உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
அருகில் வந்த கமலா மனதில்
கொண்டுள்ள பொராமை தெறியாது
தளர்ந்த குரலினில்
பார்வதி உன்னோட வீட்டு காரர்
வடக்கு வீதியில நடக்க முடியாம
தள்ளாடி கீழே விழுந்து கிடக்கு
ரவி அண்ணா தூக்கி பாத்தாங்க
அவராலயும் தூக்க முடியாம
பக்கத்துல நின்னுட்டு இருக்கு நீ முருகு அண்ணாவ கூட்டிட்டு போ என்றாள்.
செய்வதறியாது தவித்து போன
பார்வதி வயிற்றில் ஏழு மாத
சிசுவையும் சுமந்து கொண்டு
ஓட முடியாமல் நடக்கவும் முடியாது
அவள் மனதினில் கமலா கூறிய
அந்த செய்தி அவள் கனவு, ஆசை, பசி அத்தனையையும்,
கடந்து பெரும் சூரைகாற்று தனது
வாழ்வை சூறையடித்து சென்றதான
பெரும் வலி அவள் மனதிற்குள்
அந்த கனம் அவள் பட்ட வேதனை
ஆள் அற்ற காட்டிற்க்குள் தன் கை குழந்தையை தவிக்க விட்ட தாயை ஒத்திருந்தது.
முருகு அண்ணா என வாசலில்
நின்றபடி பார்வதி அழைக்க....
யாருமா என்று வீட்டினுள் நடந்த
படியே முருகு கேட்க......
அண்ணா நான் தான் பார்வதி...
Comments
Post a Comment
நன்றி