வடு

வடு 



காற்றினில் மிதந்து வரும் இலை, 

அது வானுயர்ந்த ஒரு மரத்தினது 

என்றறிந்தவர் உண்டோ ?


ஓடையில் தவழும் மீனுக்கு அதன் 

பிறப்பு காவேரி என்று தெரியுமோ  ?


மண்ணில் நெழியும் புழு

நட்சத்திர மண்டலங்கள் அறியுமோ ?


காட்சிகள் எல்லாம் பிழை என்றானபின் 

வர்ணனைகள் மட்டும் தஞ்சம் கொள்வது 

ஏன் ?


ஒற்றை வார்த்தையால், மொத்த வாழ்வையும் 

கலகமாக்கிய நீ; இன்று வார்த்தைகளுக்கு வர்ணம் 

பூசி செல்கிறாய் !!


இடி விழுந்த ஆற்றின் வலியை யாரும் 

அறிந்திட மாட்டார்கள் !!


கடந்து சென்றே பழக்கப்பட்ட ஆற்று  நீருக்கு 

பாரமென்ன ? பாவமென்ன ? பழிதான் என்ன?


அத்தனையும் வடுவாய்; அக நீரோட்டத்தில்,

யாரும் காணாத அதன் மறுபக்கம் 



பேரொளியின் கருணை துகளில் இருந்து நான் 

பிரதீஸ் 




Post a Comment

0 Comments