உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
தனி வீடு வேண்டும் என்று கூறும் சமூகம்
அதற்கு தேவையான நிதி உதவி செய்வதில்லை
வீடு தேடி வரும் உறவுகளை அன்பு கொண்டு
உபசரிக்க அதற்கு கைமாறாக அவர்கள்
கொடுத்துச் செல்லும் ஆதரவற்ற ஆலோசனை
நச்சு பாம்பை விட கொடிய விசமான ஒன்றாக உள்ளது
தடுமாறும் குடும்ப பொருளாதாரத்தின் ஊடே செலவுகளுக்கு வர்ணம் அடித்து செல்கின்றனர்
யாருக்காக நாம் வாழ வேண்டும் என்ற கேள்வி
காலம் முழுவதும் கழுத்தை சுற்றிக் கொண்டு வருகிறது
வீடு தேடி வரும் சொந்தங்கள் நம்மை நலம் விசாரிக்க
வந்ததில்லை இங்கறிந்து ஊருக்கு உபதேசிக்க
உங்கள் நிம்மதி தொலைய வேண்டுமா ?
உறவுகளை அழைத்து உபசரியுங்கள்,
பதிலுக்கு அவர்கள் கொடுத்துச் செல்வார்கள் !

Comments
Post a Comment
நன்றி