உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
சோம்பல் இன்றைய
முந்தைய தலைமுறையினர் கொஞ்சம் கஷ்டப்பட்டனர் நமது தாய் தந்தையர் உணவிற்கு அல்லல் பட்டனர். ஒரு விதத்தில் பார்த்தால் நம்முடைய இந்த சோம்பேறித் தனத்திற்கு அவர்கள் ஒரு காரணம், நான் ஒரு வேளை உணவிற்கு மிகவும் சிரமப்பட்டேன் நம் பிள்ளைகள் அந்த கஷ்டம் படக் கூடாது என்று அதிக அன்பு விதைத்து ஊர் சுற்ற முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்கள்
எது எப்படியோ! போராடாமல் எதுவும் கிடைத்து விடாது. நன்றாக உழைக்கும் ஒருவனுக்கு, உழைத்த ஒருவனுக்கு இறைவன் உயர்ந்த பதவி ஒன்று கொடுக்கிறான், அங்கு அவனின் பணியும் சேர்ந்தால் முழுமை பேரும் உடன் இருப்போருக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் ஆனால்! அவன் அவனது சோம்பேறித் தனத்தினால் குளிரூட்டப் பட்ட அறையினுள் அமர்ந்து கொண்டு நாட்களைக் கடத்துகிறான். நான் முந்தைய காலங்களில் கஸ்ட்ட பட்டதனால் இறைவன் கொடுத்தது என்று பிதற்றிக் கொள்கிறான்.
காலம் என்றும் ஒரே நேர்கோட்டில் யாருடைய வாழ்வையும் பயணிக்கச் செய்வதில்லை. இடை இடையே மேடு பள்ளம் இல்லையென்றால் நல்லது கெட்டது அசை போடும் பக்குவம் இருக்காது மனிதனுக்கு. ஆகையால் விதிக்கப் பட்ட விதி எங்கனம் இருந்தாலும் அமைதியாக நம் கடமையை செவ்வனே செய்தோமானால் எதிர் வரும் காலங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமையும்.

👍🏻
ReplyDelete