உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
பூமி
எங்கும்
வண்ண
வண்ண
மலர்கள்
விரித்து
அதில்
உந்தன்
பாதம் பதிய
ஓர் எல்லையில்
ஆரம்பிக்கும்
உன்
பயணம்....
உன்
பாதங்களை
ஏந்திய
மலர்களின்
நறுமணம்
ஆயிரம்
ஆயிரம்
மடங்கு
கூட......
கடை
கோடியில்
உன்
பாதங்களை
தாங்க
காத்து
கிடக்கும்
மலர்கள்......
நீ
சற்று
தாமதித்தாலும்
மாண்டு
போகும்
அபாயாம்
உண்டு....
வா உடனே
மலர்களோடு
மலர்களாக
நானும்
உன்
வரவை
எண்ணி
காத்து
கிடக்கின்றேன்......
உன்
பாதம்
பதித்து
உனக்காக
ஏங்கும்
மலர்களுக்கு
முக்தி
கொடு.....
Comments
Post a Comment
நன்றி