Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

தலைவன்

அவனை அனைவரும் கோபகாரனாகவே கண்டிருந்தனர், 

அவன் இடம் நேர் நின்று பேச அனைவருக்கும் பயம் தான், வேலை நேரங்களில் மட்டும் 

மற்ற வேளைகளில் அவனை போன்றொரு நகைச்சுவையாளன் கிடையாது ஏதாவது பேசி அல்லது யாரையாவது குறை கூரியாவது அனைவரையும் சிரிக்க வைத்து விடுவான்,

இல்லையென்றால் பேராபத்து தான் நிற்வாகத்திற்க்கு கோவத்தில் பேசும் போது அனைவருக்கும் உடலில் இரத்த அழுத்தம் ஏறும் வகையினில் அந்த வார்த்தைகளில் வேகம் இருக்கும்,

குடும்ப பிரச்சனைகளின் அழுத்தம் தாங்காது இருக்கும் எவரும் இங்கு பணி செய்தால் சில நாட்களில் வெடித்தி சிதறிடுவார்கள்,

அப்படி நடந்ததையும் பார்த்திருக்கிறோம், அனைவருக்கும் உதவி செய்யும் மனம், வேலை சரியாக நடக்க வேண்டும் என்ற எண்ணம்

செயல் சரிதான், தொழிலில் பாவம் புண்ணியம் பார்க்க கூடாது என்று சொல்வார்கள் பெரியோர்கள், 

இருந்தும் ஓடி ஓடி காலம் நேரம் பார்க்காது உழைத்து வந்த ஒருவனுக்கு இந்த கேள்விகளின் ஆழம் எறிச்சலையும் வெறுப்பையும் அதிகரிக்க தான் செய்யும்,

அதே நேரம் பாராட்டுதலுக்கும் பஞ்சம் இல்லை அனைவரிடமும் ஒவ்வொரு பொருப்பை கொடுத்து தனி தனியே நிற்ணயிப்பது சிறப்பு

அதில் என்னவென்றால் ஒரே வேலையை ஒருவர் பார்த்த பின் அதில் திருப்தியடையாது இன்னொருவர் 

அதே பணியை பார்க்க சொல்லும் போது வேலையை முடித்தவனுக்கு தன்னை நம்பாதது போலிருக்கும்

இவ்வளவு கடுமையான வேலை செய்தும் நம்மீது நம்பிக்கை இல்லையெனில் ஏன் உண்மையாக உழைக்க வேண்டும் என்று தோன்றிடுமல்லவா!!

மனித மனம் தானே?

இப்படியே நாட்கள் நகரவும் என்ன தான் வருத்தம் இருந்தாலும் உழைப்பிற்க்கு சலிப்பு இல்லை 

யார் என்ன சொன்னா என்ன,? என்னுடைய மனசாட்சிக்கு உண்மையாக நான் வேலை பார்க்கிறேன் என்னும் அனைவருடைய உறுதியும் வியப்பளிக்க,

என்னை நம்பி அவன் வேலை கொடுத்தான் அதனை நான் எவ்வாறேனும் சிறப்பாக செய்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அனைவரிடமும் வேட்கையாக இருந்தது

புதிதாக சிலர் பணிக்கு வந்து சேர்ந்தனர், அவர்கள் இவர்களுக்கு சலித்தவர்கள் அல்ல அவர்களும் அப்படி தான் வேறு வேறு திசையில் இருந்து கொண்டு வரப்பட்ட காட்டு யானை கூட்டங்கள் போல என்ன சொன்னாலும் 

செய்ய ஆயுத்தமாக இருந்தது அந்த படையின் கர்ஜனை 

எவ்வளவு பெரிய சூரைகாற்று வீசினாலும் உனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆவேன் என்ற உறுதியோடு

இரவு பகல் பாராது ஓடினார்கள், உழைத்தார்கள்

என்ன ஒரு புறம் கருத்து வேறுபாடு இருந்தாலும் வார்த்தைகளில் தெரிவிக்காது சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு புறம்

புதிதாக அணிவகுப்பு நடத்தியவர்கள் எதிர் கருத்துகள் கூட்டத்திலேயே எடுத்து வைக்க பட்டது

பதட்டம் இல்லை, பயம் இல்லை, ஆனால் மரியாதை அளவுக்கு அதிகமாகவே இருந்தது 

எதிர் கருத்துகள் ஏற்பது, நிறாகரிப்பதும் இயல்பு தான் அது ஒவ்வொருவரின் மன நிலை பொருத்தது

ஆச்சர்யம் என்னவென்றால் இங்கு எதிர்கருத்துகள் அவனால் ஏற்க்க பட்டன நீ பெரியவனா இல்லை நானா என்ற எண்ணம் இல்லை 

நீ கூறுவதை யோசித்தால் நீ கூறுவதிலும் உண்மை உள்ளது அது சரியும் கூட

என தன் தப்பை தான் ஏற்று கொள்ளும் பக்குவம் எத்தனை தலைமைக்கு இருக்கும்!!

அந்த யானை கூட்டங்கள் அங்கே பேரானந்தம் கொண்டன...

இத்தனை நாள் உழைத்ததற்க்கு பலனாக அவர் அவர் தனது சொந்த ஊரிலேயே பணி கொடுத்து அமர்த்தப் பட்டனர்

ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளமாய் அவன் திகழ்ந்தான்

அவனுக்கு யார் மீதும் தனிபட்ட கோபம் இருந்ததில்லை

ஆனால் பணியில் தவறு நடக்கும் போது அவன் யாரிடமும் கோபம் கொள்ளாமல் இருந்தது இல்லை என்று கூறிவிட முடியாது.

ஏனென்றால் அது தவறில் வீரியத்தை பொருத்தது....

உடன் பணிபுரிவோருக்கு அவன் கோபகாரன்,
தூரத்தில் இருந்து பார்ப்போருக்கு அவன் சிடுமூஞ்சி,

நெருங்கி பழகியோருக்கு மட்டுமே தெரியும் அவன் குழந்தையென்றும்,

கள்ளகபடமற்ற ஒரு சிறந்த மனிதன் என்றும்!

நாடு போற்றும் நல்லவனா என்பதை பற்றி எனக்கு தெறியாது!

ஆனால் அவன் நான் போற்றும் நல்லவன், நாணய தலைவன், கடமையில் கண்ணியம் கொண்ட சிங்கம் 

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு அவனும் ஒரு எடுத்து காட்டு,

கோபமே படாமால் ஒரு தலைவன் இருக்கலாகாது, சில நேரங்களில் கோபம் தீர்வாகின்றது தேவையும் படுகின்றது...

அன்பால் அரவணைக்க இது ஆதறவற்றோர் காப்பகம் இல்லை

அவரவர் அவர்கள் கடமைகளை சரியாக செய்தால் இன்பம் மட்டுமே நிலை கொள்ளும் வாழ்வில்...


*_நன்றி_*

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...