Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

நாம் நாமாக நம் வாழ்வை வாழ்வது மட்டுமே நாம் நமக்கு செய்யும் நற்செயல்.


 இப்படி தான் கூற வேண்டியிருக்கும், காலம் அதன் போக்கில் நம்மை எப்படி அழைத்துச் செல்கிறதோ! அப்படியே அதன் வேகத்தில் நாமும் பயணப்படுதல் உத்தமம். சில காலம் தவித்து இருந்து இருப்போம் அதன் பொருட்டு முடியும் வரை காலம் அல்ல நாம், நம் பயணம் முடியும் வரை இப்படித்தான் இருக்கும் என்று கூறி விட முடியாது எதார்த்தம் என்னவென்றால் இந்த வாழ்வு நம்மால் தீர்மானிக்கப் பட்டது தான், அதை புரிய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்பதனை விளங்கிக் கொள்ள சில அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது, அதனை நாம் ஈர்புடையதாக இல்லாத ஒன்றாக எண்ணி அங்கிருந்து, அதிலிருந்து விலகி இருக்கவே முற்படுகிறோம்.


பொதுவாக அறிந்தவர்கள் எப்படி இவற்றை தெரிந்து கொண்டார்கள் என்ற நோக்கில் அவருடைய இன்றைய நிலையை கருத்தில் கொண்டு மனித மனம் ஒரு பிரமிப்பிர்க்குள் அகபட்டு குறுக்கு வழி தேடி அலைகிறது ஒன்றை மட்டும் அது புரிந்து கொள்ள எந்த காலமும் மறுக்கிறது.

முயற்சியும் முறையான பயிற்சியும் இல்லாமல் எந்த ஒன்றையும் அடைய முடியாது என்பது தான் உண்மை. முதலில் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ளும் இடத்திலேயே தோர்த்து விடுகிறோம். பக்குவம் என்பார்கள் அனுபவசாலிகள் அது அடிபட்டு, அடிபட்டு தான் வரும் வாழ்வில் அதிகம் பேசாமல் கவனிக்க கற்றுக் கொள்ளும் அறிவு மிகவும் முக்கியம்.

வாய்க்கு வந்ததை பட, பட என கொட்டி தீர்த்து விட்டு வார்த்தைகள் அற்று திக்கி தடுமாறி நிற்கும் நிலையில் தான் நாம் உள்ளோம். எங்கிருந்து அனுபவங்களை கிரகிக்க முடியும் என்று கேட்பதை விட அனுபவம் என்பது அனுபவிப்பது என்ற புரிதல் முக்கியம். அனைவருக்கும் அறிவுரை வழங்கும் எவரும் அவர்களுடைய தனிப்பட்ட செயல்களில் அவற்றையும் அதன் யுக்திகளையும் பயன்படுத்த தவரியிருப்பார்கள். அது ஏனென்றால் அதன் முன் அவர்களுக்கு அதை பற்றிய அனுபவம் இருந்திருக்காது.

ஒவ்வொரு நாளும் கற்றல் என்ற ஒன்றை நினைவில் கொண்டு பலதரபட்ட நிலைகளில் மனதை அலைய, அசைய விடாமல் ஒன்றை பிடித்துக் கொண்டு அதனை பலவழிகளில் சிந்திப்பது தான் முன்னேற்றம். நமக்கு பிடித்த ஒன்று நமக்கு வருமானம் ஈட்டி தருவதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பது முட்டாள் தனம். விருப்பம் இல்லாத பணியாக இருந்த போதும் அதனை விரும்பி செய்யும் எண்ணம் ஒன்றை நாம் தான் நிலை பெற செய்ய வேண்டும். விருப்பம் இல்லாத ஒன்றை எப்படி இந்த மனதை விரும்பச் செய்வது ? என்ற கேள்விக்கு நீங்கள் தான் பதில் !

நமக்கு பிடித்த ஒன்று என்ற ஒரு குறிபிட்ட செயலை நீங்கள் எப்படி தீர்மானித்தீர்கள் ? அது ஏதோ நண்பர்கள் மூலம், அல்லது இன்றைய இணைய வழி அதற்க்கு பல வழிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. என்றாலும் நம்மில் பலர் தேர்தெடுக்கும் ஒரு செயல் என்பது அதில் நமக்கு முன் ஒருவர் பெற்ற வெற்றியின் அடிப்படை தான். ஒருவரின் வெற்றி அவர் துறையில் பலரை ஈர்க்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி எந்த ஒரு சாதாரண மனிதனின் கற்பனையும் ஒரு சாதனையாளனை தன் மனதில் நிறுத்திக் கொள்ளும் அவர் வழி செல்ல ஈர்க்கும் நாம் அது தான் நமக்கு பிடித்த செயல் அல்லது துறை என்று சில நேரங்களில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.

பணத்தின் அடிப்படையில் தான் அனைவரும் நகர்கிறோம் என்ற போது நமக்கு விருப்பமான ஒன்று இன்னொருவர் மூலம் தான் நம்முள் பிரதிபலிக்க செய்கிறது என்பதில் மாற்றம் இல்லை. இதில் நாம் பிடித்த ஒன்று என்று கூற பல இருக்கும் இன்னும் காலங்களில் பலவற்றால் ஈர்க்கப் படுவோம் மனம் அப்படித்தான் அதானால் பொருளாதார ரீதியாக நம்மை எது உயர்த்துகிறதோ அதனை நமக்கு பிடித்த ஒன்றாக மாற்றி கொள்வதில் மனிதனுக்கு எந்த சிரமும் இல்லை எனலாம். ஏனென்றால் நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே நம் மனதை கிடைப்பதற்கு ஏற்றார் போல் மாற்றி, மாற்றி தான் பழக்கப் படுத்திக் கொண்டு வந்துள்ளோம். நினைத்த ஒன்று கிடைக்காத ஒவ்வொரு வேளையும் கிடைத்த ஒன்றின் மேல் நம் விருப்பத்தை மாற்றி கொள்கிறோம்.

இது நமக்கு மிகவும் எளிதானதும் கூட அப்படியே தற்போது எந்த நிறுவனத்தின் கிழ் அல்லது எந்த வேலை செய்கிறோமோ அதனை ரசிக்க துவங்குவது தான் முதல் படி. ரசனை அதிகமாக அதிகமாக அதனை பற்றிய கேள்விகள் அதிகமாகும் அதனை பற்றிய சிந்தனை அதிகமாகும் போது நிறைய கற்றுக் கொள்வோம் நிறைய மாற்றம் செய்வோம், மாறும். படி, படியாக ஒவ்வொன்றாக மாறும் போது நாம் ஒரு விழிப்புநிலை அடைவதாக தோன்றும் அதன் வழியே கிடைக்கும் நிம்மதியும் அளப்பரியது. நம்மால் நல்ல முறையில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும் ஒரு செயலை செய்தாக வேண்டும் அதே சமயம் அதற்கான பொருட் செலவை எப்படி குறைக்கலாம் என்பதனை இந்திய அறிவியலாளர்கள் செய்த சாதனைகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ரசிக்க துவங்குங்கள் செய்யும் வேலையை வாழ்கையை அனைத்தையும் நாம் செய்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து வெளி வருவது இன்னும் பல செயல்களை செய்யத் தூண்டும்.

நாம் பார்க்கும் அனைத்து மனிதர்களுக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மை முழுக்க முழுக்க நடிகனாக மட்டுமே மாற்றும் நம்மை நாம் ரசிக்க வேண்டுமென்றால் உலக பிம்பத்தை முதலில் உடைத்தெரிய வேண்டும். நாம் நாமாக நம் வாழ்வை வாழ்வது மட்டுமே நாம் நமக்கு செய்யும் நற்செயல்.

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...