Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

அன்று அவள்

வழக்கம் போல் அன்று அவன் காலை எழுந்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று 

அந்த காலை நேர இயற்கையை சிறிது இரசித்து விட்டு உடற்பயிற்சி செய்ய துவங்கும் முன் 

எதிர் வீட்டு மாடியில் இருந்து குட் மானிங் என்று ஒரு சத்தம் 

சிறிது கூர்ந்து கவனித்த பிறகு தான் குட்டி குழந்தை பக்கத்து வீட்டு ஆண்டியின் மகள் புவி தண்ணீர் டேங் அருகினில் தென்பட்டாள்

பாவம் குழந்தை சிறு வயதிலேயே தீவிர உடற்பயிற்சி பெற்றோர் கட்டாயத்தால்,

அவன் அந்த குழந்தைக்கு பதிலுக்கு ஒரு புன்னகையுடன் குட் மானிங் புவி..... என்று கலாய்த்த படி கூறி கொண்டு

பயிற்சியை தொடர்ந்தான் சிறிது நேரத்திலேயே கீழிருந்து சத்தம் என்னங்க ஆபீஸ்க்கு டைம் ஆகுது சீக்கிரம் வாங்க என அவனது மனைவி அவனை அழைக்க

அவனது மனைவியின் குரல் காதில் விழுந்ததும் தான் அவனுக்கு நினைவு வருகிறது ஆபீஸ்க்கு நேரம் ஆகிரது என்பதல்ல, அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று..

அதை நினைத்து புன்னகைத்த படியே கீழே சென்றான் 

கீழே சென்று பார்த்தால் மனைவி சமையல் அறையினில் நல்ல மணம் வீச சமைத்து கொண்டிருக்கின்றாள் 

என்ன இன்று சமையல் கலை கட்டுகிறது என்று மனதில் நினைத்த படியே சமயலைறை நோக்கி சென்றான்

அங்கே மனைவி இளம் மஞ்சள் நிற புடவை கட்டி கொண்டு தலை விரித்து இருக்க இரண்டு காது அருகில் இருந்து சிறிது கூந்தலை மட்டும்

எடுத்து பின்புறம் மொத்த கூந்தலையும் சேர்த்து பிடித்த வண்ணம் அவனுக்கு மிகவும் பிடித்த அந்த

தலை கட்டை கட்டி அதில் சிறிது முல்லை பூவும் அதன் நடுவினில் ஒரு ரோஜா பூவும் வைத்து கட்டியிருந்தாள்

அவளை பார்த்ததுமே மொத்த நரம்பு மண்டலங்களும் இயக்க நிலையில் இருப்பதை உணர்த்த அவனுக்கு என்ன ஆச்சர்யம் என்றால்

இன்று என்ன விசேசமாக இருக்கும் என்று தான் தோன்றியது, நேற்று இரவு கூட எதையும் நம்மிடம் கூறவில்லையே

என்றும் காலையில் இப்படி கிழம்பி நிற்க்க மாட்டாளே நமது திருமண நாளும் இன்னமும் வரவில்லையே என

யோசித்த படியே அவள் அருகின் சென்று அவள் முகத்தை பார்த்தான் சிறிது புன்னகையை அவள் உதடுகளும் வெட்கத்தை அவள் கண்களும் அவனுக்கு உணர்த்த 

அவன் அவளை பின்புறமாக அவள் வயிற்றோடு சேர்ந்து அணைக்க அவள் வார்த்தை மட்டும் வெட்கம் கலந்த சிறு முறைப்புடன்

என்ன இது காலையிலேயே என கையில் வைத்திருந்த கரண்டியின் பின் புறம் கொண்டு செல்லமாக சிறிது வலிக்கும் படி அடிக்க

அவன் ஆ....என கத்தி விட்டான் வெளியில் பாத்திரம் துலக்கி கொண்டிருந்த அவனது தாய் என்னடா ஆச்சி என்று கேட்க 

செய்வதரியாது ஒன்னும் இல்லடி ஆத்தா...ஆ.... என சிரித்தபடியே குளிக்க ஓடினான், அவள் அவனது செய்கை கண்டு புன்முருவல் பூத்து நின்றாள்

குளியலறை விட்டு வெளி வந்த பிறகும் கூட இன்று அவள் எதனால் கிழம்பி நிற்கிறாள் என்று பிடி படவில்லை ஐயயோ இன்று அப்போம் ஏதோ பஞ்சாயத்து வைக்க போர சண்டைகாரி என ஒருவித அன்புகலந்த பயத்துடன்

அவளுடைய பிறந்த நாளும் இல்லை, கோவிலுக்கு சென்று வந்த அடயாளமும் இல்லை, திருமண நாள் இன்னமும் வர வில்லை என்று ஆலோசித்த படியே அவனும்....

எதனால் அவனது மனைவி அன்று கிழம்பியிருந்தாள் என்பதை கமெண்டில் கூறுங்கள் உங்கள் கர்பனை கலந்து சென்சார் உண்டு...

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...