர், அந்த  சிலர் அனைத்தையுமே ஆழ்ந்த கண்ணோட்டத்தில் காண்கின்றனர்!!


Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...