உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
ஒரு மாதுழை செடி நன்றாக பூத்திருந்தது
காண்போர்கள் கண்ணை கவரும் விதமாக இருந்தது...
அதன் அழகை அனைவரும் ரசித்து சென்றனர்
அதர்க்கு காரணம் யாரும் இல்லை தனிமையில் வளர்ந்த அந்த செடி தன்னை தானே வருத்தி தன் வேர்களை பலபடுத்தியிருந்தது...
அந்த செடி இன்று இந்த அளவு வளர்ச்சியடைய நான் தான் காரணம் என்று வேறு யாரும் கூறிவிட முடியாது...
அனைவரும் ஆச்சர்ய பட்ட நேரம் ஒருவன் மட்டும் அதன் அருகில் சென்று...உன்னால் இன்னமும் பூக்க முடியும் உன்னை நான் நம்புகிறேன் என்றான்...
அந்த வார்த்தையில் அந்த செடி அகம் மகிழ்ந்து இன்னும் அதிகமாக பூத்தது தனது கிளைகளின் சக்தியை மீறி...
மீண்டும் வந்த அவன் ஏன் இப்படி ஆகி விட்டாய் !!?
நீ முன்பு இருந்தது தான் அழகு இலைகளுக்கு இடையே பூக்கள் தெரிந்த போது தான் நன்றாக இருந்தாய் இப்போது பார்க்க அவ்வளவு தோரணையாக இல்லை உனது கிளைகள் பலம் இழந்து தொய்ந்து விட்டது நீ அந்த பூக்களை மட்டும் உதிர்த்து விடு என்றான்...
மனம் நொந்த அந்த செடியின் ஒவ்வொரு பூக்களுமே வாடி விழ துவங்கி விட்டன...
அப்போது தான் அந்த செடிக்கு புரிந்தது நிலையில்லாதவர்களின் பேச்சிக்கு நாம் செவி சாய்க்க தேவையில்லை !!??
தேவைக்கும் காரியங்களுக்கும் தகுந்தார் போல வார்த்தைகள் நிலையில்லாமல் மாறும் என்றால் அங்கு எதுவும் நிலையில்லாமல் தான் போகும்...
யான் பேரொளியின்
-பிரதீஸ்
Comments
Post a Comment
நன்றி