Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஒரு யோகியின் பிறப்பு (பகுதி ஒன்று) Birth of Yogi (Part 1)

              


 
அந்தமாலை இன்னமும் என் நினைவுகளிலிருந்து நீங்காத வகையில் தினம் தினம் நினைவுகூர்ந்து ரசிக்கிறேன்.

 ஆம் அன்று எனது நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன் நண்பன் என்றதும் எனக்கு நினைவு வருவது அவனுடைய பக்தி தான் ஒருவேளை அதனால் கூட அவன் என் நண்பன் ஆகியிருக்கலாம்!.

 அவனுடைய மனதின் பரிசுத்தம் கண்ட யாருக்கும் அவனை விட்டு விலகிடத் தோன்றாது.. அதில் நானும் முக்கியமான ஒருவன். அவன் எங்களை வரவேற்றான் அவனது மாளிகையினுள்  ஆம் அனைவருக்கும் அவர் அவர் வாழும் வீடு கோவில் அல்லது மாளிகை தானே நானும் எனது மனைவி மற்றும்  என்னுடைய மகன்  சென்றிருந்தோம்.

 வீட்டின் வெளித் தோற்றம்  சொல்வதற்கு ஒன்றும் இல்லை பார்க்கப் பிரமாண்டமாகத் தெரிந்தாலும் முழு வேலைகளும் முடியாத நிலையிலே இருந்தது நாங்கள் சென்றிருந்தது மாலை நேரம் என்பதனால் கோவிலில் பக்தி கானம் இசைத்துக் கொண்டிருந்தது.

 அவன் ஏற்கனவே அவன் ஊர்  கோவிலின் பெருமையைப் பற்றிக் கூறியிருந்தான் என்பதனால் நானும் கோவிலில் பாடல் இசை கேட்டதும் நாம் இன்று கோவிலுக்குப் போகலாமா என்றேன்!?..

 அவனும் நிச்சயமாக நானே அழைத்துச் செல்லலாம் என்று தான் நினைத்திருந்தேன் என்றான் சரி என்று வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்தோம்.

 குவளையில் எடுத்து வந்தான் அவர்களுக்கே வழக்கமான சர்பத்தை...

 நன்னாரி சர்பத்தை சாதாரணமாகக் கூறிவிட முடியாது உண்மையில் நல்ல சுவையான பானம் தான் அது நன்னாரி சர்பத்தைக் குடித்துவிட்டு அங்கிருந்து கோவில் நோக்கி நடந்தோம்.

இருநூறு மீட்டர் இடைவெளி மட்டுமே இருக்கும் கோவிலுக்கும் அவன்வீட்டிற்கும்.

ரம்மியமான மாலைப் பொழுது சுற்றி ரப்பர் மற்றும் தென்னை மரங்கள் 

அந்த மாலைப் பொழுதை ன்னும் மனதில் பத்திரப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல் குருவிகளின் ரீங்காரமும் தான்.

 கோவிலை வந்தடைந்தோம் கோவிலில் அனைவரும் புதிதாக வந்த எங்களைக் கொஞ்சம் வேடிக்கையாகவே பார்த்தனர் அவர்களுக்குள் எதோ முனு முனுத்தும் கொண்டனர், மனிதர்கள் மத்தியில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று இது ஒன்றும் புதிது இல்லையே ?

கோவிலை சுற்றி வந்து கோவினுள் சென்றோம்.

 

பூஜை நடந்து கொண்டிருந்தது அனைவரும் கருவறை திறக்கும்நொடிக்காகவும்  தேவியை தரிசிப்பதற்காகவும் காத்திருந்தனர்

ஆனால் தினம் தினம் நடக்கும் ஒரு செயல் தான் ஆனாலோ தேவியின் அருள் மற்றும் ஒவ்வொரு நாளும் பார்க்க பார்க்க அவள் புது புது அலங்காரத்தில்   கொடுக்கும் தரிசனம் தரும் 

மனநிறைவு உலகத்தின் எந்த எல்லையிலும் இல்லை என்பான் எனது நண்பன்.

  பூசாரி பூஜை முடித்து விட்டு அபிஷேக நீரைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்அவருடைய உடல் பழ பழ வன இருந்தது அவர் மீது ஒரு புதுவித வாசனை இதுவரை நான் எங்கும் இப்படி ஒரு வாசனையை நுகர்ந்தது இல்லை அவரும் நாம்  நினைப்பது  போன்று வயதானவர் இல்லை அவர் மிகவும் குறைந்த வயது தான் இந்த வயதினில் இத்தனை அர்பணிப்பா என்று தோன்றியது நண்பன் கூறும் போது கூட எனக்கு இத்தனை வியப்பை கொடுக்கவில்லை. நேரில் பார்த்தபின்பு இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.

அவரை      பார்க்கும்.    போது.     ஒரு நிம்மதி ஏற்பட்டது மனதினில் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் அவர்...

வெளியில் நின்ற பக்தர்கள் அனைவருக்கும் கொண்டு வந்த அபிஷேக நீரைக் கொடுத்தார், அதில் நானும் ஒருவன் அவருடைய முகம்… இந்த வார்த்தையை நான் கதைகளில் தான் கேட்டிருக்கிறேன் ஆனால் இது உண்மை என்பதை இன்று உணர்கிறேன் ஆம் அதுதான் தெய்வக் கடாட்சியம் பொருந்திய முகம் என்பார்கள் அந்த கடாட்சியத்தை நான் முதல் முதலில் தரிசிக்கிறேன்.

கருவறைக்குள் இருந்து காட்சியளிக்கும் தேவி மனித உடலில் தோன்றினால் எப்படி இருக்குமோ அப்படி உணர்கிறேன் அந்த இளம் வயது பூசாரியை  பார்த்து அவர் நெருங்கும் ஒவ்வொருவரும் அவருடைய அந்த குழந்தை சிரிப்பையும் தங்களுக்குள் பிரசாதமாய் பெற்று கொள்கிறார்கள்.   பின் கருவறைக்குள் சென்றார் அவரை தொடர்ந்து வெளியில் நின்று கொண்டிருந்த கீழ்சாந்தி அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார். ஆனால் கீழ்சாந்தி வயது அறுபதைக் கடந்து இருக்கும் நிச்சயம்.. பிரசாதத்தை  அனைவரும்  பெற்றுக் கொண்டு அனைவரும் கோவிலைச் சுற்றி வலம் வந்து அப்படியே வீடு சென்றனர்.

நானும் எனது நண்பன் மற்றும் மனைவி மகன் என நான்குபேரும் அங்கு ஒரு ஓரமாக இருந்த காலபைரவர் சன்னதியின் அருகில் அமர்ந்தோம் எனக்கு அந்த பூஜாரியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகவே நான் எனது நண்பனிடம் கேட்டேன்..?

நான் கேட்டது தான் தாமதம் அவன் நான் எப்போது கேட்பேன் அந்த கதையை என்று கூற மிகுந்த ஆவலோடு இருந்தான்  !

நண்பன் கூற தொடங்கினான்....

நண்பா அவர் வெறும் பூஜாரி இல்லை அவர் இந்த ஊருக்கு கிடைத்த பொக்கிஷம்  அவர் சாதாரண மனிதர் இல்லை அவர் மனித அவதாரம்...

 

 

தொடரும்........

 

பேரொளியின் கருணைத் துகளில் இருந்து நான்.....

பிரதீஸ்

 

 

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...