Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

இருப்பதை கொண்டு வாழ்வது எப்படி?

பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள், உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் அந்த பழமொழி மிக பெரிய உண்மை தான் அதனை நாம் அனைவருமே ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம்.

அல்லது நம்முடன் இந்த வாழ்வில் பயணப்பட்ட யாரோ ஒருவர் மூலம் அறிந்திருப்போம். ஆம், நம்மில் பலபேர் மாத சம்பளம் அல்ல தின கூலி வாங்குபவர்களாக இருப்போம்.

பணம் மட்டும் தான் இன்றைய காலத்தில் மக்கள் வாழ்வில் அதீத தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மனித உயிரினை விட பணத்திற்க்கு முக்கியதுவம் அதிகம், வாழ்வில் ஒரு முறை மருத்துவமனைக்கு சென்றிருந்தால் கூட இந்த உண்மை அறிந்திடலாம்.

அப்பேர் பட்ட இந்த பணத்தை நாம் எவ்வளவு உதாசினப்படுத்துகிறோம், என்று என்றேனும் நினைத்தது உண்டா?

ஆடம்பரத்திற்க்கு ஆசை படும் நாம் சில நாட்களிலே அதனை வெறுத்தும் விடுவோம்!!

உதாரணத்திற்க்கு பல நாள் ஆசை பட்டு. ஏதோ ஒன்றை வாங்க, சில வருடங்கள் சேர்த்து வைத்த, உண்டியல் காசு கொண்டு, 

அதனை வாங்கி சில நிமிடங்களில் மனம் அதன் மீதுள்ள ஆசையை இழக்கும் அதனை யாரேனும் உணர்ந்ததுண்டா?

அதனுடன், அந்த விலையுயர்ந்த பொருளை பயன்படுத்த, பயமும் அதிகரிக்கும். கீழே போட்டு விட கூடாது. 

ஏதேனும் பழுதும் ஆகி விட கூடாது, அதனை சில நாட்கள் கண்ணும் கருத்துமாக கவனிப்போம்.

எத்தனை நாட்கள் வரையென்றால் முதலில் கீழே விழுந்து சிறிது உரசல் ஏதாவது படும் வரை, அந்த முதல் உரசலில் உயிரே போகும் அவ்வளவு வேதனையும் அடையும் மனது.

உண்மையில் அது உங்களின் நேசங்களுக்கு உள்ளாகியிருக்கும் என்று நம்புகிறீர்களா?

பொருமை இன்னும் சிறிது நாட்களில், அதனை எப்பொழுதும் மெதுவாக வைக்கும் நாம் நின்று கொண்டே தூக்கி எறிய முற்படுவோம்!!ம்ம்ம்...

அது வரை யார் யார் கேட்டும் கொடுக்காத நாம் அதன் பின் யார் கேட்டாலும் அதோ கிடக்கிறது என்று உதாசினபடுத்துவோம்.

இப்போது யோசித்து பாருங்கள் அந்த ஒன்றை வாங்க நீங்கள் எவ்வளவு கடின பட்டீர்கள் என்று.

ஆம்!! இவ்வளவு தான் காலமும், பணமும் விரையமானது.

அதுவும் அது வாங்கிய அன்றே நம் துர்துஷ்ட்ட வசத்தால் விழுந்து நொருங்கியிருந்தால்?

பேராசை பெரும் நஷ்டம் தான்!!

முதலில் நாம் நம்முடைய வருமானம் என்ன ?
என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்.

நம்முடைய கடன் எவ்வளவு, மாதம் தோரும் கடன் மற்றும் வீட்டு செலவுகள் போக நம்மிடம் ஒரு ஆயிரம் ரூபாயாவது இருக்கும்மாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நான் கூறுவது அன்றாடம் அத்தியாவசிய செலவுகளுக்கே கடின படுவோருக்கு!!

இதனிடையில் நம்மை அறியாது ஏதாவது வாங்கவேண்டும் என்ற ஆசை வரும் போது, உங்கள் சிந்தனையை சிறிது மாற்றிவிடுங்கள்
இல்லையேல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாகிவிடும்.

நீங்களும் அதனை நிச்சயம் வாங்கிவிடுவீர்கள் ஏனென்றால் உங்கள் எண்ணத்தின் வலிமை அப்படி.

அது இப்போது கிடைக்கும் தவணை முறையில் வாங்கி இன்னமும் கடனை அதிக படுத்தியிருப்போம்..

இன்றைய காலத்தில் நடுத்தர குடும்பத்தில் ஆசை கொள்ளும் அனைவருக்கும் தவணை முறை என்பது பேருதவி செய்கின்றது என்பதில் மாற்றம் இல்லை.

இருந்தும் நம்மை கடன் காரனாகவே வைத்திருக்கின்றது.

அது மட்டும் அல்லாது உங்களுடையை ஆசை நிரந்தரமற்றது நாளுக்கு நாள் மாறும், 

இடத்திற்க்கு இடம் மாறும்! அய்யோ பாவம் நீங்கள் ஏதாவது ஒன்றை கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும் போது இந்த மனம் செய்யும் வேலையை கவனீத்திர்களா?

நீங்கள் உண்ணும் உணவில் ஆசை வரும் நாளை இதை சாப்பிட வேண்டும் அல்லது கடையில் சென்று மதிய உணவு உண்ண வேண்டும் என்று, ஒரு நிலையில்லா பணவிரயம் செய்ய உங்கள் மனம் துடி துடிக்கும்!!

ஆசைகளை வலுகட்டாயமாக கட்டு படுத்த வேண்டாம், இருந்தும் நல்லதொரு ஆலோசனை எடுங்கள். யாருடைய ஆசைக்கும் உங்களை நீங்கள் பலி செய்யாதீர்கள் அந்த துயரம் மிக கொடுமை.

நான் நிறையபேரை பார்த்ததுண்டு.

அதனால் வாழ்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொன்று சொல்லி செல்வார்கள், 

அந்த வார்த்தைகளை கேட்டு உத்வேகம் அடையும் நிலையில் நாம் இல்லை என்பதை உணருங்கள். 

உங்கள் திறமையை முழுக்க முழுக்க நம்புங்கள்.

செய்யும் வேலையில் முழு ஈடுபாடோடு இருங்கள்.

கடன் வாங்குவதை விட்டு விடுங்கள், 

அதவாது ஆசைக்காக கடன் வாங்குவதை விட்டு விடுங்கள், தவணை முறை பொருள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

இருப்பதை சிறிது சேமியுங்கள், மீதத்தை கொண்டு வாழ்வை வாழுங்கள்.

 உங்கள் உழைப்பில் முழு கவனம் செலுத்துங்கள், அதுவே உயர்வு தரும்.

ஆசை நிரந்தரம் அல்ல, தொழில் தான் நிறந்தரம், பொருள் மீது வரும் ஆசையை,
பதவி மீது வையுங்கள் அதற்க்காக கஷ்ட்ட படுங்கள் பொருள்( பணம் ) தானாக உங்களை தேடி வரும்...

பணத்திற்க்கு காந்த சக்தி உண்டு என்பார்கள் அது முற்றிலும் உண்மை.

ஆனால், நாம் அதனை ஈர்க்கிறோமா? இல்லை நம்மை அது ஈர்க்கிரதா என்பதில் தான் உள்ளது நமது 🏆 வெற்றி...

வாழ்வோம் வளமுடன்

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...