உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
வெற்றிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை தோண்டி எடுங்கள்!!
அங்கே வாழ்வு முழுவதும் தோற்றவன் சரித்திரம் பொறிக்கப்படட்டும்!!
அவனுடைய போரட்டங்களும் அவனுடைய தியாகங்களும் செதுக்கபடட்டும்!!
நாயகன் தோற்ற கதை ஒன்று உலகுக்கு கூறுங்கள்!!
யாருக்காக போரிட்டானோ ? அந்த மக்களே அவனை எதிர்க்கும் நிலைக்கு மாற்றிய
நயவஞ்சகர்களின் குரவளைகளை கடித்து எறியுங்கள்...!!
நாட்டின் பல இரத்த சரித்திரங்களை சுய லாபத்திற்காக மாற்றிய துரோகிகளை சிற்றெரும்புகளுக்கு இறையாக்குங்கள் !!
புரியட்டும் வீரனின் வலிகள், அவனும்
உணரட்டும் தியாகத்தின் கனிவை!!
போருக்கு சென்றவன் எல்லாம் வீரன் இல்லை!!
வெற்றி பெற்றவன் எல்லாம் மன்னன் இல்லை!!
மகுடம் பறிக்க பல சூழ்ச்சி செய்து, போர் வரம்புகளை மீறிய நாசக் காரர்களை பாழடைந்த கிணற்றினில் பாதி தூரத்தில் தொங்க விடுங்கள்!!
சூழ்சியின் இழப்பு புரியட்டும் அவனுக்கு
துரோகத்தின் அலரல் சத்தம் கேட்கட்டும் அவனுக்கு!!
விதிகளை உருவாக்கியவனுக்கு விதிகள் இல்லை!!
வலிகளை ஏற்பவனுக்கு ஆயிரம் விதிகள்!!
வஞ்சம் கொண்ட நீங்கள் மண்புழுக்களுக்கு வர்ணம் தீட்டுவதனால் அதன் தன்மை மாறிவிடாது ஒரு போதும்...
பட்டினியின் பாசை பெரும் இறைச்சலாக உங்கள் காதுகளை கிழிக்கத் தான் போகிறது...
வேள்வியால் நிலை பெற்ற மானுட தர்மம் இன்று
ஆசையால் அழிந்து கொண்டிருக்கின்றது...!
அரக்கர்களிடம் அன்பை எதிர்பார்பதும், கொடிய நாகத்திடம் கருணையை எதிர் நோக்குவதுமே மானுட இயற்கையானது !!
இப்படிக்கு
காலம்..
பேரொளியின் கருணை துகளில் இருந்து
நான்:
Comments
Post a Comment
நன்றி