உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
கனவுக்குள் புகுந்து விட்ட
கற்பனை ஒன்று தான்
கொண்டு யிருந்த வர்ணம்
மாறது நிலைத்துக் கொள்ள
பெரும் போரட்டம் கொள்கிறது!!
காற்றில் கலக்கும் வாசம் கூட
வேசம் என்று மனதில் மய்யம்
கொண்ட மாயை கதை கதைக்கிறது!!
பறவைகளின் செவிகளுக்கு
இதமான இசைவிருந்தொன்று
நடத்த நரியின் குரல்வளையை
பிடுங்கிவந்தாயிற்று!!
அஸ்தமன சூரியன் தன் கருமஞ்சள்
குருதியினை மேகத்தின் மீதுகொண்ட
பெரும் காதலால் பிரிய மனமின்றி
வானெங்கும் வீசி செல்கிறான்!!
உவமைகள் எல்லாம் உற்று பார்க்க
தமிழேடு கொண்டு காலத்தின் போக்கு
தனில் தமிழின் தொய்வு கண்டு அதன்
எழுச்சி வேண்டி கந்தனும் தவம்
செய்கின்றான்!!
Comments
Post a Comment
நன்றி