Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

சிவ பெருமான் தந்த தரிசனம்

அன்று அதிகாலை 3.20 மணி அளவில் நானும் எனது நன்பனும் தேனி அரன்மனைபுதூரை அடைந்தோம், 

பழுது ஏற்பட்டு நின்று கொண்டிருந்த காற்றாலை ஒன்றை சரி செய்ய அதற்க்கு முந்தைய நாள் இரவு ஏழு மணி அளவில் கண்டமனூர் சென்ற நாங்கள் பணியை முடித்து விட்டு அரண்மனைபுதூர் வரும் போது அதிகாலை மூன்று மணி இருக்கும்.

 அந்த மேற்க்கு கரையோரம் மலைமுகடுகளுக்கு மேல் மேக கூட்டங்கள் ஏதும் இன்றி இருள் சூழ்ந்து அந்த இருளின் நடுவினில் வளர்பிறை நிலவின் ஒளி எங்களை மெய் மறந்து நாங்கள் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அந்த காண கிடைக்காத இரவுகளின் இரகசிய இரசனைகளின் முக்கியமான அந்த பொன்னிர ஒளியை கண் இமைக்காது பார்த்திருந்தோம்,

சொல்ல மறந்து விட்டேன் வெரும் நிலவொளி மட்டுமல்ல காற்றினால் நிலவோடு இணைந்த மேகம் ஒன்று இறைவா என்னவென்று வர்ணிப்பது கண்ட காட்சியை நீங்களே பாருங்கள்.

இந்த இயற்கை மீதும், இறைவன் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு என் உள்ளும் புறமும் அவன் நிறைந்திருப்பதை கனம் கனம் உணர்பவன் நான் அவன் என் புற கண்களுக்கு கொடுத்த இந்த மாபெரும் காட்சியை எங்கனே கடந்து வருவது,

மேகங்கள் நெற்றியில் பூசிய வீபூதி போலவும் அதன் மேல் நிலவு சிவனின் நெற்றி கண் போலவும், இறைவன் எனக்கு காட்சி தருகிறான் சிவ பெருமானின் நெற்றியை நான் தரிசித்தேன் என்பதை கூறினாலும் அந்த நேரம் எனக்குள் ஏற்பட்ட அந்த பரவசத்தை கூற முற்படுகையில் உண்மையில் நான் உங்கள் முன் தோற்று தான் போகின்றேன்.

இயற்கையும், இறைவனும் பல வேடிக்கைகளை நிகழ்த்தி கொண்டு இருப்பதை நாம் நிறைய கேள்வி பட்டிருப்போம், அந்த பெரும் ஆசீர்வாதம் நமக்கு உண்மையில் நிகழும் போது நாம் செய்வதறியாது திகைத்து தான் நிற்கிறோம் அந்த ஒரு கனம்.
சிவ பெருமானின் திரு நாமத்தை கூறிய படியே வணங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம் நானும் என் நண்பனும் புறபட்டு முப்பது வினாடி பொழுதிலே நான் மறு முறை திரும்பி பார்க்கும் போது காட்சி மாரியிருந்தது

மேகங்கள் கலைந்து இருந்தன அந்த நொடி என்னை இன்னமும் மெய்சிலிர்க்க செய்தது என்னை மீண்டும் மீண்டும் அவன் பொற்பாதத்தில் சரணாகதி அடைய செய்கிறது என்னை அரவணைக்கும் பேரன்பு, எனகழித்த வரங்களுக்கே என்னால் இன்றளவு நன்றி கடன் நிறைவேற்ற முடியவில்லை,

இறைவன் எனக்கு காட்சி கொடுப்பது இது முதல் முறை அல்ல,

பேரானந்த நிகழ்வுகளை இறைவன் இவ்வாறு நிறைவேற்றும் பொழுது தான் மனம் திருப்தி அடைகின்றது ஏனென்றால்?!

உண்மையில் ஈசன் மானிட உடல் பூண்டு என்முன்னே தோன்றி குழந்தாய் நான் தான் நீ வணங்கும் சிவன் என்று கூறியிருந்தால் அந்நேரம் என் உணர்வு நிலை செயலற்று இருந்திருந்தால் என்னால் உணர முடியாது, 

ஐயா மிகுந்த மகிழ்ச்சி உங்களுக்கு ஏதேனும் தேவை படுகின்றதா ( ஐயா காபி,டீ எதாவது குடிக்கிரீங்களா ? ) என்று கேட்டிருப்பேன் ஏனென்றால் அவ்வளவு தானே மனித மனம்,

ஒன்றை அடைய பாடு படும் போது கிடைக்கும் சுகம் அது கையில் இருக்கும் போது தெரிவதில்லையே!!

இறைவனும், இயற்கையும் மர்மங்களாக இருக்கும் வரை மட்டுமே மனித மனம் அதீத தேடுதலில் திளைத்து நிற்க்கும்.

ஒன்றை பற்றிய இரகசியங்கள் புலபடும் போது அங்கே அலட்சியங்கள் பிரப்பெடுக்கின்றன!!

வாழும் வரை மனைதனுக்கு வாழ்கை போராட்டம் தான்.

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...