உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
ஆசையாக உன்
கன்னங்களைத்
தழுவிட
வந்தேன்..
என் கைகளை
உதரிவிட்டாய்...!
உனக்காக
என்
வார்த்தைகளைச்
சேகரித்தேன்..
உண்டியலை
குப்பையில்
போட்டாய்...!
ஒரு நேரம்
கிரீடம் சூடி
அழகு
பார்த்தாய்...!
மறுநேரம்
மங்கை
என்னை
வெறுப்பு
எனும் மாய
வளையில்
தள்ளி
விட்டாய்...!
வேண்டாம்
என நான்
சொல்லுமுன்
விலகி சென்றாய்...!
கடல் வேண்டாம்
என்று
நண்டு விலகுமோ?
பூ வேண்டாம்
என்று
வண்டு போகுமோ?
நீ மட்டும்
விலகினால்
அதன் அர்த்தம்
என்னவோ?
நான் வேண்டாம்
என்று
நீ முடிவு
செய்தது தானே......
Comments
Post a Comment
நன்றி