Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஒரு யோகியின் பிறப்பு ( பகுதி நான்கு ) Birth of Yogi ( Part 4 )


ஏதோ கூடு விட்டு கூடு பாய்ந்த உணர்வு திடீரென நினைவு திரும்பியது வீட்டின் திண்ணையில் நன்கு உரங்கிவிட்டேன் நேரம் பத்து கடந்திருந்தது.

பூச்சிகளின் இரைச்சல் இதமானது மனதிற்க்கு, காரிருள் சூழ்ந்திருக்க மின்மினி பூச்சிகள் ஊரை அலங்கரித்து இருந்தது...

கஸ்தூரி அம்மா எங்க போனா ? இவ்வளவு நேரம் ஆகியும் காணலயே!! தம்பிக்கு போன் பண்ணி கேளு என்றேன் ? நான் தான் சொன்னேனே என்றாள்  அவள்!! 

எனக்கு விளங்கவில்லை!! 

எப்போது சொன்னாள் என்ற அககேள்வியுடன்! என்ன சொன்ன என்று கேட்டது தான் தாமதம்? 

இடியுடன் கூடிய மழையென சட்டன பொழிந்தாள்...

கொஞ்சம் வீட்டு ஞாபகத்தில் இருங்க சாமியாரு எங்கேயும் போய்ட மாட்டாரு...

எப்பவும் அவர பத்தியே பேசிட்டு...!!

இப்போம் ஏ கத்துற ? 

நான் என்ன வீட்ட கவனிக்கலனு சொல்லுறியா?

வீட்டை கவனிக்க சொல்லல போசுரத கொஞ்சம் காது கொடுத்து கெளுங்கணு தான் சொல்லுறே...

நான் என்ன கேக்கல? நீ சொல்லி...!! 

ம்....திரும்பவும் சொல்லுறேன் கேட்டுகோங்க.!!

அத்தை உங்க தம்பி வீட்டுல தான் இருக்காங்க. கிழக்க பானுவோட தங்கச்சி புருஷன் காஷ்மீர் எல்லையில் டுடீல நிக்கும் போது பனி சருக்கில் சிக்கி இறந்துட்டாராம்....

பாடி இன்னும் கிடைக்கலையா அதுக்காக தான் எல்லாரும் அங்க காவல் இருக்காங்க என்றாள் கஸ்தூரி. 

அவரு மட்டும் தான் டூடில இருந்தாரா என்று கேட்டேன்? 

அவரு மட்டும் எப்படிங்க நிப்பாரு அது என்ன அவரு வீட்டு வேலையா? 

கூட நின்னவங்கள்ல இரண்டு பேரு மட்டும் தான் தப்பிச்சிருக்காங்க மீதமுள்ள எட்டு பேரு பனி சருக்கில் மாட்டிருக்காங்க...

அதுல ஆறுபேர் உடல் கிடைச்சிருக்குது. பானு தங்கச்சி புருஷன் பாடியும், அப்புறம் உத்திரப்பிரதேசத்தில் இருந்து இன்னொருத்தர் பாடியும் இன்னும் கிடைக்கலையாம்.

இதை தான் அறை மணி நேரத்திற்கு முன்பே கூறினேன் என்று...

சோகம் கலந்த சலிப்போடு கூறிவிட்டு நீங்க ஒங்க தம்பிக்கு போன் போட்டு கேளுங்க என்று நான் சொன்ன வேலையை எனக்கே சாதுர்யமாக கொடுத்து விட்டு கனவுலகில் தனது சமையல் வல்லமையை காட்ட சென்று விட்டாள்...

செய்திகள் எப்படி எப்படி வந்து சேருகின்றன ?

என்னுடன் தான் இவ்வளவு நேரம் இருந்தாள் எப்படி அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறாள் என்பது ஆச்சர்யம் இல்லை ஏனென்றால் செய்திகளை அறியும் அல்லது தெரியப்படுத்தும் வேகத்தில் ஊரில் பெண்களை மிஞ்ச யாரும் உண்டோ ?!! 

என் மனம் முழுவதும் இன்னமும் அந்த இளம் வயது யோகியின் அந்த தெய்வீக முகம், உடல், அந்த புன்னகை என நினைக்க நினைக்க உடல் புல்லரித்தது கொண்டிருந்தது.

உண்மையில் அது தான் வியப்பு நண்பன் சக்கரை கூறியது எல்லாம் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

சித்தர்களையும் ஞானிகளையும் தேடி தேடி அலையும் மாந்தருக்கு அவர்கள் அறிவுரைகள் ஏற்க்க உடன்பாடில்லை.

ஆனால் பிராத்தனைகள் நடைபெற வேண்டும். தேவைகள் பூர்த்தியாகிட வேண்டும். தனக்கு தேவையான எல்லாம் கிடைத்திட வேண்டும்...

அப்படி நடந்தால் அவர்கள் கொண்டாட படுகிறார்கள். 

இல்லையென்றால் அவருக்கு புத்திசுவாதினம் இல்லாதவர், பிச்சைக்காரன் என ஏதேனும் பட்டம் கட்டிட கூடும்...

உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்பாவர்களும் உண்டு...

ஆனால் அங்கு சென்றால் அசைவம் சாப்பிட கூடாது, மது அருந்த கூடாது!! என்று தனக்கு தானே யாரோ ஒருவரின் கேள்வியை தனக்குள் பதிலாக்கி கொண்டு குழம்பி நிற்கின்றனர்.

எல்லாம் குழப்பம் தானே ! குழம்பிய குட்டையே தெளிகிறது.

தேவைகளை பொறுத்து தன்னை மாற்றிக் கொள்வார்கள்... மனிதர்கள்.

இப்படியாக எண்ணங்கள் ஒரு புறம் என்னை சிறை பிடிக்க, சரி... தம்பி வீடு வரை சென்று வருவோம் என்று எண்ணி நான் அங்கு புறபட்றேன். 

மகனாரும் நன்கு உரங்கிவிட்டான். உரங்கடும் காலை பள்ளி செல்ல வேண்டுமே!!

தெரு நெடுவே அங்கும் இங்குமாக நான்கு மூன்று பேர் கூடிய கூட்டங்களாக நின்று கொண்டு அந்த இராணுவ வீரனின் உடன் அவர்களுக்கு நடந்த அனுபவங்களையும் அவர் செய்த செயல்களையும் ஒருவருக்கு ஒருவர் அசைபோட்டு கொண்டிருந்தனர்...

இன்னொரு புரம் அதறக்கு முன்பாக நடந்த இராணவ வீரர் மரணம், அரசியல் நிலைபாடு, என வரலாற்று விவாதம் தலையோங்கியிருந்தது சாராய கலவையுடன்...

பானுவின் கணவன் பெயர் சேக் அப்துல்லா ஊரில் அனைவரும் அப்துல் என்று கூறுவார்கள் இளம் வயது திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது....

நாம் நட்டு வளர்த்த மரம் நம் கண்முன்னே வீழ்ந்தால் எங்கனம் ஏற்று கொள்ள முடியும்?

ஒரு பெண் குழந்தைக்கு தந்தை அவன். காலம் போடும் கணக்கிற்கு அதன் விடை இப்படியும் இருக்கத்தான் செய்கிறது...!!

யார் வாழ்வும் விதிவிலக்கல்ல...

தம்பி... வீட்டின் முன் வாசல் நிறைந்து காணப்பட்ட கூட்டம் அங்கிருந்து சர சரவென கலைந்தது சிற்றெரும்புகளாக... 

தெருக்களில் தம்பி வீட்டில் மட்டுமே அந்த தொலைக்காட்சி இருந்தது என்பதனால் அனைவரும் அங்கு கூடி நின்று செய்தியை பார்த்து சென்றிருந்தனர்...

இரவு பத்து மணி செய்தி அது அதன் பின் காலை ஆறு மணி செய்தி வரை காத்திருக்க வேண்டும்.

இடை இடையே ஊரிலிருந்து இராணுவத்தில் அதே எல்லையில் பணிபுரியும் வேலன் இருந்தது நல்லதாக இருந்து.

அவனுடைய தொலைபேசி அழைப்பும் நிலவரங்களை விளக்கிக் கொண்டு இருந்தது.

நான் அந்த கூட்டத்தில் ஊடே புகுந்து அம்மாவை தேடினேன்...

அம்மா.....!!

நான் தம்பியிடம் அம்மா எங்கே என்று கேட்க? அம்மா தூங்கிட்டானே  என்றான். !!

நான் இப்போம் தூங்கியிருக்க மாட்டாளே என்று எனக்குள் முன் முனுத்துக் கொண்டேன்..

அப்படியே தொடர்ந்தேன்...

சரி டா என்ன சொன்னாங்க  நியூஸ் ல  தெரிந்ததா? என்று கேட்டேன் ?

இன்னும் இல்லை அண்ணா...!!

அங்கு சரிந்து விழுந்த பனியின் அளவு சுமார் எண்ணூற டன் அளவு அதனை அப்புறப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறதாம்...

மேலும் மேலும் நிலவரம் மோசமா உள்ளதாக தான் சொல்கிறார்கள்..

கிடைத்து விடும் என்றான்...

செய்தியில் சிதறிய துண்டு தான் அவன் கூரியது...

நானும் தம்பியும் பேசி கொண்டிருந்த அந்த நேரத்தில் கதவை திறக்கும் சத்தம் கேட்டது இருவரும் ஒருசேர திரும்பிப் பார்த்தோம் அது அம்மா...

நாங்கள் பேசிய சத்தம் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை நிச்சயம் அறையின் கட்டமைப்பு அப்படி.

அம்மா வந்துட்டியா டா... நீ...!!  உன்னோட குரல் கேட்டுச்சி என்றாள்..!

அம்மா நீ இன்னும் தூங்கலியா? என்றான் தம்பி

தூக்கம் வரல டா... வயசானாலே இது தான் பிரச்சனை..

சரி போவோமா என்றாள் ? என்னிடம்!! அம்மா.

நான் பதில் சொல்லும் முன்பு தம்பி முந்திகொண்டான்... 

சற்று அதிகார அக்கறையுடன்... இப்போம் எங்க போர நீ எங்கயும் போக வேண்டாம் காலைல கொண்டு விடுரேன் என்றான்!

அட போடா அண்ணா வீடு என்ன அமெரிக்காவுலயா இருக்குது...

மூனாவது தெரு தானே...

காலார அப்படியே நடந்து போரோம் டா...நீ போய் தூங்கு காலைல பாடி வந்துச்சினா எல்லா இடமும் அலய வேண்டியிருக்கும்...என்றாள்!!

அது காலைல வராது எப்படியும் ஒரு நாள் மேலே -யே ஆகிரும் நீ இரு என்றான் தம்பி அம்மாவிடம்.

போய்ட்டு காலைல வரேன் டா...பசங்க தான் தூங்கிட்டாங்கல என்று என்னுடைய கண்ணாடியை வேறு வைத்துவிட்டு வந்துவிட்டேன் டா தலைலா பாரமா இருக்குது என்று சற்று சமாலிக்க தம்பி புரிந்து கொண்டான்.

சரி பாத்து போங்க என்றான்....

சரி நான் கிழம்புரேன் என்று தம்பியிடம் கூறி நகர்ந்தேன் அவன் கோவம் போகவில்லை...

ஏனென்றால் அம்மா அங்கு இவ்வளவு நேரம் இருந்தது இதுவே முதல் முறை....

அம்மாவிற்கு தம்பி என்றால் கொள்ளை பிரியம் தான் அவனுக்கும் அப்படி தான், அவன் திருமணம் முடிந்த பின்பு எல்லாம் சிறிது சிறிதாக மாறியது எதையும் முன்பு போல வெளிப்படையாக பேசுவது இல்லை...

தம்பி குழந்தைகள் பிறந்த பின்பு அது இன்னும் சிறிது விரிசல் ஏற்பட்டது...எந்த ஒரு பிசகலும் இல்லை இருந்து மனதளவில் அம்மாவிற்க்கு ஏதோ அங்கு ஒத்து போக வில்லை என்பது தான் உண்மை.

அம்மா என்னிடம் கேட்டாள்?

ஏன் டா இவ்வளவு நேரம்? நீ வருவேன்னு எவ்வளவு நேரமா இருக்கேன் என்றாள் !!

அப்படியே தொடர்ந்தாள்.... இன்னைக்கு வீட்டுக்கு ஒரு ரா-பாட்டாளி வந்தான் ரவி. பார்க்கவே பயமா இருந்திச்சி டா... கரு கருனு  கண்ணு ரெண்டும் சுரா மீன் கண்ணு மாதிரி, எந்த ஊரு காரணு தெரியல பேச்ச வச்சி பார்த்த மதுர பக்கமா இருக்கும்.

மஞ்சள், காவி என இரண்டு கலர் துண்டு தலைல கட்டிருந்தா...

கையில் வச்சிருந்த உடுக்க சத்ததோட சங்கு ஊதி நல்ல காலம் பிறக்குதுனு சுடலை வாக்கு சொல்லிர கனத்த குரலோட வந்தான். இன்னைக்கு ஊருகுள்ள புள்ளா அவனோட பேச்சி தான்..

என்னோட வாழ்நாள்ள இப்படி ஒரு ரா-பாட்டாளிய நான் பார்த்தது இல்லைடா...ரவி என்றாள் அம்மா.

சரி ஏதோ குழப்பிவிட்டான் அம்மா பிள்ளைகளுக்கு தும்மல் வந்தாலே ஜோதிடம் பார்த்து, பரிகாரம் தேடுவாள்... என்ன சொன்னானோ தெரியவில்லையே என்று என் மனம் பட படத்து !!

உனக்கு வேற வேலையே இல்லைமா நீ எதாவது யோசிட்டு இருக்காத என்றேன்.

நெற்றியடியாக சொல்லுரத கேளுடா எரும என்றாள் செல்லத்தோடு எனது வயதை மறந்து அம்மா கைபிடித்து நடந்திருந்தேன் அந்த இரவின் சாம்ராஜ்யத்தில்...

சரி சொல்லு...என்றேன் வேறு என்ன செய்ய?

அம்மா தொடர்ந்தாள்....

உங்களுக்கு மூன்று பிள்ளைகள் அதில் ஒன்று முப்பத்தாறு வருடங்களாக காவலாகி நிற்கிறது.


யோகி வருவார்...


Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...